Wednesday, December 22, 2010

thanks to dinamalar 22.12.2010

கம்யூ.,களின் புது சித்தாந்தம்!















அடுத்த ஆண்டு ஏப்ரலில், கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மாநிலத்தில் உள்ள முக்கிய மார்க்சிஸ்ட் தலைவர்கள் அனைவரும், இப்போது அங்குள்ள சர்ச்சுகளில் தான் காட்சி தருகின்றனர். ஆம்... சர்ச்சுகளில் உள்ள பாதிரியார்களை சந்தித்துப் பேசி வருகின்றனர். பாதிரியார்களிடம் தங்களுக்குள்ள நட்பை இன்னும் ஆழமாக்கி வருகின்றனர்.கேரளாவில் உள்ள சிரோ-மலபார் சர்ச்சுக்கும் மார்க்சிஸ்ட்களுக்கும் எப்போதும் ஆகாது.சிறுபான்மையினர் ஆதரவை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளில் இப்போது, கேரள மார்க்சிஸ்ட்கள் இறங்கியுள்ளனர்.கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், திருச்சூரில் உள்ள சிரோ-மலபார் பிஷப் இல்லத்தில்தான் அடிக்கடி காட்சி தருகிறார். அங்குள்ள ஆர்ச்பிஷப் மார் ஆன்ட்ரிவ்ஸ் தாழத்து தன் 60ம் பிறந்த நாளிலும், பிஷப் மார் ஜேகப் தூங்குலியின் 80ம் பிறந்த நாளிலும், பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். மார் ஜேகப், இடதுசாரிகளை கடுமையாக விமர்சனம் செய்பவர்.நண்பர்களாக இல்லாவிட்டாலும், எதிரிகளாக இருக்கக் கூடாது என்பது கம்யூனிஸ்டுகளின் லேட்டஸ்ட்


சித்தாந்தம்.
கடவுள் நம்பிக்கை இல்லாத ரஷ்யா 16  துண்டுகளாக  உடைந்தது. எனவே அதிகாரம் கிடைக்க கொள்கைகளை இழந்து விட்டனர் தோழர்கள் !!!







No comments:

Post a Comment