Tuesday, July 20, 2010

இந்துக்குடும்பங்கள் எப்படிச் சிதைகின்றன? பாகம் 4

இந்துக்குடும்பங்கள் எப்படிச் சிதைகின்றன? பாகம் 4

அவர் பெயர் சுந்தரம். அந்த சுந்தரத்துக்கு வயது 35.(கி.பி.1980 ஆம் வருடத்தில்).வேலை பார்த்துதான் குடும்பம் ஓடுகிறது.இரண்டு குழந்தைகள்.பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போயிருக்கிறார்.வேலை செய்யுமிடத்தின் வழியாக ஒரு பெண்மணியை பார்வையால் சந்தித்து,சில மாதங்களில் வார்த்தைகளால் கருத்துப்பரிமாறி,உடலால் ஒன்றாகிவிட்டனர்.
அப்படி ஒன்றானபின்னர்தான் தெரிந்தது.அந்தப் பெண்மணி தனிமையில் வாழும் கோடீஸ்வர விதவைப்பெண் என்று!
40 வயது வரை கி.பி.1985 வரையிலும் சுந்தரம் தன்னைவிட மூத்த அந்த கோடீஸ்வர விதவைக்கு சுகம் தந்துகொண்டே இருந்திருக்கிறார்.அந்த கோடீஸ்வர விதவையோ, சுந்தரத்துக்கு தனது செல்வ வளத்தில் கிள்ளிக் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறாள்.இந்த கிள்ளல் பணமே இவருக்கு பெரும் தொகையாக இருந்திருக்கிறது.
ஐந்து வருடங்களில் இவருக்கு அந்த விதவை தந்த தொகை 3 கோடிகளைத் தொடும்.கி.பி.1985 ஆம் ஆண்டில் 3 கோடி என்பது எவ்வளவுதொகையாக இருக்கும்?
பார்த்தார் சுந்தரம்! ஒரு கல்யாண மண்டபம்,ஒரு சரக்குப் போக்குவரத்து,ஒரு வாடகைக் குடியிருப்பு(சுமார் 25 தனி வீடுகள்,ஒரு கல்லூரி கட்டிவிட்டு,ஹாயாக உட்கார்ந்தே சம்பாதிக்க ஆரம்பித்தார்.ஐந்துவருடங்களில் அந்த கோடீஸ்வர விதவைக்கு இந்த காமசுகம் கசக்க ஆரம்பிக்க,இவரும் உனது பெயரில் கல்லூரி ஆரம்பித்திருக்கிறேன்.ஒரே ஒரு முறை நீ வந்து எனது கல்லூரியில் தாளாளர் (கரஸ்பாண்டன் ட்) அறையில் வந்து அமர்ந்து ஆரம்பித்துவிட்டுப்போ என கெஞ்சினார்.
கவுரவத்தைத் தரும் தனது நிழல்கணவனின் ஆசைக்காக வந்த அந்த கோடீஸ்வர விதவை,மேலும் ஐம்பது லட்சரூபாயை கரஸ்பாண்டன் ட்டின் அறையின் லாக்கரில் தனது இறுதிப் பரிசாக வைத்துவிட்டு,ஒருநாள் முழுக்க கல்லூரியை நிர்வகித்துவிட்டு(?)ப் போய்விட்டார்.

இப்போது காலச்சக்கரம் சுழல்கிறது.கி.பி.1998!
சுந்தரத்தின் ஆசை மகள் பருவமடைந்து,கல்லூரி மாணவியாகிவிட்டாள்.டியூசன் போன இடத்தில்,அவளது ஜாதியைச்சேர்ந்த ஒரு ஏழை மாணவனுடன் காதலாகி,ஒருவருக்குள் ஒருவர் கரைந்து போனார்கள்.
ஒரே வருடத்தில் கல்யாணம் முடித்தே ஆகவேண்டிய முடிவுக்கு வந்தனர்.சுந்தரத்தின் மகளை விட அந்த காதலனின் வயது 4 வருடங்கள் குறைவு என்பதையும் அறியவும்.

3 கோடி ரூபாய்கள் தற்போது பத்து கோடிகளைத் தாண்டியதால்,சுந்தரம் சூப்பர் சுந்தரம் என்ற அடைமொழியோடு மாநிலக் கட்சியின் மாவட்டச்செயலாளரானார்.தம்பியை எம்.பி.யாக்கினார்.
ஓடிப்போன மகளை அரசியல் செல்வாக்கு,போலீஸ் செல்வாக்கு, தனது அடியாள் பலத்தோடு தேடத்துவங்கினார்.
இவரது ஒவ்வொரு மூவ்மென் டும் சுந்தரத்தின் மகளுக்குத் தெரிய,அவளோ போலீஸையே மிரட்டத் துவங்கி விட்டாள்.
முடிவில் சுந்தரத்தால் தனது மகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை; அந்த மாணவன், சுந்தரத்தின் மருமகனாகிவிட்டான்.போன மாதம் ஜீலை,2010.தனது செல்வ மகளின் குழந்தைகளைப் பார்த்துப் பூரித்துப் போனார் சுந்தரம்.
தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை,தனது மகளுக்கு சரிபாதியாக கொடுத்துவிட்டார்.தற்போது,அந்தக் கல்லூரியை அந்த சுந்தரத்தின் மகள் நிர்வகித்துவருகிறார்.சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தை மருமகன் நிர்வகித்துவருகிறார்.சுபம்.

இதை ஜோதிட ரீதியாகவும் விவரிக்கலாம்;ஒரு தனிமனித பார்வையில் விவரித்தால்தான் நமது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்குப் புரியும்.

2 comments:

  1. தொடர் நன்றாக உள்ளது. பரிகாரங்களைப்பற்றி எழுதவும் நன்றி ராஜேஷ்

    ReplyDelete
  2. பரிகாரம் என்பது முறையற்ற உறவுகளைத் தவிர்க்கவும்.முறையற்ற வழிகளில் சம்பாதித்துச் சேர்த்தபணத்தை அனாதைகள் ஆசிரமம்,கோவில்களில் அன்னதானம்,ஏழைப் பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் போன்றவை.இப்படி எழுதுவது சுலபம்.செயல்படுத்துவதற்கு பொறுமையைக் கையாளவேண்டும்.
    எப்படி ஏமாற்றுவதற்கு அதிக காலமும்,திட்டமிட்ட செயல்பாடும் எடுத்தார்களோ,அதே போல,அந்த கர்மப்பணத்தை முறையாகச் செலவழிக்கவும் அதிக நேரமும்,திட்டமிட்ட செயல்பாடும் அவசியம்.

    ReplyDelete