Sunday, April 10, 2011


பிதுர்கள் உலகமும் நமது கடமையும்
உலகம் படைக்கப்பட்டதோ,அன்றே பித்ருக்களின் உலகத்தில் பசுக்கள்,ருத்திரர்கல்,ஆதித்யர்கள் என்ற 31 பித்ரு தேவதைகளும் சிருஷ்டிக்கப்பட்டனர்.மகத்தான சக்தி பெற்ற இந்த தேவதைகள் பித்ருக்களின் உலகில் எழுந்தருளியுள்ளனர்.

நாம் மறைந்த முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம்,திதி,சிரார்த்தம் ஆகியவற்றின் தெய்வீக சக்தியை அன்னமாக(உணவாக)மாற்றி மறைந்த நமது முன்னோர்களுக்கு இந்த தேவதைகள் அளிக்கின்றனர்.இவற்றைப் பித்ரு தேவதைகளின் மூலமாகப் பெற்றுக்கொள்ளும் நமது மூதாதையர்கள் மிகவும் மகிழ்ச்சியையும்,திருப்தியையும் அடைந்து நம்மை ஆசிர்வாதிக்கின்றனர்.
இவ்வாறு நமது பித்ருக்கள் நமக்கு அளிக்கும் ஆசிர்வாதம் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன்கலையும்,ஒரு லட்சம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்த பலன்களையும்,நூறு ஏழை கன்னியர்களுக்கு விவாகம் செய்து கொடுத்த (கன்னிகாதானம் செய்வித்த)புண்ணியத்தையும்,கங்கை நதியில் நீராடும் புண்ணியப்பலன்களையும்,அனாதையாக இறந்தவர்களுக்குச் செய்யும் அந்திமக்கிரியைகளினால் ஏற்படும் புண்ணியப்பலனையும் அளிக்கிறது.
ஆதலால்,மிக எளிய,ஆனால் அளவற்ற புண்ணிய பலன்களை நமக்கு உடனுக்குடன் அளிக்கக் கூடிய பித்ரு பூஜையை நாம் விட்டுவிட்டால் மேற்கூறிய அரிய நற்பலன்களை நாம் இழக்க வேண்டியிருக்கும்.எனவே,திலா ஹோமம் செய்ய வேண்டியவர்கள்(உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,3,5,9 ஆம் இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால்) உடனடியாகச் செய்யவும்.
நன்றி:குமுதம் ஜோதிடம் 28.3.2003,பக்கம்12.
நடைமுறை அனுபவத்தில்,பித்ரு பூஜை,திலா ஹோமம்,சிரார்த்தம்,திதி தொடர்ந்து செய்துவருவதால் நமக்கு திடீரென ஏற்பட இருக்கும் அவமானங்கள்,விபத்துக்கள்,ஏமாற்றங்கள் நம்மை அண்டாமல் சூட்சுமமாக நமது பித்ருக்கள் காப்பாற்றிவிடுகின்றனர்

1 comment:

  1. avargal marupiravi eduthirunthal.......epadi (Karu Naga)

    ReplyDelete