Friday, September 6, 2019

சதுரகிரி மூலிகைகள்


சதுரகிரியில் இருக்கும் மூலிகைகளில் சில

கல்தாமரை என்ற மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.இந்த கல்தாமரையின் கிழங்கு அதன் வேர்களில் இருக்கும்.ஒவ்வொரு கிழங்கும் பூசணிக்காய் அளவுக்குப் பெரியதாக இருக்கும்.இந்த கிழங்கை அந்தக் காலத்தில் சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தக் கிழங்கின் மேல் நின்று வானத்தைப் பார்த்தால் அதுவும் பகலில் பார்த்தால் நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள் கண்ணுக்குத் தெரியும்.இந்தக் கிழங்கைப் பயன்படுத்தித்தான் கிரக சஞ்சாரத்தை சித்தர்கள் கண்டறிந்தனர்.

இதுதவிர,மனித உடலை வெட்டினால் அந்த வெட்டுப்பட்ட உறுப்பை ஒட்ட வைக்கும் மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.நமது நினைவுகளை மறக்கடிக்கும் மூலிகையும் இங்கே இருக்கிறது.

இறவாத நிலையைத் தரும் மூலிகையும் சதுரகிரியில் இருக்கிறது.சதுரகிரியின் மொத்த மலைப்பரப்பைப் பற்றியும் போகர் 7000 என்ற புத்தகத்தில் பாடல்களாக துல்லியமாக விவரித்துள்ளார்.

உதாரணமாக, அத்தி ஊற்றிலிருந்து கூப்பிடுதூரத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமம் இருக்கிறது.சின்னப் பசுக்கடையிலிருந்து அம்பெய்யும் தூரத்தில் சித்தர்களின் குளிக்கும் அருவி இருக்கிறது.இப்படி மொத்த சதுரகிரியையும் பாடல்களாகவே எது எவ்வளவு தூரம் என்பதை வரைபடமாக விவரித்துள்ளார் போகமகரிஷி!!!!

No comments:

Post a Comment