Tuesday, August 23, 2016

நமது வாழ்க்கையை நிம்மதியடையச் செய்யும் வராகி வழிபாடு!!!


செல்போனும்,இணையமும் நமது நாடு முழுக்க பரவலானதால் நமது சம்பளத்தை உயர்த்தவில்லை;மாறாக ஒருவித விரக்தி மனப்பான்மையைத் தோற்றுவித்திருக்கின்றது;(1990களில் தினசரிகளில் அடிக்கடி வந்த செய்தி: நமது வறுமையைப் போக்கும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி!)


உலகமயமக்கலால் ஏழைக்கும்,பணக்காரனுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது;ஜனநாயக நாடாக இருந்துவந்த நமது இந்தியா இப்போது உலகமயமாக்கல் என்ற சர்வதேச முட்டாள்த்தனத்தினால் முதலாளித்துவ நாடாக மாறிக் கொண்டிருக்கின்றது;இதனால்,கடன் இல்லாத குடும்பமே இல்லை என்ற அளவுக்கு சூழ்நிலை நாடு நெடுக பரவிக் கொண்டிருக்கின்றது;இந்த நிலை அடியோடு மாறிவிட நாம் கொஞ்சம் பக்தியாக இருந்தால் மட்டுமே முடியும்;


1990 வரை போட்டி மனப்பான்மை மட்டுமே இருந்து வந்தது;தனியார்த் துறையாக இருந்தாலும் சரி;அரசுத் துறையாக இருந்தாலும் சரி;சுய தொழில்த்துறையாக இருந்தாலும் சரி!
அதன் பிறகு பொறாமையாக அது வளர்ந்து,தான் வளர்கின்றோமோ இல்லையோ தனது போட்டியாளர் வீழ்ச்சியடைய வேண்டும் என்ற நிலை நாடு முழுக்க ரோமிங் இல்லாமலேயே பரவிக் கொண்டிருக்கின்றது;

அரசுத்துறை,தனியார்த் துறை,தொழில்துறையில் மட்டும் தான் இந்த பொறாமையினால் விளைந்த மாந்திரீகத் தாக்குதல் இருக்கின்றது என்று நினைக்க வேண்டாம்;ஆன்மீகத்தில் தான் இது மிகவும் அதிகம்;கண்ணுக்குத் தெரியாமல் அதேசமயம் ஐம்புலன் களால் கூர்ந்து கவனித்து வந்தால் மட்டுமே ஆன்மீகத்தில் பிறரால் நமக்கு எதிராகச் செய்யப்படும் மாந்திரீகத் தாக்குதலை உணரமுடியும்;


எப்பேர்ப்பட்ட மந்திரீகமாக இருந்தாலும் சரி;எத்தனை ஜன்மமாக ஜன்மாந்திர மந்திரவாதியாக இருந்தாலும் சரி;பிரபஞ்ச அன்னை மஹாவராகியைச் சரணடைந்துவிட்டால் அனைத்து துரோகங்களும் சின்னாபின்னமாகிவிடும் என்பது பல நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வரும் உண்மை;


18 வயது நிரம்பிய யாராக இருந்தாலும் சரி;அசைவம்,மது இரண்டையும் கைவிட்டுவிட்டு பின்வரும் மஹாவராகியின் 12 பெயர்களை தினமும் ஜபித்து வரவேண்டும்;

ஒரு பச்சைத் துண்டின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;காணப்பட்டிருக்கும் படத்தை பதிவிறக்கம் செய்து வீட்டின் பூஜை அறையில் வடக்கு நோக்கி ஒரு பச்சைத் துண்டின் மீது வைத்துக் கொள்ள வேண்டும்;

மஹாவராகியின் அருகில் ஒரு மண் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமும்,இன்னொரு மண் விளக்கில் நெய் தீபமும் ஏற்றி வைத்துக் கொண்டு இந்த 12 பெயர்களை ஜபிக்க வேண்டும்;

முதல் வாரத்தில் தினமும் காலை 4.30 முதல் 6 மணிக்குள் 15 நிமிடம் வரையும்,இரவில் தூங்கச் செல்லும் முன்பு 15 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

இரண்டாவது வாரத்தில் காலையில் 20 நிமிடமும்,இரவில் 20 நிமிடமும் ஜபித்து வரவேண்டும் தினமும்!

மூன்றாவது வாரத்தில் காலையில் 25 நிமிடமும்;இரவில் 25 நிமிடம் வீதமும் தினமும் ஜபித்து வரவேண்டும்;

நான் காவது வாரத்தில் காலையில் 30 நிமிடமும்;இரவில் 30 நிமிடமும் தினமும் ஜபித்து வரவேண்டும்;

ஐந்தாவது வாரத்தில் இருந்து காலையில் 30 நிமிடம் வரையிலும் இந்த 12 பெயர்களை ஜபித்துவிட்டு,ஒருமுறை வராகி பரணியை ஜபிக்க வேண்டும்;அதே போல இரவில் 30 நிமிடம் வரையிலும் இந்த 12 பெயர்களை ஜபித்துவிட்டு,ஒருமுறை இந்த வராகி பரணியை ஜபிக்க வேண்டும்;

ஐந்தாவது வாரம் முதல் 150 வது வாரம் வரை இப்படி ஜபித்துவந்தால் போதும்;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நி

யாரெல்லாம் மனதால் கூட பிறருக்கு தீங்கு செய்ய நினைக்காமல் தான் உண்டு;தனது வேலை உண்டு என்று வாழ்ந்து வருகின்றார்களோ அவர்களே பிறரது பொறாமையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றார்கள்;

அந்தப் பொறாமையின் விளைவுதான் மாந்திரீகத்தால் பாதிப்பை ஏற்படுத்துதல்;

தன்னைச் சரணடைந்த அப்பாவிகளை பாதுகாக்க எப்பேர்ப்பட்ட மந்திரவாதிகளையும் ஒழித்துக் கட்டிவிடுவாள் அன்னை மஹாவராகி!


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment