Monday, November 15, 2010

kubera girivalam at 4.12.2010 saturday

குபேரகிரிவலம் 4.12.2010 சனிக்கிழமையன்று வருகிறது.
செல்வ வளம் தரும் குபேர கிரிவலம் 4.12.2010 சனிக்கிழமை

ஒவ்வொரு தமிழ்வருடமும் கார்த்திகைமாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று வானுலகிலிருந்து நமது பூமிக்கு செல்வத்தின் அதிபதியாகிய குபேரபகவான் வருகிறார்.அன்று தினப்பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6.00 மணிவரை திருவண்ணாமலையிலுள்ள குபேரலிங்கத்திற்குப் பூஜை செய்கிறார்.அப்படி பூஜை செய்து முடித்தப்பின்னர்,இரவு 7.00 மணியளவில் அவர் குபேரலிங்கத்திலிருந்து கிரிவலம் செல்லுகிறார்.

இதேபோல்,நாமும் கார்த்திகைமாதம் வரும் தேய்பிறை சிவராத்திரியன்று (4.12.2010 சனிக்கிழமை) மாலை 4.30க்குள் திருவண்ணாமலையிலுள்ள குபேரலிங்கத்திற்கு வந்தடைவோம்.மாலை 6.00 மணிவரையிலும் குபேரலிங்கத்திடம் நமது கோரிக்கைகளை மானசீகமாக வைப்போம்;இரவு 7 மணியளவில் குபேரலிங்கத்திலிருந்து கிரிவலம் புறப்படுவோம்;கிரிவலம் நள்ளிரவில் முடியும்.
திருஅண்ணாமலை அருளும்,சித்தர்களின் ஆசியும்,குபேர சம்பத்தும் பெறுவோம்.

இந்த தெய்வீகரகசியத்தை நமக்கு வெளிப்படுத்திய ஜோதிடமேதை,ஜோதிட உலகின் துருவநட்சத்திரம், டாக்டர் பி.எஸ்.பி.ஐயாவுக்கு நாம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்;

மழைக்காலமாக இருப்பதால் அதற்குத் தகுந்த முன்னேற்பாடுகளுடன் 4.12.2010 சனிக்கிழமையன்று திருவண்ணாமலைக்கு வருக! வருக!! வருக!!! குபேர சம்பத்து பெறுக!!!

No comments:

Post a Comment