Saturday, July 15, 2017

சிவனுக்குள் இருக்கும் சக்தியை வெளிப்படுத்துவது எப்படி?



உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆண் உயிரினத்துக்கும் ஒரு பெண் உயிரினம் துணையாக இருக்கின்றது;
உலகத்தை காத்து ரட்சிக்கும் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு துணை சக்தி இருக்கின்றது;


காசிக்குச் சென்று கால பைரவப் பெருமானை வழிபட்டால்,அவர் உடனே வரம் தந்துவிடுவார்;அப்படி படுவேகமாக வரம் வரும் போது நமது உடல் சில சமயங்களைத் தவிர பெரும்பாலான நேரத்தில் முழுவரத்தை ஏற்றுக் கொள்ளாது;அதை கவனிக்கும் கால பைரவப் பெருமானின் துணை சக்தியாகிய கால பைரவி என்ற வராகி வரத்தை முழுமைப்படுத்துவது வழக்கம்;


யார் தொடர்ந்து மஹாகால பைரவப் பெருமானை வழிபட்டு/ஜபித்து/துதித்து/உபாசித்து வருகின்றார்களோ அவர்கள் அடுத்து வரும் பிறவிகளில் அன்னை மஹாவராகியை வழிபடும் பெரும்பாக்கியம் கிட்டும்;

வெகு அரிதான சிலருக்கு இக்கலியுகத்தில் சில ஆண்டுகள் தொடர்ந்து மஹாகால பைரவப்பெருமானின் புகழைப் பரப்பியவாறு தினமும் ஒரு மணி நேரம் வரை பைரவ ஜபம் செய்து வந்தால்,அவரது கருணையால் மஹாவராகியின் வழிபாடு தேடிவரும்;


அதே போல,சதாசிவனை தொடர்ந்து வழிபடுபவர்கள் அடுத்து வரும் சில பிறவிகளில் அன்னையின் அருமை பெருமைகளை உணர்ந்து அவளைச் சரணடயும் சூழ்நிலையும் உருவாகும்;
மலரில் இருக்கும் வாசம் போல;நெருப்பில் இருக்கும் ஒளி போல;சிவனின் வடிவில் சக்தியும் அடக்கம்;


எல்லாவிதமான கவலைகளுக்கும் மருந்தாக இருப்பது மஹாவராகியின் மந்திர ஜபமே! எல்லாவிதமான மாந்திரீகத் தடைகளையும் உடைத்து துவம்சம் செய்வது மஹாவராகியின் அருள்;

அவளது 12 பெயர்களை தினமும் இரவில் ஒரு மணி நேரம் வரை ஜபித்து வந்தாலே போதும்;நேர்மையாக வாழத் துடிப்பவர்களுக்கு குலதெய்வமாக பாதுகாப்பாள்;

ஆன்மீகத்தை முகமூடியாக கொண்டு அட்டகாசம் செய்யும் மந்திரவாதிகளை உருத்தெரியாமல் நிர்மூலமாக்கிவிடும் சக்தி மஹாவராகி ஜபத்திற்கு உண்டு;


ஓம் ரீங் வாத்தியார் ஐயா
வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இந்த 12 பெயர்களை இரவுப்பொழுதில் நமது வீட்டில் ஒரு பச்சைத் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;கிழக்கு நோக்கி அமர வேண்டும்;ஒரு மண் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமும்,இன்னொன்றில் நெய் தீபமும் ஏற்றி வைக்க வேண்டும்;அன்னை மஹாவராகியின் படத்தை/சிலையை வடக்கு நோக்கி வைக்க வேண்டும்;

அன்னை மஹாவராகியின் முகத்தைப் பார்த்தவாறு ஜபித்து வருவது ஒரு ரகசிய ஜப முறை ஆகும்;அசைவம்,மது இவைகளைக் கைவிட்டிருந்தால் மட்டும் தான் அன்னையின் அருள் கிட்டும்;

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் வரை விடாப்பிடியாக ஜபித்து வந்தால் வாழ்க்கையின் அனைத்து துக்கங்களும் நாசமாகிவிடும்;

விரைவான பலன் வேண்டுவோர் ஏதாவது ஒரு பஞ்சமி நாளில் இருந்து 90 நாட்களுக்கு தினமும் ஐந்து முறை வராகி மாலை என்ற வராகி பரணியை ஜபித்து வரவேண்டும்;முறையான உபதேசம் பெற எமது வாட்ஸ் அப் +91 9092116990,9364231011 க்கு தொடர்பு கொள்ளவும்;

கோணல் இல்லாத தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வைத்து ஜபித்து வந்தால் காரிய வெற்றிகள் கிட்டிக்கொண்டே இருக்கும்;ஒவ்வொரு காரிய வெற்றி கிட்டியதும் அன்னை மஹாவராகிக்கு உடனே மானசீகமாக நன்றிகள் தெரிவிக்க வேண்டும்;

ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமை;ஒவ்வொரு பஞ்சமி,அஷ்டமி திதிகள்;ஒவ்வொரு (வழிபடுபவர்களின்) ஜன்ம நட்சத்திர நாட்களிலும் அன்னை மஹாவராகிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் படையல் வைக்க வேண்டும்;சுக்கு அதிகம் சேர்த்த காரமான பானங்களை அன்னை மஹாவராகிக்குப் படைக்க வேண்டும்;


ஒரு குடும்பத்தில் கணவர் மஹாவராகியையும்,மனைவி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரையும் தொடர்ந்து ஜபித்தும்,பூஜித்தும் வந்தால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குடும்பத்திற்கு துக்கங்கள் முழுமையாக நாசமாகியிருக்கும்;வறுமை ஒழிந்து மகத்தான பணக்கார வாழ்க்கை வாழ ஆரம்பித்திருப்பார்கள்;சிலருக்கு இந்த கால அளவு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம்;

இந்த தெய்வீக ரகசியங்களை நமக்கு உபதேசித்த உபாசனை குலபதி ஸ்ரீதுர்கை சித்தர் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!!!


No comments:

Post a Comment