Monday, November 26, 2018

மஹாகால பைரவப் பெருமானின் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்!



உலகம்,உயிர்கள்,ப்ரஞ்சம் = இம்மூன்றையும் அந்த ஈசனின் ஆணைப்படி,நவக்கிரகங்கள் மூலமாக நிர்வகித்து வருபவர் மஹா கால பைரவப் பெருமான் ஆவார்;


ஈசன் ஒரு போதும் அவதாரம் எடுப்பதில்லை;தேவைப்படும் போது தனது சக்தியின் ஒரு சிறுபகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;அப்படி ஒரு முறை வெளிப்படுத்திய சிறுபகுதி சக்திதான் கால தேவன் என்ற மஹா கால பைரவப் பெருமான் ஆவார்;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கார்த்திகை மாதம் வரக் கூடிய தேய்பிறை அஷ்டமி திதி அன்று மஹா கால பைரவப் பெருமான் ஈசனிடம் இருந்து உதயமானார்;இந்த விளம்பி ஆண்டு,கார்த்திகை மாதத்தில் 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று (30.11.2018) மஹாதேவ அஷ்டமியாக வர இருக்கின்றது;


ஒரு நாள் முழுவதும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபித்தால் நமது இப்பிறவியில் செய்த அனைத்து பாவங்களும் நம்மைவிட்டு ஓடிவிடும் என்று சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் தெரிவித்திருக்கின்றார்;அது எந்த நாள் தெரியுமா?


மஹா கால பைரவப் பெருமான் பிறந்த தினமான 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று தான்!


ஐந்து விதங்களில் மஹா கால பைரவப் பெருமானின் பிறந்த நாளைக் கொண்டாடலாம்;


1.ப்ரபஞ்சத்தின் மைய பாகமான அண்ணாமலையில் 29.11.2018 வியாழக்கிழமை இரவு 9.51 முதல் 30.11.2018 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.09 வரை கிரிவலம் வந்தவாறு ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம்;அல்லது இந்த நேரத்திற்குள் அண்ணாமலை கிரிவலம் வந்துவிட்டு,மீதி நேரத்தை அண்ணாமலையார் கோவிலுக்குள்ளும்,தங்கும் இடத்திலும் அமர்ந்த நிலையில் ஜபிக்கலாம்;இதனால்,ஒரே சமயத்தில் கால பைரவப் பெருமானின் அருளையும்,அருணாச்சலேஸ்வரரின் ஆசிகளையும் பெற முடியும்;


2.முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,மஹா கால பைரவப் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன;இந்த எட்டு படைவீடுகளிலும் வெவ்வேறு கால கட்டங்களில் தமது வீரதீர பராக்கிரமங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்;


இதில் ஏதாவது ஒரு படைவீட்டில் குறைந்தது ஒரு முகூர்த்த நேரம் வரை ஜபிக்கலாம்;அல்லது முழு நாளும் (கோவில் திறந்திருக்கும் நேரம் வரை=காலை 6 முதல் 12 வரை,மாலை 4 முதல் இரவு 8 அல்லது 9 வரை) ஜபிக்கலாம்;


அட்டவீரட்டானங்கள்:1.திருக்கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோவில் (தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் 8 வது கி மீ தொலைவில்)

2.திருக்கோவிலூர் வீரட்டானம்

3.திருவதிகை வீரட்டானம் (பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில்)

4.திருவிற்குடி வீரட்டேஸ்வரர்  (திருவாரூரில் இருந்து நாகை செல்லும் சாலையில் 3 கி மீ பயணித்து அதன் பிறகு இருக்கும் உள்ளடங்கிய கிராமத்துச் சாலையில்)

5.திருக்கடையூர்  கால சம்ஹார மூர்த்தி & திருக்கடையூர் மயானம்

6.வழுவூர் வீரட்டானம் அருள்மிகு பாலகுராம்பிகை சமேத கீர்த்திவாசர்  (மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 கி மீ பயணிக்க வேண்டும்;அதன் பிறகு 1 கி மீ தூரத்தில் உள்ளடங்கிய கிராமத்திற்குள் இருக்கும் வீரட்டானம்)

7.செம்பொனார் கோவில்(மயிலாடுதுறையின் ஒரு பகுதியில்)

8.கொறுக்கை என்ற குறுக்கை(மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ பயணிக்க வேண்டும்;அதன் பிறகு விசாரித்து செல்லவும்)

ஒன்பதாவதாக சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயம்

இந்த எட்டு வீரட்டானங்களிலும் மூலவர் சிவலிங்கமாக இருக்கின்றது;சிவலிங்க வடிவில் மஹா கால பைரவப் பெருமான் அருள் பாலித்து வருகின்றார்;ஈசனும்,பைரவரும் ஒருவரே என்பதை இதன் மூலம் உணர்த்துகின்றார்;


3.பூமியில் இருக்கும் அனைத்து கால பைரவ சன்னதிகளுக்கும் அருளாற்றலை வழங்கும் ஓர் ஆலயம் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் திருக்கோவில்,சோழாபுரம்,கும்பகோணம் அருகில்;இங்கே 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று ஈசனுக்கும் அம்பாளுக்கும் திருமணம் நடைபெறும்.திருமணத்தின் முடிவாக கல்யாண விருந்து நடைபெறும்;விருந்தின் முடிவில் நாம் ஒவ்வொருவரும் திருமண அன்பளிப்பு தரலாம்;மிகவும் புண்ணியம் தரும் செயலாகும்;நமது நியாயமான  நீண்டகால ஏக்கங்களைத் தீர்க்கும் திருக்கல்யாண வைபவம் இது!!!


4.செல்வ வளம் வேண்டுவோர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை இந்த நாளில் அவர் சன்னதிக்குச் சென்று மூலமந்திரத்தை ஜபித்து அருளைப் பெறலாம்;


5.வெகுதூர மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வசிப்பவர்கள் 30.11.2018 வெள்ளிக்கிழமை குளிகை காலம் காலை 7.30 முதல் 9 மணிக்குள் அல்லது இராகு காலம் காலை 10.30 முதல் 12 மணிக்குள் இறுதி 30 நிமிடங்களில் ஓம் சம்ஹார பைரவாய நமஹ் என்று ஜபிக்கலாம்;


சனியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் ரிஷபம்,மிதுனம்,கன்னி,விருச்சிகம்,தனுசு,மகரம் ராசியினர் இன்று முழுவதும் ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம் அல்லது தினசரிப் பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவர் சன்னைதியில் ஜபிக்கலாம்;


பைரவ ஜபம் கை மேல் பலன் என்பது பழமொழி!



No comments:

Post a Comment