Thursday, July 13, 2017

ப்ரம்மாவின் அருளைப் பெறவும்,சில சாபங்களை நீக்கவும் வழி


உங்கள் அன்னையின் கருவறையில் நீங்கள் இருக்கும் போது பலவிதங்களில் சிரமங்களைக் கொடுத்துள்ளீர்கள்;அதனாலும், உங்களுக்கு சாபங்கள் உண்டாகியிருக்கின்றது;


உங்கள் பெற்றோர்களை அவர்களது வயதான காலத்தில் கவனிக்காமல் கைவிட்டிருக்கலாம்;அல்லது அதற்குரிய சூழ்நிலை உருவாகியிருக்கலாம்;


இவைகள் தீர உங்கள் பிறந்த தமிழ்மாதத்தில்,பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் குரு ஓரையில் பின்வரும் பிரம்மா கோவில்களுக்குச் செல்ல வேண்டும்; 

அப்படி செல்ல இயலாத பட்சத்தில்,ஆடி மாத பவுர்ணமி அல்லது ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் திரு ஓணம் நட்சத்திர நாள் அல்லது அவிட்டம் நட்சத்திர நாள் அல்லது பிரதமை திதி வரும் நாள் அல்லது பிரதமைதிதியும் அவிட்டம் நட்சத்திரமும்;திருவோணமும் பிரதமைதிதியும் வரும் நாள் அன்று சென்று பின்வரும் ப்ரம்மாவின் மந்திரத்தை ஒரு மணி நேரம் ஜபிக்க வேண்டும்;


திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் திருப்பட்டூர்    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்


அல்லது

காஞ்சிபுரம் டூ உத்திரமேரூர் செல்லும் வழியில் அமைந்திருக்கும் பெருநகர் அருள்நிறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

அல்லது

திருக்கருகாவூர் டூ காவலூர் அருகில் அமைந்திருக்கும் பெருமாக்க நல்லூர்  அருள்மிகு ப்ரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

அல்லது

அய்யம்பேட்டை அருகில் அமைந்திருக்கும் புரசக்குடி    அருட்பெரும் ப்ரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

அல்லது

கும்பகோணம் அருகில் அமைந்திருக்கும் கொற்கை


இந்த ஆலயங்களில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நாட்களில் குரு ஓரையில் அல்லது குளிகை காலத்தில் பின்வரும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

அதன் பிறகு,அந்த ஆலயத்திற்கு வேண்டிய பூஜைபொருட்களை வாங்கித் தரலாம் அல்லது உங்கள் ஆஸ்தான ஜோதிடருக்கு பஞ்சாங்கம் மற்றும் ஜோதிடக் கருவிகள் வாங்கித் தரலாம்;


ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோஹ் ப்ரம்ம ப்ரசோதயாத்


உத்தமமான சீடர்கள் நாடு முழுவதும் இருக்கின்றார்கள்;தகுந்த குருவைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்;ஆனால்,உண்மையான குருவைத் தேட வேண்டி இருக்கின்றது;இந்த நிலை மாறவும் இந்த மந்திர ஜபம் செய்து வரலாம்;


ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ


No comments:

Post a Comment