Thursday, December 17, 2015

உங்களது நீண்ட கால வழக்கு தீர ஒரு சுலப வழி


பல ஆண்டுகளாக உங்களுக்கு வழக்கு இருக்கின்றதா? 

உங்கள் பக்கம் நியாயம் இருந்தும்,வழக்கு ஒரு முடிவுக்கு வராமல் தவிக்கிறீர்களா?

ஆம் எனில்,அந்த வழக்கு சில வாரங்களில் முடிவுக்கு வர இந்த சிவரகசியத்தைப் பின்பற்றுங்கள்;

இந்த மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்லுங்கள்;

மார்கழி 30 நாட்களில் ஏதாவது ஒரு நாள் மட்டுமாவது முதன் முதலாக சிவதரிசனம் செய்துவிட்டாலே போதும்.அந்த ஈசனின் அருளால் அடுத்த சில வாரங்களில் வழக்கு முடிவுக்கு வந்து,தீர்ப்பின் நகலே வாங்கிவிடலாம்;

சிவாலயத்தில் இருக்கும் போது,ஒரு மணி நேரம் வரை       ஓம் வராகி சிவசக்தி ஓம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;சிவாலயத்தில் இருக்கும் ஒவ்வொரு சன்னதியின் முன்பாகவும் இந்த மந்திரத்தை 27 அல்லது 108 முறை ஜபிக்க வேண்டும்;

கடந்த பல நூற்றாண்டுகளாக நமது தமிழ்நாட்டில் இந்த வழிமுறை மூலம் நீதி நிலைநாட்டப் பட்டிருக்கின்றது;

பின் குறிப்பு:ரகசியமான இந்த சுயபரிகாரத்தை அப்பாவி மற்றும் நேர்மையாளர்களின் நலனுக்காவே வெளியிடுகிறோம்;எனவே,இதை பிறரிடம் தெரிவிக்காமல் மட்டுமே பின்பற்ற வேண்டும்;இல்லாவிடில்,பலன் கிடைக்காது;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்! 

No comments:

Post a Comment