Tuesday, December 24, 2019

ஒரு லட்சம் கோடி மடங்கு பலன் தரும் கிரகண கால ஜபம்!!!


ஒரு லட்சம் கோடி மடங்கு பலன் தரும் கிரகண கால ஜபம்!!!

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் இன்னும் வளமாகவும்,நலமாகவும்,சீரோடும் சிறப்போடும் வாழ பலவிதமான வழிமுறைகளை நமது முன்னோர்களாகிய சித்தர்கள் உபதேசித்திருக்கின்றார்கள்;

அவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்றி வந்தாலும் போதும்;இப்பிறவியோடு முக்தியை அடைந்துவிட முடியும்;நமது முயற்சி 40 ஆண்டுகள் விடாமல் பின்பற்றி இருக்க வேண்டும்;அவ்வளவு தான்!!!

1980 வரையிலும் தமிழ்நாட்டிலும்,ஸ்ரீலங்காவிலும்,மலேஷியா,சிங்கப்பூர்,தமிழ்நாடு தவிர்த்த பாரத நாடு முழுவதுமே பல ஆயிரம் பேர்கள் ஏதாவது ஒரு தெய்வத்தின் அருளைப் பெற்று வாழ்நாள் முழுவதும் சகல வளங்களோடு வாழ்ந்துள்ளார்கள்;

உதாரணமாக,போன நூற்றாண்டில் பாரதியாரும்,அதற்கு முந்தைய நூற்றாண்டில் ராமக்ருஷ்ண பரமஹம்ஸரும் அன்னை காளியிடம் தினமும் பேசி இருக்கின்றார்கள்;

பல பிறவிகள் விடாப்பிடியாக ஒரே ஒரு தெய்வத்தை ஜபித்திருந்தால்,இப்பிறவியில் இருந்து அல்லது போன பிறவியில் இருந்து அந்த தெய்வம் சிறு வயது முதல் வழிகாட்டிட ஆரம்பிக்கும்;


இன்று முதல் நீங்களும் ஏதாவது ஒரு தெய்வத்தை தினமும் 1 மணி நேரம் வரை ஜபிக்க ஆரம்பிக்கலாம்;

இன்றும் கூட,எப்போதும் விநாயகக் கடவுள் என்ற கணபதியிடம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்;

முருகக் கடவுளிடம் தினமும் பேசுபவர்கள் இருக்கிறார்கள்:

காளியிடம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்;பைரவரிடம் பேசுபவர்களும்,வராகித்தாயுடன் பேசுபவர்களும் இருக்கிறார்கள்;

பைரவருடன் பேசுபவர்களையும்,வராகித் தாயுடன் பேசுபவர்களையும் அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க,இனம் காண,அடையாளம் காண முடியாது;

அதற்கு என்று சில ஆன்மீகத் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்;


எந்த ஒரு மந்திரத்தையும் வீட்டில் ஒரு முறை(வாய்விட்டுச் சொல்லாமல் மனதுக்குள் நினைப்பதே ஜபம்) ஜபித்தால்,10 முறை வாய்விட்டு சொன்னதற்கான பலன் கிடைக்கும்;


எந்த ஒரு மந்திரத்தையும் பழமையான கோவிலுக்குள் ஒரு முறை ஜபித்தால்,1000 முறை வாய்விட்டுச் சொன்னதற்கான பலன் கிடைக்கும்;

எந்த ஒரு மந்திரத்தையும் கடலோரக் கோவிலில் ஒரு முறை ஜபித்தால்,1 கோடி முறை வாய்விட்டுச் சொன்னதற்கான பலன் கிடைக்கும்;

எந்த ஒரு மந்திரத்தையும் மலை மீது இருக்கும் கோவிலில் ஒரு முறை ஜபித்தால் 2 கோடி முறை வாய்விட்டுச் சொன்னதற்கான பலன் கிடைக்கும்;

இந்த கணக்கு எல்லாம் சாதாரண நாட்களுக்கு உரியது;
வருடப் பிறப்பு(சித்திரை 1), மாதப் பிறப்பு(தமிழ் மாதத்தின் முதல் நாள்),அமாவாசை,பவுர்ணமி திதி வரும் நாட்கள்,சூர்ய கிரகணம்,சந்திர கிரகணம் போன்ற நாட்களில் மேலே சொன்ன எண்ணிக்கையில் 100 மடங்கு,1000 மடங்கு,10,000 மடங்கு பலனாக அதிகரிக்கும்;


சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் வரும் நாட்களில் கிரகணம் ஆரம்பித்த நிமிடத்தில் இருந்து 10 நிமிடம் கழித்து ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;கிரகணம் முடிவதற்கு 10 நிமிடம் முன்பாகவே ஜபித்து முடிக்க வேண்டும்;

இந்த கால கட்டத்தில் ஒரு முறை மந்திரம் ஜபித்தால்,100 கோடி மடங்கு வாய்விட்டு சொன்னதற்கான புண்ணியம் கிட்டும்;

அதிலும்,எதிர்வரும் சூரிய கிரகணம் 537 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவதால்,இந்த சூரியக் கிரகண நேரத்தில் ஜபித்தால்,1 லட்சம் கோடி தடவை வாய்விட்டுச் சொன்னதற்கான புண்ணியம் கிடைக்கும்;

26.12.2019 வியாழக்கிழமை காலை 9.44 முதல் 11.19 வரை அபூர்வ சூரியக்கிரகணம் வர இருக்கின்றது;

நீங்கள் காலை 9.54 முதல் 11.09 வரை உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை வீட்டில் ஜபிப்பது மிகவும் நன்று;


மந்திரஜபத்தை ஒரு விரிப்பின் மீது அமர்ந்து ஜபிக்க வேண்டும்;கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஜபிக்க வேண்டும்;ஜபிக்க ஆரம்பிக்கும் போது ஒரு தீபம் எரிந்து கொண்டும்,பத்தி புகை பரவிக்கொண்டும்  இருக்க வேண்டும்;


உலகத்தில் எந்த நாட்டில் வசித்தாலும்,அங்கே இதே வழிமுறையைப்பின்பற்ற வேண்டும்;

 18 மாதங்கள் முதல் 48 மாதங்களில் கணபதியின் அருளை தினசரி 1 மணி நேரம் மந்திர ஜபம் மூலம் பெற்றுவிடலாம்;

15 மாதங்கள் முதல் 45 மாதங்களில் காளியின் அருளைப் பெற்றுவிடலாம்;

30 முதல் 60 மாதங்களில் கால பைரவரின் அருளைப் பெற்றுவிடலாம்;

60 முதல் 90 மாதங்களில் மஹாவராகியின் அருளைப் பெற்றுவிடலாம்;

12 பிறவிகள் விடாமுயற்சி எடுத்தால் தான் முருகக் கடவுளின் அருளைப் பெற முடியும்; 

12,000 பிறவிகளுக்கும் மேலாக கடும் முயற்சி செய்தால் மட்டுமே அண்ணாமலையாரின் அருளைப் பெற முடியும்!!!

No comments:

Post a Comment