Friday, March 30, 2012

மோதி மிதித்து விடு;அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு


பிரபல திரைப்பட பின்னணிப்பாடகி ஆஷா போஸ்லேயும்,தீஜன் பாயி என்ற கலைஞரும் டெல்லியில் ‘லிம்கா’ சாதனைகள் ஏடு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.அது தீஜனை கவுரவிக்கும் நிகழ்ச்சி!அந்தக் கலைஞருக்கோ ஆங்கிலம் ஒரு வார்த்தை கூடத் தெரியாது.நிகழ்ச்சியில் பேசியவர்கள் ஒருவர் பின் ஒருவராக நுனி நாக்கு ஆங்கிலத்தில் பிளந்துகட்டினார்கள்.ஏற்புரை வழங்க எழுந்தார் தீஜன். “எனக்கு ஆங்கிலம் தெரியாது;இங்கே உள்ள சூழல் கண்டு நான் மிரண்டு போயிருக்கிறேன்” என்று கூறிவிட்டு உட்கார்ந்தார்.ஆனால்,நிகழ்ச்சி தொடர்ந்து ஆங்கிலத்திலேயே நடந்தது.ஆஷா போஸ்லேக்கு இதையெல்லாம் பார்த்து முகம் சிவந்தது.அவரிடம் விழா அமைப்பாளர் ‘ஒரு பாட்டு பாடுங்களேன்’ என ஆங்கிலத்திலேயே கேட்டுக்கொள்ள சீறிவிட்டார் ஆஷா!
“இந்த நிகழ்ச்சியை நடத்துவது கோகோ கோலா கம்பெனி.உங்கள் கம்பெனியின் கோக் இப்போதுதான் அருந்தினேன்.தொண்டை கெட்டுவிட்டது.பாடமுடியாது” என்று கூறிவிட்டார்.

No comments:

Post a Comment