Monday, December 24, 2018

நமது வாரிசுகளுக்கு இந்து தர்மத்தின் பெருமைகளை உணர்த்துவோம்!!!



7 வயதுக்குள் நமது குழந்தையை மாதம் ஒருநாள்(ஞாயிற்றுக்கிழமையே போதும்) நமது ஊரில் இருக்கும் பழமையான ஆலயத்துக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்;இப்படிச் செய்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு பக்தி உணர்வு உருவாகும்;

13 வயது முதல் 25 வயது வரை நமது மகனையும்,மகளையும் பண்புப் பயிற்சி முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்;ஆண் எனில்,15 வயது முதல் 25 வயதுக்குள்ளாகவும்,பெண் எனில் 13 வயது முதல் 21 வயதுக்குள்ளாகவும் இம்மாதிரியான முகாம்களுக்கு அனுப்பாவிட்டால்,அதன் பிறகு,அவர்களின் வாழ்க்கையில் உருப்படியான கேரக்டர்களை உருவாக்கிட முடியாமல் போய்விடும்;

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இறுதி 7 நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பண்புப்பயிற்சி முகாம்கள் நடைபெற்றுவருகின்றன;அவைகளுக்கு அவசியம் நமது மகன் களை அனுப்ப வேண்டும்;

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் ஏதாவது 5 நாட்கள் முகாம் இளம் இந்து பெண்களுக்கு பண்புப் பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது;


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்,மே மாதத்தில் 15 நாட்கள் தமிழ்நாட்டில் இதே பண்புப்பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன;அவைகளுக்கும் நமது மகனை கண்டிப்பாக அனுப்ப வேண்டும்; அதே போல,பெண்களுக்கு என்று இருக்கும் முகாமுக்கு நமது மகளை அனுப்பி வைக்க வேண்டும்;

    இப்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அனுப்பினால்,அதன் பிறகு,நமது மகன் நமது இந்து தர்மம் பற்றிய முழு அறிவைப் பெறும் கண்ணோட்டத்தைப் பெற்றுவிடுவான்;எதற்கெடுத்தாலும் பயப்படும் குணம் அவனை விட்டு ஓடிவிடும்;எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் அவனுக்கு கைகூடிவிடும்;மகளாக இருந்தால்,மூன்று தலைமுறை இந்துவிழிப்புணர்ச்சியை உருவாக்குகின்றீர்கள் என்று அர்த்தம்;

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பெண்களுக்கு மட்டும் 15 நாட்கள் பண்புப் பயிற்சி முகாம்கள் நடைபெற்றுவருகின்றது;என்ன கஷ்டம் வந்தாலும் சரி! எந்த தியாகம் செய்தாவது தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு நமது மகள்கள் 13 வயது அடைந்தது முதல் 21 வயது வரை இந்த முகாம்களுக்கு அனுப்பியே ஆக வேண்டும்;


இந்த மூன்று ஆண்டுகள் வாழ்நாளில் முக்கிய தருணங்கள்;இந்த காலகட்டத்தில் இந்த பண்புப் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பிவிட்டால் போதும்;அதன் பிறகு,இந்த உலகில் சுயமாக சிந்திக்க,செயல்பட,எதையும் எதிர்கொள்ளும் இந்து உணர்வும்,தன்னம்பிக்கையும் கைகூடிவிடும்;

19 வயது முதல் 25 வயது வரை ஆளுமைத் திறன் மேம்பாடும்,ஆழ்மனதின் சக்தியைப் பயன்படுத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம்,சுதேசி விழிப்புணர்வுக்  கருத்தரங்கு,இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்கள் இவைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அனுப்ப வேண்டும்;

25 வயது முதல் வாழ்நாள் முழுவதும் நமது மகனும்,மகளும் சகலகலா வல்லியாகத் திகழுவார்கள்;அவர்களுக்குள் உருவாகும் இந்து உணர்வு இப்பிறவி முழுவதும் கூடவே வரும்;


பாரத் மாதா கீ ஜெய்!!!











No comments:

Post a Comment