Wednesday, September 19, 2012

விநாயகர் அருளை விரைவாகத் தரும் நவவிநாயகர் வழிபாடு!!!





முழு முதற்கடவுளாம் விநாயகர்,கணபதி,பிள்ளையாரின் ஆசியோடும்,குருகணபதியின் வழிகாட்டுதலோடும் இந்தப் பதிவினை ஆன்மீகக்கடல் வாசகப் பெருமக்களுக்கு சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறேன்!!!



இன்று 19.9.2012,நந்தன வருடம் புரட்டாசி மாதம் மூன்றாம் நாள்,தேய்பிறை சதுர்த்தி ஆகும்.இன்று நமது வீட்டில் மஞ்சளில் ஒரு விநாயகரை பிடிக்க வேண்டும்;அதே போல சந்தனத்தில் ஒரு விநாகயரையும்,குங்குமத்தில் ஒரு விநாயகரையும்,விபூதியில் ஒரு விநாயகரையும்,பசுஞ்சாணத்தில் ஒரு விநாயகரையும்,வெல்லத்தில் ஒரு விநாயகரையும்,வாழைப்பழத்தில் ஒரு விநாயகரையும்,பேரீட்சைப்பழத்தில் ஒரு விநாயகரையும்,வெண்ணெய்யில் ஒரு விநாயகரையும் பிடிக்க வேண்டும்.



கொஞ்சம் மஞ்சளை எடுத்து நமது மூன்று விரல்களால் பிடித்தாலே அந்த மஞ்சளில் விநாயக சக்தி வந்துவிடும்.இதேபோல ஒன்பது விநாயகர்களை மேற்கூறியவாறு பிடிக்க வேண்டும்;எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை;
இந்த ஒன்பது விநாயகர்களுக்கும் தனித்தனியே மோதகம் எனப்படும் கொழுக்கட்டைகள்,சுண்டல்களை படையலிடவேண்டும்;ஒன்பது குத்துவிளக்குகளில் தீபமேற்ற வேண்டும்;ஒன்பது முறை விநாயகர் அகவல் பாட வேண்டும்;தவிர,விநாயகரது பாடல்களையும் பாடலாம்;ஜபிக்கலாம்;இன்று எப்போது வேண்டுமானாலும் இந்த வழிபாட்டைச் செய்யலாம்;ஏறு பொழுது எனப்படும் காலை நேரங்கள்,இறங்குபொழுது எனப்படும் மதியம்,மாலை மற்றும் இரவு நேரம் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை;




இது போல இன்று புதன் கிழமை,நாளை வியாழக்கிழமை,நாளை மறு நாள் வெள்ளிக்கிழமை என்று மூன்று நாட்களுக்கு தினமும் ஒன்பது முறை விநாயகர் அகவல் மற்றும் விநாயகர் பாடல்களைப் பாட வேண்டும்;வழிபாடு முடிந்த ஓவ்வொரு நாளும் மோதகங்களையும்,சுண்டல்களையும் அருகிலிருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விநியோகிக்க வேண்டும்;
மறு நாள் புதிய மோதகங்களையும்,புதிய சுண்டல்களையும் ஒன்பது விநாயகர்களுக்கும் படைக்க வேண்டும்.
நான்காம் நாளான சனிக்கிழமை 22.9.2012 அன்று அருகில் இருக்கும் ஆறு அல்லது கிணறு அல்லது கடல் அல்லது நதியில் இந்த ஒன்பது விநாயகர்களையும் கரைக்க(விஜர்சனம்) வேண்டும்.




இதன் மூலமாக கேது திசை நடைபெறுபவர்களுக்கும்,கேது சார திசை மற்றும் கேதுவுடன் சேர்ந்த கிரகங்களின் திசை நடைபெறுபவர்களுக்கும், ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி, சனி திசை நடைபெறுபவர்களுக்கும் வர இருக்கும்,வந்து கொண்டிருக்கும் துயரங்களை விநாயகப்பெருமான் நீக்கிவிடுவார்;மேலும் விநாயகரின் அருள் முழுமையாகக் கிட்டும்;ஜீவகாருண்யம் ஏற்படும்;முன்னோர்களின் அருளாசி கிட்டும்;முன்னோர்களின் சாபம் இருந்தால் அது அடியோடு விலகிவிடும்;


இந்த நந்தன வருடத்தில் புதன் கிழமையும்,விநாயகர் சதுர்த்தியும் வந்திருப்பதால் இந்த வழிமுறைப்படி ஒன்பது விநாயகர் வழிபாடு செய்து வளமோடு வாழ்க! அருள் பல பெறுக!!!


படங்களில் காட்சியருள்வது தங்க விநாயகர்,          ப்ளாட்டின விநாயகர்,வைர விநாயகர்!!!


ஓம்சிவசிவஓம்

4 comments:

  1. ஒன்பது குத்து விளக்கிற்கு பதில் அகல் பரவாயில்லை தானே ?

    ReplyDelete
  2. 19.9.2012 valar pirai.. theei pirai yendru thavaraga ullathu..

    ReplyDelete
  3. சில நேரங்களில் இப்படி தவறு நிகழ்ந்துவிடுகிறது.மன்னிக்கவும்.வளர்பிறைதான்!!! இனி இதுபோல் தவறு நிகழாது.

    ReplyDelete