Wednesday, April 20, 2011

பண நெருக்கடியிலிருந்து மீள உதவவும்,செய்யும் தொழிலில் ஏற்படும் விழ்ச்சியைத் தடுக்கவும்,நமது கர்மங்களை அழித்தவாறே,நமக்குச் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு


எனது குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆசியோடும்,வழிகாட்டுதலோடும் இந்த கட்டுரையை மஹாவில்வம்       வலைப்பூ வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.



பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த பைரவர் வழிபாட்டினை மீண்டும் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.இவர் சுமார் 40 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டு தனது அனுபவங்களால் பல்லாயிரக்கணக்கான மக்களை மாந்திரீக பாதிப்பிலிருந்து நீக்கியவர்;கடுமையான கர்ம வினைகளைப் போக்கி பலரது வாழ்க்கையில் நிம்மதி,செல்வ வளம் என்னும் தீபங்களை ஏற்றியவர்.

அவரது லட்சியங்கள் மூன்று:முதன்மையானது ஓம்சிவசிவஓம் மந்திரத்தைப் பரப்புதல்

அடுத்தது பைரவ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணரச்செய்வது

மூன்றாவது அன்னதானத்தின் பெருமைகளை நித்யக் கடமையாக்குவது

இறுதியாக ஆன்மீக ஆராய்ச்சி செய்பவர்களுக்கு தேவையான உதவிகள்,வழிகாட்டுதல்கள் செய்து அவர்களது முதுமைக் காலத்தில் கஷ்டமில்லாமல் வாழ வைப்பது.

இதில் முதல் மூன்று லட்சியங்களை கை.வீரமுனியாகிய நான் ஆன்மீகக்கடல் வலைப்பூ மூலமாகவும்,பல ஜோதிட மாத இதழ்கள் மூலமாகவும் பரப்பத் துவங்கியிருக்கிறேன்.



இதில் அடுத்த கட்டமாக பைரவர்களில் வீட்டில் வைத்து வழிபடக்கூடியவரான சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினைப் பிரபலப்படுத்துவது என முடிவு செய்து,எனது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம்  அவர்களின் அனுமதியைக் கேட்டேன்.அவர் எனக்கு பரிபூரணமாக ஆசிர்வாதித்து அனுமதித்தார்.



இன்னும் பல ஆன்மீக சூட்சும ரகசியங்கள் நமது மஹாவில்வம் வலைப்பூவில் வெளிவர விருக்கின்றன.



சொர்ண ஆகர்ஷண பைரவரை எப்படி வழிபட வேண்டும்?என்ற கட்டுரை நமது வலைப்பூவில் மலர்ந்துவிட்டது.சொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோ தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டுமே கிடைப்பதாலும்,அவரை வீட்டில் வைத்து எப்படி வழிபடுவது? என்ற விபரம் மிகச் சிலரிடம் மட்டுமே இருப்பதாலும்,சொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவும்,அவரை வீட்டிலேயே வைத்து வழிபடும் முறையை அச்சடித்து போட்டோவுடன் விநியோகிக்க முடிவு செய்துள்ளேன்.

90 நாட்கள் தொடர்ந்து நமது வீடு அல்லது அலுவலகத்தில் சொர்ண பைரவரின் போட்டோவை வைத்து வழிபாட்டு முறையைப் பின்பற்றினால்,எந்த ஜாதகராக இருந்தாலும் அவரது பண நெருக்கடி தீரத்துவங்கும்.

வேலையில்லாதவர்களுக்கு நல்ல அவரவரின் திறமை,தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.



பலர் கொடுத்த கடனை திருப்பிவாங்கிட முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பர்;அவர்களுக்கு வராகடன் வசூலாகும்;

செய்தொழிலில் திடீரென நெருக்கடியோ வீழ்ச்சியோ துவங்கியிருக்கும்;அந்த நிலையை மாற்றி தொழிலில் படிப்படியான எழுச்சி உண்டாகும்.



சொர்ண பைரவரின் போட்டோ(சிறப்பான பிரேம் போட்டது),சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை தேவைப்படுவோர் எமது வாட்ஸ் அப் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்;






ஏற்கனவே, சனிப்பிரதோஷம்,மாத சிவராத்திரி நாட்களில் தமிழ்நாட்டில் புராதனமான சிவாலயங்களில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.ஜோதிட இதழ்கள்,ஜனரஞ்சக பத்திரிகைகள்,வட்டார பத்திரிகைகள்,எனது நேரடி ஜோதிட சீடர்களால் ஓம்சிவசிவஓம் மந்திரமும்,பைரவ வழிபாட்டு முறைகளும் பரப்பட்டு வருகின்றன.



தவிர,மஹாவில்வம் வலைப்பூவில் சொல்லப்பட்ட பல ஆன்மீகப் பரிகாரங்கள்,வழிபாட்டு முறைகள் என்னால் அல்லது என்னிடம் ஜோதிடம் பார்த்தவர்களால் பரிசோதனை செய்யப்பட்டப் பின்னரே,மஹாவில்வம் வலைப்பூவில் வெளியிடப்பட்டு வருகின்றன.எனவே, நீங்கள் உங்களது வாழ்க்கையில் நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் (மஹாவில்வம் வழிகாட்டுதலின் படி) வாழ்க வளமுடன்!!!

ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. வாழ்க வளமுடன்!!!

    ஓம்சிவசிவஓம்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றிகள் சகோதரி!!!

    ReplyDelete