Monday, June 13, 2011

ஓம்சிவசிவஓம் மந்திரம் எப்படி செயல்படுகிறது?





நமது தினசரி மந்திர ஜபமானது நம்மைச் சுற்றியிருக்கும் நமது சூட்சும உடல்களில் முதலில் நிரம்புகிறது.இந்த நிலையை எட்டவே ஏழு முதல் பத்துநாட்கள் ஆகின்றன.அதன்பிறகு,நமது தலைக்கு மேலே இருக்கும் வான்பகுதிக்குப் பரவுகிறது.(நமது செல்போன் ஆன் பண்ணியிருந்தால்,எப்படி அதன் நெட்வொர்க் நம்மைப் பின் தொடருமோ அப்படி)



நாம் பத்தாயிரம் தடவைக்கும் மேலாக ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபித்துவிட்டால்,(இதில் தொடர்ந்து மூன்றுநாட்களுக்கு மேல் இடைவெளி இல்லாமலிருக்க வேண்டும்.மூன்று நாட்களுக்கு மேலாக இடைவெளி இருந்தால் மந்திர ஜபம் செயல்பட மிகவும் தாமதமாகும்)

நமது தலைக்கு மேலே இருக்கும் மந்திர அலைகள் இருக்கும் வான்பகுதியை அதுத் தொடத் துவங்கும்.



அப்போது நமது சிறுசிறு தேவைகளை நிறைவேற்றத்துவங்கும்.நமது எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்ததும் நமது மந்திர ஜபம் நம்மை சூட்சுமக் கவசமாகக் காக்கத் துவங்கும்.உதாரணமாக,ஒருவர் 1,27,524 தடவை ஓம்சிவசிவஓம் ஆறு மாதங்களில் விடாமல் ஜபித்துவருகிறார் எனில்,ஏழாம் மாதத்தில் அவருக்கு ஏற்படவிருக்கும் விபத்து அல்லது அவமானம் அல்லது கர்மவினையின் செயல்பாடு 90 சதவீதம் குறைந்துபோயிருக்கும். மீதி 10 சதவீதம் விதிப்படி செயல்படும்.

ஓம்சிவசிவஓம் மந்திரமும் சரி,வேறு எந்த இஸ்லாம்,கிறிஸ்தவ,புத்த,ஜைன மந்திரங்களும் இதுபோலத்தான் செயல்படும்.

இதுபற்றி மேல்நாடுகளில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.எனது சிற்றறிவுக்கு எட்டியதை நான் விவரித்திருக்கிறேன்.

ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. பதிவு அருமை
    நீங்கள் சொல்வது போல்
    தொடர்ந்து ஜபம் செய்வது முடியவில்லை
    இடையில் எதாவது தடை வந்து விடுகிறது

    ReplyDelete