Tuesday, June 14, 2011

கங்கையைக் காக்கப் போராடியவர் சிவனடி சேர்ந்தார்







டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்தவர் சுவாமி நிகாமனானந்த். இவர் கங்கை நதி மாசுபடுவதை தடுத்து கங்கை நதியை காக்க வேண்டும் எனவும், ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெறும் பகுதிகளை சுற்றிலும் அமைந்துள்ள கல் குவாரிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் நான்கு மாதங்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து டேராடூனில் உள்ள இமாலயன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் கடந்த மே மாதம் 2-ம் தேதிஅவர் கோமாநிலைக்கு சென்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்தார்.






thanks;www.dinamalar.com 14.6.11

No comments:

Post a Comment