Friday, January 22, 2016

ஈசனை அடையும் வழிமுறைகள் எத்தனை?


ஈசனை அடையும் வழிமுறைகள் நான்கு!

1.பக்தியோகம்
2.ஞானயோகம்
3.கர்ம யோகம்
4.ராஜ யோகம்
இந்த நான்கு மார்க்கங்களில் எது ஒரு மனிதனுக்குக் கைகூடும் என்பது அந்த மனிதனின் பிறந்த ஜாதகத்தை வைத்தே கண்டறிய முடியும்;

சிலருக்கு குறிப்பிட்ட வருடங்கள் வரை மட்டுமே அருள் வாக்கு சொல்லும் ஆற்றல் இருக்கும்;அதையும் ஜோதிடத்தின் மூலமாக மட்டுமே கண்டறிய முடியும்;

வாஸ்து,சாமுத்ரிகா லட்சணம்,எண் கணிதம்,சரக்கலை,பஞ்சபட்சி சாஸ்திரம்,அருள்வாக்கு,சித்த மருத்துவம்,மூலிகைகளைக் கண்டறிதல்,மந்திரங்களை அறிதல்,ஜபித்தல் மற்றும் உபதேசித்தல் போன்றவை அனைத்துமே ஜோதிடத்தின் ஒரு அங்கமாக கலியுகத்துக்கு முந்தைய யுகம் வரை இருந்தன;இப்போது இவை ஒவ்வொன்றும் தனித் தனி கலைகளாகி விட்டன;

பக்தி மார்க்கமே நாம் வாழ்ந்து வரும் கலியுகத்திற்கு பொருத்தமானது;சராசரி மனிதர்கள் கோடிக்கணக்கானவர்களுக்கு ஜோதிடம் ஆன்மீகத்தின் நுழைவு வாசல்,முக்திக்கு இட்டுச்செல்லும் டார்ச் லைட் என்றே தெரியவில்லை;

பக்தி மார்க்கத்தில் தான் மந்திர ஜபம்,வீட்டிலேயே வழிபடுதல்,கோவிலில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட கடவுளை வழிபடுதல் போன்றவை வருகின்றன;தீமிதித்தல்,மாலையிட்டு விரதம் இருந்து பாதயாத்திரை சென்று இறை தரிசனம் செய்தல் இவைகள் எல்லாம் பக்தி மார்க்கத்தில் வரும்;

ஞான மார்க்கத்தில் தியானம்,யோகம்,யோகாசனம் போன்றவைகள் வரும்;இந்த மார்க்கம் இப்போது நலிவடைந்து வருகின்றது;
கர்ம யோகம் பற்றி நம்மில் பலருக்குத் தெரியவில்லை;நமக்கு 18 வயது ஆனதில் இருந்து நமது இறுதி நாள் வரையிலும் எந்த ஒரு புகழ் கிடைத்தாலும் அதனால் பெருமைப் படக்கூடாது;எந்த ஒரு அவமானம் கிட்டினாலும் அதனால் வருத்தப்படக் கூடாது;எல்லாம் ஈசன் செயல்;என்றோ அல்லது எல்லாம் அன்னை அரசாலை(வராகி) செயல் என்று ஒப்படைத்துவிட்டு நமது அடுத்த கடமையைச் செய்யச் சென்றுவிட வேண்டும்;சுருக்கமாக சரணாகதி தத்துவம்!

அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைய இதைவிட குறுக்கு வழி வேறு எதுவும் இல்லை;இதையே இணையம் வழியாக யாம் பரப்புகிறோம்;நேரில் சந்திப்பவர்களுக்குப் போதிக்கிறோம்;

ராஜயோகம் இதுவும் நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே கைகூடும்;

தினசரி மந்திரம் ஜபித்தல்
அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்லுதல்
துவாதசி நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்தல்
நமது ஜன்ம நட்சத்திர நாட்களில் குறிப்பிட்ட சிவாலயத்தில் அன்னதானம் செய்தல் மற்றும் அங்கே உறைந்திருக்கும் ஈசனுக்கு அபிஷேகம் செய்தல்
குறிப்பிட்ட விருட்சங்களை வளர்த்தல்
இவைகள் மட்டுமே நம்மை முக்திக்கு இட்டுச் செல்லும்;

யாராலும் எவரது தலையெழுத்தையும் மாற்றிவிட முடியாது;ஆனால்,அப்படி மாற்றிட அவர்களுடைய பிறந்த ஜாதகம் கைகொடுக்கும்;
நமது விதியை மாற்றிட நாம் தான் கொஞ்சம் கஷ்டப்படவேண்டும்;நாம் தான் குறிப்பிட்ட கடவுளை குறிப்பிட்ட வருடங்கள் அல்லது ஜன்மங்களுக்கு வழிபட வேண்டும்;

நமது ஜாதகம் என்பது என்ன தெரியுமா?
கடந்த ஐந்து மனிதப் பிறவிகளில் நாம் செய்த பாவ மற்றும் புண்ணியச் செயல்களின் தொகுப்பு!!!

அதில் இருக்கும் பாவ வினைகள் நம்மைத் தாக்கும் முன்பே கண்டறிந்து அதில் இருந்து மீள எப்படி எந்த ஈசனைச் சரணடைய வேண்டும் என்பதை விளக்கும் தெய்வீகக் கலையே ஜோதிடம்;

இந்த பிரபஞ்சத்தின இயக்குவது மஹா கால பைரவப் பெருமான்!
அவரது மூச்சுக்காற்றே பஞ்சாங்கம்!
அவரை தினமும் தொழ வேண்டியது ஜோதிடர்களின் கடமை!!

அவரது துணைவியாக இருந்து அவரையே இயக்கும் அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைவதே நமது பிறவிகளின் நோக்கம்!!!

அதனால் தான் ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்;
உங்கள் விதியை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று தங்களிடம் வேண்டுகிறோம்;

இப்படிக்கு

கை.வீரமுனி. . . ஸ்ரீவில்லிபுத்தூர். 27 வருட ஜோதிட ஆசிரியர்;ஜோதிட எழுத்தாளர்,கலையுலக ஜோதிடர் 9092116990   9364231011

No comments:

Post a Comment