Saturday, November 24, 2018

அகத்தீசரின் அருளைப் பெற ஒரு சுலப வழி!



உலகத்தில் வாழ்ந்து வரும் நம் அனைவருக்கும் முதல் குரு அகத்தியர்;ஏனென்றால்,இவர் தான் சித்தர்களின் குரு;இவர் தான் ரிஷிகளின் குரு;தமிழ் மொழியை முருகக் கடவுளிடம் இருந்து கற்றுக் கொண்டு,இந்த பூமி முழுவதும் பரப்பியவர் இவர் தான்;சித்த மருத்துவம்,மூலிகைகளின் மருத்துவ குணங்கள்,யோகக் கலை,ஜோதிடக் கலை,சரக் கலை,பஞ்ச பட்சி சாஸ்திரம்,கோவில்களை கட்டும் கலை,கோவில் வழிபாட்டு முறைகள் என்று அனைத்திற்கும் ஆதி மூல முதல் குரு அகத்தியர் தான்;


அகத்திற்குள்(மனதிற்குள்) இருக்கும் ஈசனை எப்படி வெளியே கொண்டு வர வேண்டும் என்பதை உணர்ந்த முதல் மனிதர் இவர் தான்;அதை அப்படியே இன்று வரை மனிதர்களாகிய நமக்கு போதித்துக் கொண்டு இருப்பவரும் இவர் தான்;


அகத்தீஸ்வரம் தான் இன்றைய ஆஸ்திரேலியா ஆகும்;ஆமாம்! தமிழர்களின் ஆதி குருவின் பெயரால் இருக்கும் ஒரே கண்டம் ஆஸ்திரேலியா!

தமிழ்நாட்டில் 1008 சிவாலயங்களை அகத்தீசர் கட்டியிருக்கின்றார்;ஒவ்வொரு சிவாலயத்திலும் 12 தேவ ஆண்டுகள் வரை பூஜை செய்து சிவகடாட்சத்தைப் பெற்றிருக்கின்றார்;12 தேவ ஆண்டுகள் என்பது பூமியின் காலக் கணக்கின் படி 15,00,000 ஆண்டுகள் ஆகின்றது;இவர் உருவாக்கிய கோவிலில் மூலவராக இருக்கும் ஈசனின் பெயர் அகத்தீசர் ஆகும்;பெரும்பாலும் காவிரிக் கரையோரம் இவர் கோவில்களைக் கட்டியிருந்தாலும்,தமிழ்நாடு நெடுக கட்டியிருப்பதும் உண்மையே!


அவைகளில் ஒரு சில ஆலயங்கள் இன்னும் பிரபலம் ஆகவில்லை;உங்கள் ஊர்ப்பகுதியில் தேடிப் பார்த்தால் அகத்தீசர் என்ற பெயரில் ஆலயம் இருக்கலாம்;அப்படி இருந்தால் அதை புனர்நிர்மாணம் செய்ய தாங்களே முயற்சிகளை ஆரம்பிக்கவும்;


மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 19 வது கிலோ மீட்டர் தூரத்தில் மேலையூர் அமைந்திருக்கின்றது;இங்கே மெயின் ரோட்டில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி இருக்கின்றது;இந்த பள்ளிக்கு பின்புறம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் இருக்கின்றது;மூலவருக்கு மிக அருகில் அகத்தியரின் சன்னதியும் அமைந்திருக்கின்றது;2009 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள்;அடுத்த கும்பாபிஷேகம் 2021 இல் வர இருக்கின்றது;காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் அற்புதமான ஆலயம் இது;


அக்யூ ஹீலிங்,ப்ராணிக் ஹீலிங்,குவாண்டம் மெடிட்டேஷன்,ஆல்பா மைண்டு தியானம்,ஆழ்நிலை தியானம்,வாசி யோகம்,ப்ராணயாமம் செய்பவர்கள் தமது ஆன்மீக முயற்சியில் அடுத்த நிலைக்குச் செல்ல விரும்பினால் அடிக்கடி இங்கே வருகை தந்து 90 நிமிடங்கள் வரை நெய் தீபம் ஏற்றி தியானம் செய்ய வேண்டும்;அவரவர் ஜன்ம நட்சத்திர நாளன்று அபிஷேகமும்,அன்னதானமும் செய்து வர வேண்டும்;


மாதம் ஒருமுறை வீதம்   24 முறை இப்படி செய்கின்றார்களோ அவர்கள் அகத்தீசரின் அருளைப் பெறுவார்கள்;

No comments:

Post a Comment