Thursday, December 13, 2018

ஆன்மீகப் பிரச்சாரம் ஏன் நாம் செய்ய வேண்டும்?



உலகத்தில் வாழ்ந்து வரும் மனிதர்களுக்கு அவரவர் பூர்வ புண்ணியத்தின் படி,இந்த நாட்டில்,இந்த மாநிலத்தில்,இந்த மாவட்டத்தில்,இந்த ஊரில்,இந்த ஜாதியில்,இந்த அம்மா+அப்பாவுக்கு இந்த கிரக அமைப்பில் பிறக்க வேண்டும் என்று ஈசன் தீர்மானித்து அனுப்பிவைக்கின்றார்;


நமது மரணத்தை சனிக்கிரகமும்,லக்னத்திற்கு 8 இடத்து அதிபதியும் தீர்மானிக்கின்றார்கள்;ஆனால்,நமது மறுபிறவியை சுக்கிரன் தான் தீர்மானம் செய்கின்றார்;நவக்கிரகங்கள் அவரவர் கடமையை அவர்கள் இஷ்டப்படி செய்ய முடியாது;சிவசிந்தனையில் இருந்து நடுநிலையோடு தான் செய்ய முடியும்;


எவர் ஜாதகத்தில் குரு சுபக் கிரகமாக அமைகின்றதோ,அவர்களுக்கு மட்டுமே ஆன்மீகக் கருத்துக்கள் தேடி வரும்;ரிஷப லக்னம்,துலாம் லக்னத்தில் பிறப்பவர்கள் இப்பிறவி முழுவதும் சொகுசுவாழ்க்கை வாழவே பிறந்துள்ளார்கள்;


போன பிறவியில் பசுவை ஒரே ஒரு முறை தெரியாமல் மிதித்துவிட்டாலோ,அடித்துவிட்டாலோ அல்லது கொன்றுவிட்டலோ

போன பிறவியில் கோவில் சொத்துக்களை திருடியிருந்தாலோ திருடுவதற்கு துணை போயிருந்தாலோ,திருடுவதை வேடிக்கை பார்த்திருந்தாலோ

போன பிறவியில் தெய்வத்தை மிகவும் இழிவாக திட்டியிருந்தாலோ

இன்னும் சில தகாத செயல்களைச் செய்திருந்தாலோ குரு நீசமாக இருக்கும் போது பிறவி எடுக்க வேண்டி இருக்கும்;


அதனால் தான் இந்துக்கள் எப்போதும் பிற மத தெய்வங்களை ஒரு போதும் நிந்திப்பது கிடையாது;பிற மத நூல்களில் இருந்து அறிவு பூர்வமாக சந்தேகம் கேட்பது தப்பில்லை;கேலி செய்வதோ,இழிவு படுத்துவது தான் தவறு;

பூமியில் இந்து மதமான சனாதன தர்மத்திற்கு ஆபத்து வரும் போது,ஈசனாகிய அருணாச்சலேஸ்வரரே சிலரை பூமிக்கு அனுப்புவது வழக்கம்;அப்படி வந்தவர் தான் ரமண மகரிஷி;ரமண மகரிஷியின் வாழ்க்கை ஐரோப்பியர்களுக்கு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமையை உணர்த்தவே முன் உதாரணமாக வாழ்ந்து வந்தார்;தனது வாழ்நாளில் 10,000 தடவைகளுக்கும் மேல் அருணாச்சலத்தை கிரிவலம் வந்திருக்கின்றார்;


அண்ணாமலை கிரிவலம் வரும் ஒவ்வொருவருக்கும் சூட்சுமமாக இருந்து இன்று வரை வழிகாட்டி வருபவர் ரமண மகரிஷி!


முருக கடவுள் வழிபாட்டுமுறையையும்,அண்ணாமலை கிரிவலத்தின் முக்கியத்துவத்தையும் பாரத நாடு முழுவதும் மற்றும் இலங்கை முழுவதும் பரப்பியவர் முருக பக்தராகிய அருணகிரி நாதர்! அவரது உண்மையான வாழ்க்கை வரலாற்றை அகத்திய மகரிஷியின் அருளால் அறிந்த பின்னரே அவரைப் பற்றி இதுவரை அறிந்தது அனைத்தும் தவறு என்பதை உணர முடிந்தது;


வெறும் பக்தியால் எப்பேர்ப்பட்ட மாந்திரீகத்தையும் முறியடிக்க முடியும் என்பதை அருணகிரி நாதரின் வாழ்க்கை நமக்கு போதிக்கின்றது;இன்று (2019) முதல் 400 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை 1000 கால் மண்டபத்தில் நிகழ்ந்த சம்பவங்களே இதற்கு நேரடி ஆதாரம் ஆகும்;


சைவத்திற்கும்,வைஷ்ணவத்திற்கும் இடையே ஒற்றுமையை உருவாக்கிட கடும் முயற்சி எடுத்தவர் அருணகிரி நாதர்;

ஒரு நாளுக்கு 6 முறை வீதம் தொடர்ந்து 40 ஆண்டுகள் அண்ணாமலை கிரிவலம் வந்தவர் தான் சேஷாத்திரி சுவாமிகள்;அவர் தனது வாழ்நாளில் 1,00,000 தடவைக்கும் மேல் கிரிவலம் வந்திருக்கின்றார்;அதனால் கிடைத்த புண்ணியத்தை நமது பாரத நாட்டின் மக்களுக்கும்,பூலோக மக்களுக்கும் அர்ப்பணம் செய்தவர்;உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்து அண்ணாமலைக்கு வருகை தந்து ஐக்கியமானவர்;அதனால், தான் அக்னி லிங்கத்தின் அருகில் ஜீவசமாதி ஆகும் பெரும் பேறு பெற்றார்;

 வடமேற்கு எல்லைப்புற மாகாணம் என்று இருந்த மாநிலத்தை அருணாச்சல பிரதேசம் என்று பெயர் மாற்றினார் இந்திரா காந்தி; அண்ணாமலையின் அருமை பெருமைகளை இந்திரா காந்தி உணர்ந்ததால்,இந்த பெயரை வைத்தார்;ஒரே ஒருமுறை தெரியாமல் அண்ணாமலை என்றோ அல்லது அருணாச்சலம் என்றோ சொன்னாலே 3,00,00,000 முறை ஓம் நமச்சிவாய என்று ஜபித்த புண்ணியம் கிடைக்கும்;

சூப்பர் ஸ்டார் அவர்கள் தான் நடித்த ஒரு திரைப்படத்திற்கு அருணாச்சலம் என்று பெயர் வைத்ததும் இதே காரணத்திற்காகத் தான்!!!திரையுலகில் இருந்து கொண்டு பக்தியை பரப்புவது சாதாரண காரியமா?

ஈசனின் ஆணைப்படி,வில்வத்தின் பெருமைகளை பரப்பிட பல சித்தர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நமது பாரத தேசம் முழுவதும் அவதரித்தார்கள்;பொது மக்களிடம் வில்வத்தின் பெருமைகளை பரப்பினார்கள்;


ருத்ராட்சத்தின் பெருமைகளையும்,அதன் மருத்துவ குணங்கள்,ஆன்மீக சுபாவங்களையும் கலியுகத்தின் ஆரம்பத்தில் அதாவது 5100 ஆண்டுக்கு முன்பு பாரத நாடு முழுவதும் பரப்பினார்கள்;


கோமாதாவின் உடலில் 300 கோடி தெய்வீக சக்திகள் இருக்கின்றன;நமக்குத் தெரிந்து 50 அல்லது 60 தெய்வங்கள் தான்;கோமாதாவின் பெருமைகளை பரப்பிட ஈசனின் அருளால் பல சித்தர்கள் பூமிக்கு வருகை தந்தார்கள்;


கோவில் வழிபாட்டு முறைகள்,சைவ சித்தாந்த நூல்கள்,திருக்கையிலாய வாத்தியம் என்ற பஞ்சவாத்தியம் வாசிப்பது போன்றவைகளையும் மக்களாகிய நம்மிடையே பரப்பியவர்கள்,சொல்லிக் கொடுத்துவர்கள் ஈசனின் ஆணைப்படி பூலோகம் வருகை தந்த சித்தர்களே!!!


இன்று சனாதன தர்மம் மிகப் பெரும் ஆபத்தில் இருக்கின்றது.அதை பாதுகாக்க பல்வேறு துறைகளில்,பல்வேறு ஊர்களில்,பல்வேறு விதமான இயக்கங்கள் பாரத நாடு முழுவதும் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன;இவர்கள் அனைவருமே ஈசனின் ஆணைப்படி பூமியில் பிறவி எடுத்திருக்கும் சிவ கணங்கள்,விஷ்ணு கணங்கள் ஆவர்;


ஒரு பெரும் யுத்தம் 2030க்குள் வரப் போகின்றது;அதன் பிறகு,நமது சனாதனதர்மம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பிக்கும்;கடவுளின் பெயரால் யாரெல்லாம் வறுமையை,நோயை,அறியாமையை நீக்காமல் சண்டையிட்டார்களோ,அத்தனை பேர்களும் அழிந்திவிடுவார்கள்;

இங்கே நாமும்,நமது வம்சாவழியினரும் நமது இந்து தர்மத்தின் பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டியது நமது கடமை ஆகும்;ஆன்மீகப் பிரச்சாரம் மட்டும் செய்தால்,நமது இந்து மதத்தை இனிமேல் காப்பாற்றிட முடியாது;இந்து கண்ணோட்டத்தை அரசியல் ரீதியாக உருவாக்க வேண்டும்.இதுவும் புண்ணியம் தரும் செயல்தான்!!!


தெய்வபக்தியுடன் கூடிய தேசபக்தி கொண்டிருந்த பலர் இன்றும் நமது கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபட்டுக்கொண்டு இருக்கின்றோம்;இது ஈசனின் விருப்பம் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?



தெருவுக்கு ஒரு ஷாகா ஆரம்பிக்க வேண்டும்;ஒவ்வொரு கோவிலிலும் திருவிளக்கு பூஜை ஆரம்பித்து விடாமல் நடத்திட வேண்டும்;மதமாற்றத்தை முழுமையாக தடுத்துவிடுவோம்;தேசபக்தியும்,தெய்வ பக்தியும் நமது இரு கண்கள் என்பதை நமது வம்சாவழியினருக்கு போதிப்போம்;

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்து சமயத்தின் பெருமைகளை போதிக்கும் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும்;2020 க்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 120 ஆன்மீகப் பேச்சாளர்கள் தயாராக இருக்க வேண்டும்.1964 முதல் 2018 வரை நாத்திகவாதிகள் நமது இந்து தர்மத்திற்கு எதிராகச் செய்த துரோகங்களை மக்களுக்குப் புரிய வைப்போம்;

நமது ஊரில் இருக்கும் பழமையான ஆலயங்களைப் பாதுகாக்க ஆலய பாதுகாப்புக் கமிட்டியை உருவாக்குவோம்;

இன்றைய இளைய இந்துக்களிடம் (12 முதல் 22 வயது வரை) இந்து மதம் பற்றிய விழிப்புணர்ச்சியை அடுத்த 50 ஆண்டுகளுக்கு உருவாக்குவோம்;

வறுமையாலும்,விரக்தியாலும்,வேலையின்மையாலும் வேறு மதங்களுக்கு வழிமாறிச் சென்ற நமது சகோதர,சகோதரிகளை மீண்டும் நமது பாரம்பரியத்திற்கு கொண்டு வருவோம்;நமது பாரத நாட்டை முழுமையான  இந்து தேசமாக ஆக்கிவிடுவோம்;


No comments:

Post a Comment