Tuesday, December 24, 2019

பெரும் செல்வ வளத்தைத் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம்!!!


பெரும் செல்வ வளத்தைத் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம்!!!

உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் நவக்கிரகங்கள் இயக்குகின்றன;நவக்கிரகங்களை பஞ்சபூதங்களும்,பஞ்சபூதங்களை 11 ஏகாதச ருத்ரர்களும்,11 ஏகாதச ருத்ரர்களை மஹாகால பைரவப் பெருமானும் நிர்வாகித்து வருகின்றார்;மஹா கால பைரவர்,தனது தந்தையும்,குருவுமாகிய ஈசனின் ஆணைப்படி,அவர் சார்பாக நிர்வகித்து வருகிறார்;


நாம் நம்முடைய அனைத்து கர்மாக்களையும் அனுபவித்து தான் தீர்க்க வேண்டும் என்று விதி இருந்தால்,நம் ஒவ்வொருவருக்கும் இன்று முதல் 80,000  முதல் 26 கோடி பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கும்;

இருப்பினும் ஈசனாகிய அருணாச்சலேஸ்வரர் மிகுந்த கருணை மிக்கவர்;திருந்த வேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணமுள்ள பல கோடி மனிதர்கள் நமது ஆன்மீகத் தமிழ்நாட்டில் பிறந்துள்ளார்கள்;

அவர்களில் யாரெல்லாம் இப்பிறவியில் மஹா கால பைரவ ஜபம் அல்லது அண்ணாமலை கிரிவலம் செய்கிறார்களோ அவர்களுக்கு வெகு சீக்கிரமாக கர்மவினைகள் குறையத் துவங்கும்;தொடர்ந்து மஹா கால பைரவ ஜபம் செய்து வருபவர்களுக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு,தானே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண  ஆகர்ஷண பைரவ ஜபம் தேடி வரும்;தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு தேய்பிறை அஷ்டமி அன்று இப்படி ஜபித்து வருவதால்,அடுத்த சில ஆண்டுகளுக்குப்பிறகு வளர்பிறைஅஷ்டமியின் மகிமைகளும்,அந்த நாளில் எந்த பைரவரை எப்படி ஜபிக்க வேண்டும் என்ற வழிமுறையும் தேடிவரும் ;

இன்னும் தொடர்ந்து பைரவ ஜபம் செய்து வந்தால்,பைரவ ஜபம் பற்றிய பல அரிய பெரிய ஜப ரகசியங்கள் நம்மைத் தேடி வரும்;அதில் ஒன்றுதான் பைரவரின் ஜனன திதியான அஷ்டமி திதியும்,ஈசனின் ஜன்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரமும்!
இந்த இரண்டும் சேர்ந்து வரும் நாளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ மந்திரம் ஒன்றை 108 முறை ஜபித்தால்,வருமான அளவு அதிகரிக்கும்;இப்படிச் சேர்ந்து வரும் நாட்கள் ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே வரும்;சில வருடங்களில் வராமலும் இருப்பது உண்டு;எனவே,இன்று முதல் தினமும் 108 முறை வீதம்,ஓராண்டு வரை ஜபித்து வருவதாலும் மகத்தான செல்வ வளத்தைப் பெறலாம்;


1.4.2020 புதன்கிழமை இரவு 10.25 வரை வளர்பிறை அஷ்டமி திதி இருக்கிறது;அன்று மதியம் 2.41 வரை திருவாதிரை நட்சத்திரம் இருக்கின்றது;


இந்த நாளில் காலை சூரியம் உதயம் ஆனதில் இருந்து,மதியம் 2.41 வரையிலான நேரத்தில் தொடர்ந்து 8 மணி நேரம் ஜபிக்கலாம்;அல்லது 3 மணி நேரத்திற்குள் 1008 முறை ஜபிக்கலாம்;

9.10.2020 வெள்ளிக்கிழமை மதியம் 1.24 முதல் 10.10.2020 சனிக்கிழமை மதியம் 1.19 வரை தேய்பிறை அஷ்டமி திதி இருக்கிறது.9.10.2020 வெள்ளிக்கிழமை இரவு 8.58 வரை திருவாதிரை இருக்கிறது.


9.10.2020 வெள்ளி மதியம் 1.24 முதல் இரவு 8.58 வரை ஜபிக்கலாம்;


21.3.2021 ஞாயிறு மாலை 4.22 முதல் மறுநாள் 22.3.2021 திங்கட்கிழமை விடிகாலை 5.32 வரை அஷ்டமியும்,திருவாதிரையும் சேர்ந்து வர இருக்கின்றது;இந்த நேரத்திற்குள் ஜபிக்கலாம்;





கண்டிப்பாக அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;


ஓம் பைரவாய பைரவக்சனாய குபேராய
தன தான்யாதிபதயே நமஹ
சொர்ணம் தனதான்யம் சம்ருத்மே ஸ்தாபய ஸ்வாஹா


தமிழ்நாடு,ஸ்ரீலங்காவில் எல்லா ஊர்களிலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயம் அல்லது சன்னதி இல்லை;எனவே,உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் கால பைரவர் சன்னதியில் தினமும் ஜபிக்கலாம்;உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் ஜபித்துவரலாம்.


வீட்டில் எனில்,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படம் இருக்க வேண்டும்;அவரை வடக்கு நோக்கி வைக்க வேண்டும்;அவர் அருகில்,கிழக்கு நோக்கி ஒரு தூய விரிப்பின் மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;உடலின் எந்த பகுதியும் தரையில் படாமல் அமர்ந்து கொள்ள வேண்டும்;   சந்தன வாசம் வெளிப்படுத்தும் பத்தியை பொருத்தி வைக்க வேண்டும்;பசு நெய் தீபம்  ஏற்றி வைக்க வேண்டும்;ஜபித்து முடித்ததும்,பத்தி,தீபத்தை அணைத்து வைக்க வேண்டும்;அந்த விரிப்பினை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது;ஒரு போதும் துவைக்கக்கூடாது;


நீங்கள் எப்படி வருமானம் பார்க்கிறீர்கள் என்பதை எப்படி எவரிடமும் சொல்லாமல் இருக்கிறீர்களோ,அதே போல,இந்த செல்வ வளம் பெருக்கும் ஜப முறையையும் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அறியாதவாறு ஜபித்து வர வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே பலிதம் ஆகும்;


வேறு எந்த தெய்வத்தை ஜபித்தாலும் செல்வ வளம் பெருக்கும் வரம் கிடைத்துவிடும்;ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் ஜபித்தால்,நமது கர்மவினைகள் படிப்படியாகக் குறையத் துவங்கும்;அது குறையும் வேகத்திற்கு ஏற்றவாறு,வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும்;



No comments:

Post a Comment