Thursday, April 7, 2011

அமெரிக்காவின் ஆயுத விற்பனையும் அதில் ஒளிந்திருக்கும் நரித்தனமும்



எப்போதுமே இராணுவ ஆயுதங்கள்,தளவாடங்கள்,விமானங்கள் வாங்குவதில் அமெரிக்காவை நம்புவதை விட,ரஷ்யாவிடம் ஒப்பந்தம் போடுவது நன்று.கடந்த கால வரலாறு இதை அடிக்கடி நிரூபித்திருக்கிறது.

இன்று கணினி வைரஸ்களின் முக்கியப்பணியே உளவு வேலை பார்ப்பதுதான்.

கணினி நிபுணர்களுக்கு ட்ரோஜன் குதிரைகள் பற்றித் தெரியும்.புராதன காலத்தில் கிரேக்கப்போரின் போது எதிரிகளின் கோட்டையை பல மாதங்கள் முற்றுகையிட்டு வெல்ல முடியாமல்,மிகப் பெரிய மரக்குதிரையை தயார் செய்து அந்த கோட்டையின் முன்பாக வைத்துவிட்டுச் சென்றுவிடுவர்.உடனே,கோட்டைக்குள் இருப்பவர்கள் அந்த மகா குதிரையின் அழகில் மயங்கி கோட்டைக்குள் கொண்டு சென்றுவிடுவர்.விளைவு? கோட்டைக்குள் சென்றதும் குதிரைக்குள் ஒளிந்திருந்த அதிரடிப் படைவீரர்கள் கோட்டையை கைப்பற்றிவிடுவர்.இதே டெக்னிக்கில் தான் இன்று கணினி வைரஸ் உருவாக்கப்படுகிறது.

உதாரணமாக,ஒரு பத்திரிகையின் இணையதளத்துக்குள் இம்மாதிரியான வைரஸ் நுழைந்துவிட்டால்,அந்தப் பத்திரிகையின் அலுவலகத்தில் நடக்கும் விஷயங்கள்,அந்த பத்திரிகையை எந்தெந்த நாட்டு வாசகர்கள் எவ்வளவு பேர்கள் வாசிக்கிறார்கள்? போன்ற அதிமுக்கிய ரகசியங்களை வைரஸை அனுப்பியவர்களுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கமுடியும்.இதன் மூலமாக அந்த பத்திரிகையின் வளர்ச்சியை நிர்மூலமாக்கிட முடியும்.

இதே வேலையைத் தான் இந்தியாவின் ஏர்டெல் செல் போன் நிறுவனம் தனது தகவல் தொடர்பு செயற்கைக் கோள் மூலமாக விடுதலைப்புலிகளை சிங்கள அரசுக்குக் காட்டிக்கொடுத்தது.

கணினி கருவிகளில்(சிப்களில்)எம்படேடு கிருமிகளை வைத்துவிட்டால் யார் தகவல் சேகரிக்கிறார்கள் என்பதே தெரியாது)

அமெரிக்க ராணுவ தளவாடங்களில் உள்ள கணினி சிப்களில் பெண்டகனின் ஆதரவு எம்படேடு வைரஸ்கள் பதிக்கப்பட்டே உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.எனவே,அமெரிக்க ராணுவ தளவாடங்களை வாங்கும் நாட்டின் ராணுவத்தின் முதுகெலும்பை இதன் மூலம் முறித்து,எதிரிநாட்டுக்கு வெற்றியை அமெரிக்காவால் தர முடியும்.

அமெரிக்காவிடம் ராணுவ தளவாடங்கள் வாங்கிய நாடுகளுக்கு போர் சமயத்தில் இப்பேர்ப்பட்ட சிக்கல்கள் உருவாகி,அந்த நாடுகளின் வரலாறே மாறிப்போனது.இதை யாராலும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது.ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கும்போதும்,வாங்கியப்பின்னரும் இப்பேர்ப்பட்ட சிக்கல்கள் உருவானதில்லை;

2010 முதல் 2015 வரை இந்தியாவை கட்டாயப்படுத்தி 1,00,000 கோடி ரூபாய்களுக்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிட நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு,ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.

இப்போது சொல்லுங்கள்: அமெரிக்கா இனியும் உலக வல்லரசாக இருக்கணுமா? அமெரிக்காவின் அடிவருடிகளான மன்மோகன்,பசி,மண்டேக்சிங்,சோனியா இந்தியாவை ஆளணுமா?

தகவல் நன்றி:மக்கள் குரல் 26.10.2010 தலையங்கம்

2 comments:

  1. avanga polaikka therinjavanga,,,naama apdi illala...

    ReplyDelete
  2. பணத்திற்காக நாட்டையே விற்கும் துரோக குப்பல் தான் இப்போது நாட்டை ஆண்டுகொண்டு இருக்கிறது. இத் தகவல் இதை மேலும் உறுதி செய்கிறது
    --

    ReplyDelete