Friday, June 24, 2011

சொர்ண ஆகர்ஷணபைரவர் படமும் வழிபாட்டுமுறையும்




சிவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும்;மகாலட்சுமி அல்லது குபேரன் அல்லது பெருமாளை வழிபட்டால் செல்வம் பெருகும்.ஆனால்,இந்த இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெற வேண்டுமெனில்,நாம் பைரவர்களில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வேண்டும்.



ஒரே நேரத்தில் நமது பாவங்கள் எனப்படும் கர்மங்கள் நீங்கும்;அதே சமயம் நமது வேலை அல்லது தொழில் மூலமாக வருமானம் பெருகிக் கொண்டே செல்லும்.நேற்று தேய்பிறை அஷ்டமிநாள்.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் எட்டாவது கிலோ மீட்டர் தூரத்தில் தாடிக்கொம்புகிராமம் அமைந்திருக்கிறது.இங்கே அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவில் இருக்கிறது.இந்த கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.காலை 9.30,11.30 மாலை 3.30,5.30 மற்றும் இரவு 7.30க்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேகம் சொர்ண ஆகர்ஷணபைரவருக்கு நடைபெறுகிறது.இதில் கலந்து கொண்டாலே நமது வருமானம் பெருகும்;பாவங்கள் குறைந்து கொண்டே வரும்.



கொடுத்த கடன் திரும்பிவராமல் தவிப்போர்கள்,தொழிலில் கொடிகட்டிப் பறந்துதிடீரென வீழ்ச்சியை நோக்கிப் பயணிப்போர்கள்,வாங்கிய கடனை திருப்பித் தரமுடியாமல் தவிப்பவர்கள்,அரசியலில் மாபெரும் சாதனை செய்ய விரும்புவோர்,முன் ஜன்ம வினைகளால் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டவர்கள் சொர்ண ஆகர்ஷணபைரவரை தொடர்ந்து எட்டுதேய்பிறை அஷ்டமிகளுக்கு இங்கு வந்து வழிபட வேண்டும்.ஒருமுறை வந்ததுமே மாபெரும் முன்னேற்றம் அடைவதை உணரலாம்.



இதைச் செய்ய முடியாதவர்கள் ஆன்மீகக்கடல் முகவரிக்கு ரூ.301/- மணி ஆர்டர் அனுப்பி சொர்ண ஆகர்ஷண பைரவரின் ஒரிஜினல் போட்டோவையும் வீட்டிலேயே வழிபடும் முறையையும் பெற்று தினமு 20 நிமிடம் வழிபாடு செய்யலாம்.

ஓம்சிவசிவஓம்



3 comments:

  1. your advertisement is nice try to establish an ashram it will help you to get enormous of money

    ReplyDelete
  2. ITS REALLY INTERESTING.....

    I need a photos ofswarna aagarshana bairavar

    will u able to help me to get this?

    thanks

    ReplyDelete
  3. ஹெலொ ஸார் ஒரு உதவி வர்ர ஸன்டெ அமிர்தலட்சுமி விரத நாள் இந்த விரதம் எப்படி இருப்பது வழிபாட்டு முறைகள் ஸுலொகம் எல்லாம் வேனும் கொஞ்சம் அவஸரம் ப்ளிS எப்படியாவது இதை பட்ரி அவஸரமா ஒரு பதிவு போடுங்க

    ReplyDelete