Tuesday, December 22, 2015

அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடையும் வழிமுறை


தினமும் காலை(4.30 முதல் 6 மணி என்றே இதுவரை எழுதியிருந்தோம்;குளிர்காலம் துவங்கிவிட்டது அல்லவா?ஏப்ரல் 14 வரை 5 முதல் 7 மணி வரை) 15 நிமிடம் அன்னையின் 12 பெயர்களை ஜபிக்க வேண்டும்;

இரவில் அதே போல 15 நிமிடம் அன்னை அரசாலை(வராகி)யின் பெயரை ஜபிக்க வேண்டும்;முதல் 30 நாட்கள் மட்டும் தான் 15 நிமிடம் ஜபிக்க வேண்டும்;

31 வது நாளில் இருந்து 60 வது நாள் வரை தினமும் காலையில் 30 நிமிடமும்;இரவில் 30 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

61 வது நாளில் இருந்து 90 வது நாள் வரை காலையில் 45 நிமிடமும்;இரவில் 45 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

91 வது நாளில் இருந்து (ஜபிக்க ஆரம்பித்த நாளில் இருந்து=கணக்கிற்கு) 3 ஆம் ஆண்டு வரையிலும் தினமும் காலையில் 1 மணி நேரமும்;இரவில் 1 மணி நேரமும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை ஜபித்து வர வேண்டும்;


இப்படி ஜபிக்கத் தேவையான தகுதிகள்:
1.அசைவம்,மது அறவே தவிர்க்க வேண்டும்;மீன்,முட்டை,முட்டை உணவுகள்,புரோட்டா இவைகளும் முழு அசைவமே!
2.வயது 18 நிரம்பியிருக்க வேண்டும்;
3.இந்த மந்திர ஜபத்தை எவ்வளவுக்கு எவ்வளவு ரகசியமாக தினமும் ஜபிக்கிறீர்களோ,அவ்வளவுக்கு அவ்வளவு அளவற்ற நன்மைகள் தங்களைத் தேடி ஓடி வரும்;
4.இந்த மந்திர ஜபத்திற்கு குரு உபதேசம் அவசியம் இல்லை;



அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)

ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைகளே அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்கள்!


அன்னை அரசாலை(வராகி)யே நமது பாரதமாதா என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத ரகசியம்!!!

No comments:

Post a Comment