Thursday, December 12, 2019

வறுமையும் தரித்திரமும் நீங்கி செல்வச் சீமான் ஆகிட


வறுமையும் தரித்திரமும் நீங்கி செல்வச் சீமான் ஆகிட

உங்களுடைய பொருளாதார நிலை இன்றைக்கு எந்த அளவுக்கு இருந்தாலும் சரி; பின்வரும் மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் வீதம் 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் ஜபித்து வருவதால்,வளமான வாழ்க்கையை நிச்சயமாகப் பெறுவீர்கள்!!!

தினமும் வீட்டில் சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு,சந்தன பத்தியை பொருத்தி வைத்துவிட்டு,ஒரு புதிய விரிப்பின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;
வெள்ளிக்கிழமைகளில் வரும் குளிகை காலம் காலை 7.30 முதல் 9 மணி வரையிலான நேரத்திலும்,ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமி திதி மற்றும் தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாட்களில் வரும் குளிகைகாலத்திலும் உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு செல்ல வேண்டும்;அங்கே இருக்கும் கால பைரவர் சன்னதிக்கு அருகில் அமர்ந்து ஜபிக்க வேண்டும்;
குளிகை காலம் எப்போதும் ஒன்றரை மணி நேரம் வரை இருக்கும்;அதற்குள் சிவாலயத்தினுள் சென்று அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடித்திருக்க வேண்டும்; முடிவாக கால பைரவரின் சன்னதிக்கு வர வேண்டும்;அதற்கு அருகில் பிறருக்கு தொந்தரவு தராத வகையில்   அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும்;

ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் சொர்ணதாயி நம ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்

இந்த மந்திரத்தை கடந்த காலங்களில் பலர் 4 ஆண்டுகள் வரை தினமும் ஜபித்து பெரும் செல்வந்தர்களாக மாறியுள்ளார்கள்!!!

அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருந்தால் மட்டுமே இந்த மந்திர ஜபம்,பைரவ வரமாக மாறி நமது வறுமையை நம்மிடம் இருந்து விரட்டி செல்வந்தராக உயர்த்தும்!!!

No comments:

Post a Comment