Monday, December 24, 2018

அன்னை மஹாவராகியின் அருளைப் பெற

1970 ஆம் ஆண்டு வரையிலும் அந்த அன்னையார் தினமும் ஒன்பது மணி நேரம் ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ என்ற ஜபத்தை ஜபித்து வந்துள்ளார்கள்;

அப்படி ஜபிக்கும் காலம் வரை மட்டும் அல்ல;வாழ்நாள் முழுவதும் ஜீவகாருண்யம் என்ற சைவ உணவுப் பழக்கத்தில் வாழ்ந்து வந்திருந்தார்கள்;

                                                   
     1970 ஆம் ஆண்டில் அந்த         அன்னையின் 58 ஆம் வயதில் சிவப்பதம் அடைந்தார்கள்;அவர் சிவப்பதம் அடையும் போது,அவர் ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ என்று ஜபித்த ஜப எண்ணிக்கை சுமாராக 12,00,00,000 ஐத் தொட்டிருந்தது;

அதன் விளைவாக அவரது மகளுக்கு நாடி ஜோதிட ஓலைச்சுவடி ஒன்று கிடைத்தது;அதைக் கொண்டு அந்த அன்னையின் மகள் 1965 முதல் 1985 வரை நாடி ஜோதிட ஓலைச்சுவடி பல ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பார்த்து புகழ் பெற்றிருக்கிறார்;



இதற்கு மேல் இதைப் பற்றி விரிவாக எழுத எமக்கு அனுமதிக்கவில்லை;எமது ஞான குருவின் அனுமதி இவ்வளவுதான் கிடைத்தது;

No comments:

Post a Comment