Friday, May 20, 2016

எமதர்மராஜா எப்போதெல்லாம் நேரில் வருவார்?


1980களின் முதல் ஐந்து ஆண்டுகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மடத்துப்பட்டித் தெருவில் ஒருவருக்கு உடல் நலம் குன்றியது;
அவரை மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டனர்;

அவர் இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு,அவரது வீட்டிற்குள் ஒரு எருமை மாடு வந்துவிட்டது;அது நகரவே இல்லை;பலர் அந்த எருமை மாட்டினை அடித்தும்,இழுத்தும் அது அங்கிருந்து போகவே இல்லை;

அவர் இறந்தப் பின்னரே அந்த எருமை மாடு அங்கிருந்து புறப்பட்டு எங்கேயோ போனது;(யார் அதையெல்லாம் கண்டு கொள்ளப் போகின்றார்கள்?)

இந்தச் சம்பவத்தில் இருக்கும் சூட்சும ரகசியம் என்னவெனில்,ஒரு மனிதன் ஒரு பிறவி முழுவதும் நல்ல ஆத்மாவாக இருந்தால்,அந்த மனிதனின் ஆயுளை முடிக்க இறப்பின் கடவுளாகக் கருதப்படும் எமதர்மராஜாவே நேரில் வருவார் என்று சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கின்றோம்;இந்த கர்ண பரம்பரைத் தகவல் உண்மைதான் என்பதை இச்சம்பவம் உறுதி செய்திருக்கின்றது;

தினமும் ஒரு மணி நேரம் எதாவது ஒரு தெய்வத்தின் பெயரை/பாடலை/ஜபத்தை/108 போற்றியை/1008 போற்றியைப் பாடுபவர்கள் புண்ணிய ஆத்மாவாக மாறுகின்றனர்;

இப்பிறவியில் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் சென்றுள்ளவர்கள் புண்ணிய ஆத்மாவாக உயர்வார்கள்;

வயதான பசுக்களை பராமரிக்க பசுமடம் அமைத்து,மிகுந்த சிரத்தையுடன் அவைகளைப் பராமரித்து வருபவர்கள் புண்ணிய ஆத்மாவாக மாறுவார்கள்;

இறைபக்தி,நாம ஜபம்,வில்வம் நடுதல் முதலான 12,500 விதமான தெய்வீகச் செயல்களை முறையாக ஏதாவது ஒன்றை மட்டுமாவது குறைந்தது 20 ஆண்டுகள் செய்து வருபவர்கள் புண்ணிய ஆத்மாவாக மாறுவார்கள்;

பிறப்பில்லாத முக்தியை அடையும் மார்க்கங்கள் பல நூறு உள்ளன;தகுந்த குருவின் வழிகாட்டுதலுடன் முயற்சி செய்பவர்கள் இப்பிறவியுடன் முக்தியை அடைய முடியும்;


ஓம் அருணாச்சலாய நமஹ


No comments:

Post a Comment