Wednesday, May 11, 2016

யாருக்கு அன்னை அரசாலையின் அருள் கிட்டும்?


எல்லோரும் நன்றாக இருந்தால்,நாமும் நமது குடும்பமும் நன்றாக இருக்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் தான் பலர் பொதுநலவாதிகளாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர்;

பிறருக்கு வலியச் சென்று உதவிகள் செய்கின்றனர்;முடிவில்,யாருக்கு உதவிகள் செய்தார்களோ,அவர்களால் புறக்கணிக்கப்படுகின்றனர்;அவமானப்படுத்தப்படுகின்றனர்;

அடுத்தவர்களுக்கு உதவி செய்து,உதவி செய்தே தன்னையும்,தனது குடும்பத்தையும்,தனது பொருளாதாரத் தன்னிறைவையும் எட்டாமல் விட்டு,பரம ஏழையாகவோ அல்லது போதுமான அளவில் சம்பாத்தியம் செய்யாமலேயே தமது இளமையை வீணடித்துவிடுகின்றனர்;

கூடவே இருந்து,குழிபறிக்கும் துரோகிகளுக்கு எதிராக பதிலடி தரத் தெரியாமல் தவிக்கும் நேர்மையாளர்கள் இன்றும் தமிழ்நாடு முழுவதும்,இந்தியா முழுவதும்,உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் ஒவ்வொரு ஊரிலும்,ஒவ்வொரு தொழிலிலும்,ஒவ்வொரு தொழிற்சாலையிலும்,ஒவ்வொரு ஜாதியிலும்,ஒவ்வொரு தெருவிலும்,ஒவ்வொரு துறையிலும் இருக்கத்தான் செய்கின்றனர்;

இப்படிப்பட்டவர்களுக்கு கண்கண்ட தெய்வம் ஒன்று இருக்கின்றது;அந்த தெய்வம் தான் ஆதி வராகி என்ற அரசாலை என்ற ப்ருகத் வராகி என்ற வார்த்தாளி!

பிறருக்காக தன்னையும்,தனது வாழ்க்கையையும் அர்ப்பணிப்பது போல நடிப்பவர்களும் லட்சக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர்;அவர்களுக்கு ஒரே ஒரு முறை மட்டுமோ அல்லது ஒரே ஒரு விநாடி மட்டுமோ அன்னை அரசாலை வரம் தரவும் மாட்டாள்;அருள் பார்வை பார்க்கவும் மாட்டாள்;


எந்தக் கடவுளாக இருந்தாலும்,அந்தக் கடவுளுக்கு உரிய பூஜை,யாகம்,அபிஷேகம் இவைகளை ஒருவன்/ள் செய்தால்,அதன் பிறகு அவன்/ளுக்கு அந்தக் கடவுள் வரம் தந்துதான் ஆக வேண்டும்;

ஆனால்,திடீரென அன்னை அரசாலையை வழிபடத் துவங்கியதும்,அந்த பிரபஞ்ச அன்னை,வழிபடுபவரின் ஆழ்மனதுக்குள் நுழைந்து, “இவன்/ள் எதற்காக திடீரென நம்மை வழிபடத் துவங்குகிறான்? இவன் நல்லவனா? கெட்டவனா? அடுத்தவருக்கு மனதால் கூட தீங்கு நினைக்காமல்,இவன்/ள் பிறரின் சதிகளால்,துரோகங்களால் பாதிக்கப்பட்டு,மிகவும் சிரமப்படுகின்றானா?” என்று கவனிப்பாள்;

ஒருபோதும் பிறருக்குத் தீங்கு நினைக்காமல் நேர்மையாக வாழ்ந்து வருபவராகவும்,பொதுநலவாதியாகவும் இருப்பவர்களுக்கு மட்டுமே அன்னை அரசாலை வரம் தருவாள்;ஓடோடி வந்து உரிய பாதுகாப்பு தருவாள்;

ஒரு வருடத்திற்கு(சித்திரை 1 முதல் பங்குனி 30 வரைதான் ஒரு வருடம்!) பூசம் நட்சத்திரமும்,வியாழக்கிழமையும் சிலமுறை மட்டுமே சேர்ந்து வரும்;(12.5.2016)


அந்த நாளில் அன்னை  அரசாலையை வழிபடத் துவங்குவதன் மூலமாக பொருளாதாரத் தன்னிறைவை எட்டும் விதமாக வரங்களை அள்ளித் தருவாள்;


ஏற்கனவே,அன்னை அரசாலையை வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள்,இந்த நாளில் கூடுதலாக ஒரு முறை அல்லது கூடுதலாக ஒரு மணி நேரம் அன்னையின் 12 பெயர்களை ஜபிப்பது அவசியம்;


பிரபஞ்சத்தில் வாழ்ந்து வரும் அனைத்து உயிர்களுக்கும் வரங்களை அள்ளித்தரும் அன்னை,இந்த சுபநாளில் அளவற்ற வரங்களை தரத் தயாராக இருப்பாள்;யார் இன்று அன்னை அரசாலையை அதிகநேரம் அல்லது ஆழ்ந்த மனதுடன் துதிக்கின்றார்களோ,அவர்களுக்கு உடனடி நிவாரணம்,அவளின் அருட்பார்வையால் கிட்டும்;


பின்வரும் 12 பெயர்களை அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!) ஜபிக்க வேண்டும்;


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நி


இந்தப் பெயர்களுக்கு முன்பாக ஒம் என்ற மந்திரமும்,பின்பாக நமஹ என்ற மந்திரமும் அவசியமில்லை;அப்படியே இந்தப் பெயர்களை ஜபித்தாலே போதுமானது;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!

No comments:

Post a Comment