Tuesday, May 29, 2012

பாவத்தின் சம்பளம் மரணம் என்பது சரியா?


ஆறுமுகக்கடவுளிடம் ஒரு பெரியவர் கேட்டார்:பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேறு மதத்தினர் கூறுகிறார்களே? பாவம் செய்யாதவனும் மரணம் அடைகிறானே? இது எப்படி?
அதற்கு ஆறுமுகக்கடவுள்,
பாவத்தின் சம்பளம் மரணமல்ல;மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.
பாவத்தின் சம்பளம் துன்பம்,துயரம்,கவலை,கஷ்டம் ஆகியன.பாவத்தின் பரிகாரம் பக்தி,பரிவு ஆகியன.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கடவுளே ஏன் எனக்கு மட்டும் இவ்வ்வ்வளவு கஷ்டங்களைத் தருகிறாய்?
மனித வாழ்வில் நிகழும் இன்ப,துன்பங்கள்,லாப நஷ்டங்கள்,செல்வச் செழிப்பு,வறுமை போன்றவைகளுக்கு அவனவன் முற்பிறவிகளில் செய்த கர்மவினையே! அந்த கர்மவினைகளே அவனை/ளை இந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட்டதேயன்றி கடவுள் காரணம் அல்ல;கடவுள் என்பது வெறும் சாட்சிப் பூதமே!
அப்படியானால் ஏன் கடவுளை வணங்க வேண்டும்?எப்படியும் கர்மவினைகள் நம்மை இம்சித்து சித்தரவதை செய்யத் தான் போகின்றன?
கடவுள் பக்தி கர்மவினைகளின் கடுமையைக் குறைக்கும்;கரைக்கும்;தாங்க முடியாத கஷ்டங்களைத் தாங்கக் கூடியதாக மாற்றும்.அவ்வளவே!
அதேபோல ஒருவனுக்கு நல்ல நேரம் வரும்போது கடவுள் அருள் அவனுக்கு உயர்ந்த நிலையை  அளிக்கும்.
நன்றி:ஆவியுலகத் தொடர்பும்,ஆறுமுகக்கடவுளும்.பக்கங்கள்56,84,85.
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment