Saturday, November 2, 2019

ஒவ்வொருவருடைய மூன்று கர்மாக்களையும் நீக்கும் ஆன்மீக முயற்சிகள்!!!


ஒவ்வொருவருடைய மூன்று கர்மாக்களையும் நீக்கும் ஆன்மீக முயற்சிகள்!!!

உங்களுக்கு யாராவது இலவசமாக கொடுத்தால் அதை வாங்காதீர்கள்;ஆன்மீகத்தில் இலவசமாக என்று எதுவும் கிடையாது;நீங்கள் எவரிடமாவது இலவசமாக ஒரே ஒரு ஐந்து முக ருத்ராட்சம் வாங்கினால் கூட,அதனால் உங்களுடைய புண்ணியத்தில் பெரும் பங்கு கொடுத்தவரைப் போய்ச் சேர்ந்துவிடும்;இப்பிறவியில்,அந்த ருத்ராட்சத்தை வாங்கியது வரை உங்களுக்கு தெரிந்தும்,தெரியாமலும் செய்த அனைத்து புண்ணிய அளவில் பெரும் பங்கு உங்களுக்கு ருத்ராட்சத்தை தானம் செய்தவருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்;

நம் ஒவ்வொருவருக்கும் இப்பிறவியை இயக்குவது மூன்றுவிதமான கர்மாக்கள் ஆகும்;1.சஞ்சித கர்மா 2.பிராரப்த கர்மா  3.ஆகாமிய கர்மா
இந்த மூன்று கர்மாக்களைப் பற்றியும் கொஞ்சம் அறிவோமா?
1.சஞ்சித கர்மா:நாம் கருவில் உருவானது முதல் இது நம்மை பிடிக்கும்;இதில் நமது முற்பிறவி பாவ புண்ணியங்கள்,நமது இப்பிறவி முன்னோர்களின் கர்மச்சுமைகள் 8ல் 1 பங்கு வந்து சேரும்;

2.பிராரப்த கர்மா:சென்ற 4 பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களின் தொகுப்பினை எப்படி இப்பிறவியில் அனுபவிக்கப் போகிறோம் என்பதைப் பற்றி விளக்குகிறது;இது பற்றிய முழு விளக்கம் தரும் ஒரே நூல் இன்று கிறிஸ்தவ இங்கிலாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் இருக்கின்றது; இன்னும் 120 ஆண்டுகளுக்குப் பிறகு,அங்கே தோன்றும் ஒரு கிறிஸ்தவ ஆங்கிலேயரால் இது ஆராயப்படும்;

3.ஆகாம்ய கர்மா:மேலே கூறப்பட்டிருக்கும் சஞ்சித கர்மா,ப்ராரப்த கர்மாக்களின் தொகுப்பு மூலமாக இப்பிறவியில் நல்ல கர்மாக்கள்(திருமணம்,வேலை,சொத்துக்கள்,குழந்தைகள்,புகழ்); மற்றும் தீய கர்மாக்கள்(கடன்,நோய்,வறுமை,வம்பு வழக்குகள்,அவமானங்கள்,இழப்புகள்,விபத்து)=இவைகளை அனுபவிக்கும் போது புதியதாக இப்பிறவி முழுவதும் உருவாகும் கர்மாக்களுக்கு ஆகாம்ய கர்மா என்று பெயர்;


இந்த மூன்று கர்மாக்களையும் நீக்கிட இரண்டு மகத்தான வழிமுறைகளை சித்தர் பெருமக்கள் நமக்கு போதித்திருக்கிறார்கள்;

இந்த இரண்டு வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை மட்டுமோ அல்லது இரண்டையுமோ அடிக்கடி பின்பற்றிவருவதால்,மூன்று கர்மாக்களையும் அனுபவித்துத் தீர்க்காமலேயே வென்றுவிடமுடியும்;

1.அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;குறிப்பாக,தேய்பிறை சிவராத்திரி,உங்களுடைய ஜன்ம நட்சத்திர நாள்,செவ்வாய்க்கிழமையும் விசாகம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாட்கள்,தேய்பிறை அஷ்டமி நாட்களில் கிரிவலம் வர வேண்டும்;இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்வதால்,சஞ்சித கர்மா,பிராரப்த கர்மா,ஆகாம்ய கர்மா மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் டன் கணக்கில் இருந்தாலும்,எரிந்துவிடும்;(அழிந்துவிடும்)அண்ணாமலையாரின் கருணையே இதற்குக் காரணம்!!!

இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் செல்ல இயலாமல் போய்விட்டாலும்,108 முறையாவது அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;மீதியை அடுத்த பிறவியில் நிறைவு செய்யும் விதமாக அண்ணாமலையார் கருணை புரிவார்;


முதல் முறை கிரிவலம் செல்லும் போது, “ஒம் அகத்தீசாய நமஹ;ஓம் அருணாச்சலாய நமஹ” என்று ஜபித்துக் கொண்டு கிரிவலம் செல்ல வேண்டும்;

இரண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது, “ஓம் ஸ்ரீசர்வ ஸ்ரீசாக்த பரப்பிரம்ம மஹரிஷி,மகேஸ்வராய,கெளஸ்துப புருஷாய,இடியாப்ப சித்த ஈச மஹராஜ் கீ ஜெய்” என்று ஜபித்துக் கொண்டு 14 கி மீ தூரத்திற்கும் கிரிவலம் செல்ல வேண்டும்;

மூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது, “ஓம் ஆம் ஹெளம் செள” என்ற மந்திரத்தை ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்;

நான்காம் முறை கிரிவலம் செல்லும் போது, “சிவசிவ” என்று ஜபித்துக் கொண்டு கிரிவலம் செல்ல வேண்டும்;

ஒவ்வொரு முறையும் கிரிவலம் நிறைவு செய்த பின்னர்தான்,அருணாச்சலேஸ்வரரையும்,உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்ய வேண்டும்;


2.பாரத மாதா என்ற மஹாவராகியை ஒரு நாளுக்கு 1 மணி நேரம் வீதம் 6 ஆண்டுகள் தினமும் இரவில் ஜபிக்க வேண்டும்;ஓம் ஐம் க்லெளம் சிவபஞ்சமியை நமஹ என்ற மந்திரத்தை தினமும் இரவில் 1 மணி நேரம் ஜபிக்கலாம்; அல்லது இரவில் தினமும் 5 முறை வராகி மாலையை ஜபித்துக் கொண்டு வரலாம்;

ஒரு நாளுக்கு 5 முறை வீதம் 90 நாட்கள் ஜபித்து வர வேண்டும்;91 வது நாளன்று அடுத்த முயற்சியைத் துவங்க வேண்டும்;20 முறை 90 நாட்களாகவே வராகி மாலையை ஜபித்து வந்தால்,அன்னை மஹாவராகி மனம் குளிர்ந்து,நாம் அனுபவிக்க வேண்டிய சஞ்சித கர்மா,ப்ராரப்த கர்மா,ஆகாம்ய கர்மாக்களை தனது ஒரே மூச்சுக்காற்றினால் நம்மிடம் இருந்து உள்வாங்கிக் கொண்டு நமக்கு மறுபிறவி இல்லாத முக்தியை அருள்வாள்!!!

No comments:

Post a Comment