Monday, September 17, 2012

மனமிருந்தால் பாலைவனமும் பழத்தோட்டமாகும்!!!




மஸ்கட்டில் பல வருடங்களாக பணிபுரிந்துவந்த பட்டுக் சிங் ஜடேஜா தனது சொந்த ஊரான மோட்டாமாவ்தான் என்ற கிராமத்துக்குத் திரும்பினார்.அப்படி திரும்பியபோது அவருக்கு வயது 51.திரும்பிய வருடம் 1990.மோட்டாமாவ்தான் குஜராத் மாநிலத்தில் புஜ் அருகில் இருக்கிறது.இது ஒரு வறண்ட களர்பூமியாகும்.இங்கே இவர் 50 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.இந்த நிலத்தை விளைநிலமாக மாற்றிட இவருக்கு மூன்றாண்டுகள் ஆயின.அந்த பகுதியிலேயே விளையாத கேஸர் என்ற ரகத்து மாம்பழக்கன்றுகள் நூறு வாங்கி பயிரிட்டார்.நல்ல விளைச்சல் உண்டானது;எனவே,மேலும் நிலம் வாங்கினார்.தற்போது 240 ஏக்கரில் அவரது கேஸர் மாம்பழத்தோட்டங்கள் பழுத்து,வெளிநாடுகளுக்குப் பறக்கின்றன.




இவர் தமது நிலத்தை விளைநிலமாக மாற்றிட ஒரு கிராம் கூட ரசாயன உரத்தைப் பயன்படுத்தவில்லை;ஆர்கானிக் ஃபார்மிங் எனப்படும் இயற்கை முறையிலான விவசாய வழிமுறையைப்பின்பற்றினார்.இன்று இவர் ஒரு வருடத்துக்கு ஒரு லட்சம் டன் கேஸர் மாம்பழங்களை விளைவிக்கிறார்;இதில் பத்து சதவீதம் ஏற்றுமதியாகிறது;2001 ஆம் ஆண்டில் கட்ச் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது;அதன்பிறகு,செயற்கைக்கோள் உதவியுடன் தமது நிலத்தில் எந்தப் பகுதியில் நிலத்தடிநீர் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.இதன் மூலமாக தோட்டப்பயிர் சாகுபடியை இவரால் பலமடங்கு அதிகரிக்கமுடிந்தது;


நன்றி:இந்தியா டுடே 5.7.12

No comments:

Post a Comment