Friday, November 16, 2018

அரிய பைரவ வழிபாடு!



உலகத்தில் வாழ்ந்து வரும் அனைத்து மக்களுக்கும் செல்வ வளத்தை அள்ளித் தருபவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;இவர் கார்த்திகை மாதம் வரக் கூடிய தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாளில் பைரவ உலகத்தில் இருந்து ஈசனின் ஆணைப்படி பூமிக்கு (பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு) வருகை தந்தார்;

இன்றைய அருள்மிகு பவானீஸ்வரர் திருக்கோவிலில் (பொன்பேத்தி,புதுக்கோட்டைக்கு அருகில்) அருள்பாலித்து வருகின்றார்;

தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முந்தைய முகூர்த்த நேரத்தில் (காலை 4.30 முதல் 6 மணிக்குள்)  சொர்ண பைரவ அஷ்டகத்தை 33 முறை ஜபித்து வருவதன் மூலமாக பெரும் செல்வச் செழிப்பை அடைய முடியும்;அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரின் மூல மந்திரத்தை 330 தடவை ஜபிப்பதன் மூலமாகவும் செல்வ வளத்தைப் பெற முடியும்;அசைவம்,மது இரண்டையும் கைவிட்டவர்களுக்கு மட்டுமே செல்வ வளம் தேடி வரும்;கூடவே,ப்ரம்மச்சாரிய விரதம் இருப்பவர்களுக்கு ஆறு மடங்கு செல்வ வளம் வெகு சீக்கிரமே கிடைத்துவிடும்;


இந்துக்களின் ரகசிய வழிபாட்டுமுறைகளில் முக்கியமானது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு ஆகும்;இவரை தொடர்ந்து ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் ஜபித்து,செல்வ வளத்தைப் பெற்றவர்கள்,அதை நேர்மையான செயல்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும்;அப்படி இல்லாமல் அநீதியான செயல்களுக்குச் செலவிட்டால்,பைரவ சாபம் பீடிக்கும்;


ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரது அவதாரத்திற்கும் முன்பே தோன்றிய பைரவப் பெருமான் ஒருவர் இருக்கின்றார்;அவரது பெயர் ஸ்ரீவித்ருமா ஆகர்ஷண பைரவர்!
இவரது சன்னதி அருள்மிகு ஸ்ரீ சூரிய கோடீஸ்வர சுவாமி ஆலயத்தில் அமைந்திருக்கின்றது;


கடந்த ஓராண்டுவரை யார் அசைவம்,மது இரண்டையும் கைவிட்டு இருக்கின்றார்களோ,அவர்களுக்கு மட்டுமே இவரது அருள் கிட்டுகின்றது;

ஒவ்வொரு நாளும் வரும் குளிகை காலம் அல்லது மாலை 4.30 முதல் 6 மணிக்குள் இவரை பின்வரும் பொருட்களால் ஆன கலவையைக் கொண்டு காப்பு இட வேண்டும்;

(புனுகு,கோரோசனை,ஜவ்வாது,கஸ்தூரி,சந்தனம்)
இந்த பொருட்களில் ஒரிஜினலைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும்;விலை மிகவும் அதிகம்;தாங்கள் வாங்கும் பொருட்கள் ஒரிஜினல் தானா என்பதை தகுந்த(அனுபவம் மிக்க) சித்த வைத்தியர் மூலமாக பரிசோதித்துக் கொள்ளவும்;அதன் பிறகு,இவைகளை ஒன்றாக்கி காப்பு இட வேண்டும்;இட்டு தொடர்ந்து 9 நாட்கள் பைரவரது மூலமந்திரத்தை 90 நிமிடங்கள் ஜபித்து வருக!

பைரவர் உபாசனை செய்து வருபவர்கள் தொடர்ந்து 64 நாட்கள் இப்படிச் செய்து வருவது நன்று;

பைரவப் பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் குறைந்தபட்சம் 9 நாட்கள் வரையிலும்,அதிகபட்சம் 18 நாட்களும் இப்படிச் செய்து நீடூழி வாழ்க!


இதன் மூலமாக பிறருக்கு தாம் செய்த தீங்குகளும்,அதனால் உண்டான கர்மவினைகளும் படிப்படியாக விலகிவிடும்;

திருந்த வேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர்களுக்காக மட்டுமே இந்த பைரவ வழிபாட்டினை தெரிவிக்கின்றோம்!

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment