Tuesday, April 12, 2011

ஊழலுக்கு எதிரான அறப்போருக்கு ஆதரவு தாருங்கள்;இந்தியா வல்லரசாகுதோ இல்லியோ,இந்தியர்களின் வறுமை நீங்க வேண்டும்.




பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே அவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் ஒரே நல்லரசு மற்றும் வல்லரசு இந்தியாவாகிய நமது நாட்டில் ஊழல் செல்போன் அலைகளைப் போல எங்கும் பரவியிருப்பதை எதிர்த்துப் போராட,நமது தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் அரசியல் ஆயுதமான உண்ணாவிரதப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

நாடு முழுக்க ஆதரவு குவிவதைக் கண்டு ஊழல் காங்கிரஸ் அரசு நடுங்கிப் போய்விட்டது.

நேற்றோடு அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துவிட்டார்.இருந்த போதிலும் நாமும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாமா?

02261550789 என்ற எண்ணுக்கு நமது செல்லிலிருந்து ஒரு நழுவிய அழைப்பு கொடுப்போம்;(இதற்குக் கட்டணம் கிடையாது)இந்த ஒரே ஒரு நழுவிய அழைப்பின் மூலமாக நமது ஊழலுக்கு எதிரான ஆதரவு பதிவாகிவிடும்.இப்படி பதிவாகியதும்,நமது செல்லுக்கு ஒரு குறுந்தகவல் வரும்.

எனது கருத்து என்னவெனில்,இந்தியாவை நாசமாக்கிட,சீனாவோ,சீனாவின் வால்களாகிய 12 கம்யூனிஸ்டுகளோ,அமெரிக்காவோ,பங்காளி பாகிஸ்தானோ,தம்பி இலங்கையோ வேண்டாம்.ஊழலில் திளைக்கும் நமது பேராசைத் தலைவர்களே போதும்.இந்த நிலையை மாற்றிட நம்மாலான ஆதரவினை ஒரே ஒரு நழுவிய அழைப்பின் மூலமாகத் தருவோம்.

No comments:

Post a Comment