Wednesday, March 7, 2012

வாஸ்து சாஸ்திரமும் ஒரு விஞ்ஞானக் கலையே!


ஒரு ஜோதிடக் கேள்வி  பதில் பகுதியில் இருந்து:
?:ஒரு வீட்டின் வாஸ்து அமைப்பைப் பார்த்து அந்த வீட்டில் வசிப்பவர்களது கடந்த காலத்தையும்,வருங்காலத்தையும் கூற இயலுமா?

!!! ஏன் முடியாது? வாஸ்து நிபுணர் மதிப்பிற்குரிய கவுரு திருப்பதி ரெட்டி அவர்களுக்கு 9.6.1994 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது.ராமகிருஷ்ண பாலெபு என்பவர் தொடர்பு கொண்டார்.
“எங்கள் தொழிற்சாலை கிழக்கு,மேற்கு,வடக்கு ஆகிய மூன்று திசைகளில் மூடப்பட்டு தெற்கில் நூறு அடிக்குமேல் வெற்றிடம் உள்ளது” என்று கூறினார்.அதற்கு,எப்போது அந்தத் தொழிற்சாலை கட்டப்பட்டது? என்று கேட்டபோது,கி.பி.1974 இல் ரூபாய் 30 கோடி மதிப்பில் கட்டப்பட்டது என்றார்.
“அப்படியானால் நீங்கள் கட்டியதில்லை;வாங்கியது” என்றார். அதற்கு க்ருஷ்ண பாபுலே “ஆமாம்,நான் வாங்கியதுதான்” என்று ஆச்சரியத்துடன் பதிலளித்தார்.

தெற்கில் அவ்வளவு காலி இடமுள்ள தொழிற்சாலை,வீடு ஏதாவது 12 வருடங்களில் கண்டிப்பாக அது உரிமையாளரை மாற்றும்.இந்த விஷயம் வாஸ்துவில் அனுபவமுள்ள அனைவருக்கும் தெரியும்.
கலையில் நம்பிக்கை இல்லாமல் வயிற்றுப்பிழைப்புக்காக அல்லது வெறும் கேலியும் கிண்டலும் செய்வதற்காகவும் வாஸ்து வித்யா என்னும் இந்த புனித கலையைக் கற்கும் யாரும் பிரபஞ்ச சூட்சுமங்களை புரிந்து கொள்ளமுடியாது.

நன்றி: ஜோதிட அரசு,பக்கம் 63,மார்ச் 2012.

No comments:

Post a Comment