Thursday, September 15, 2011

அணுஆட்டம்:ஜீ.வி.தொடர்








பொதுமக்கள் பணத்தைத் திருடுவதைத் தவிர,பிற துறைகள் அனைத்திலும் இந்தியா பின் தங்கியேதான் இருக்கிறது.ஒரே நாளில்(செப் 7,2011) இந்தியத் தலைநகர் டெல்லியில் தீவிரவாதக் குண்டுவெடிப்பும்,4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் நிகழ்ந்திருக்கிறது.பாதுகாப்பின்மைக்கு இதைத் தவிர,வேறு உதாரணம் தேவையில்லை.



‘யாரிடம் சொல்லி அழ?’ என்று தலைப்பிட்ட 8.6.2011 தலையங்கத்தில் தினமணி நாளிதழ் சொல்லிற்று. ‘இந்தியாவின் அணு உலைக்கூடங்கள் பாதுகாப்பற்றவை என்பது மட்டுமல்ல;இவற்றுள் தீவிரவாதிகள் புகுந்து அணுஆயுதம் செய்வதற்கான மூலப்பொருள்களைத் திருடுவது,வேறு எந்த நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் எளிது.இதை மும்பைத்தாக்குதல் தொடர்பான அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி அளித்துவரும் வாக்குமூலத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.இவ்வளவு இருந்தும் இந்திய அரசு, ‘பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரிசெய்துவிட்டால் போதுமானது.அணு உலைக்கலன்களால் பிரச்னை இருக்காது’ என்று சொல்கிறது எவ்வளவு பொறுப்பற்றத்தனம்?



நிலநடுக்கமும் ,தீவிரவாதக் குண்டுவெடிப்பும் நடந்து முடிந்த கையோடு,பகல் 12.30 மணிக்கு ‘அணு பாதுகாப்பு ஒழுங்காற்று அதிகாரச் சட்டம் 2011’ எனும் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள்.AERB எனும் அணு சக்தி ஒழுங்காற்றுவாரியத்திற்குப்பதிலாக இந்த புதிய அதிகார அமைப்புத் தோற்றுவிக்கப்படுகிறது.பழைய கள். . .புதிய மொந்தையில்!



பிரதமரும்,சுற்றுச்சூழல்,வெளிவிவகாரம்,நல்வாழ்வு,உள்துறை,அறிவியல்,தொழில்நுட்ப அமைச்சர்களும் அணுபாதுகாப்புக்குழு என்ற பெயரில் இயங்குவார்கள்.இதன் கீழே ஒழுங்காற்று அதிகார அமைப்பு இயங்கும்.இதன் உறுப்பினர்கள்,தலைவர் அனைவருமே அணு உலை,அணு சக்தி வல்லுநர்களாக இருப்பார்கள்.இந்த அமைப்பு திறந்தவெளித் தன்மை கொண்டு இயங்குமாம்.ஆனால்,முக்கியமான தகவல்களை யாருக்கும் தராதாம்.தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அமைப்பு தற்போது செய்து கொண்டு இருக்கும் தவறுகளையே மீண்டும் செய்யலாம்.



ஜீனியர் விகடன் பக்கம் 30,31,18.9.2011.



***அணு உலை அமைப்பதிலும்,பராமரிப்பதிலும் இந்தியா எப்படியெல்லாம் சொதப்பி வருகிறது என்பதை அறிய வாரம் இரு முறை வரும் ஜீனியர் விகடன் இதழில் வெளிவரும் அணு ஆட்டம் என்னும் தொடரைப் படியுங்கள்.



ஆன்மீகக் கடலின் கருத்து: இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கியவனுக்கே இன்னும் தூக்கு போடவில்லை.போட்டுவிட்டால் இந்திய முஸ்லீம்கள் காங்கிரஸீக்கு ஓட்டு போடமாட்டார்கள் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சிந்திக்கிறது.டூர் வருவது போல, பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்கு வந்து குண்டுகள் வைத்து நமது சகோதர சகோதரிகளைக் கொன்றுகொண்டே இருக்கிறார்கள்.இதையே ஒழுங்காகக் கட்டுப்படுத்த துப்பில்லை.சீரிஸான அணு உலையை இந்த அரசு எப்படி பாதுகாக்கும்?






No comments:

Post a Comment