Tuesday, January 10, 2017

பாரதமாதா என்னும் மஹாவராகி!!!!


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றும் காலதேவன் என்ற மஹாகால பைரவப் பெருமானின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன;நவக்கிரகங்களில் நாம் அனைவரும் பயப்படுவது சனீஸ்வரனைப் பார்த்துத்தான்;அந்த சனீஸ்வரனுக்கு நவக்கிரகப்பதவி கொடுத்தவர்,சனீஸ்வரனின் குருவாகிய மஹாகால பைரவப் பெருமானே!

அப்படிப்பட்ட மஹா கால பைரவப் பெருமானின் துணை சக்தியாகத் திகழும் அன்னையே மஹா வராகி ஆவார்;


சோழவள நாடு சோறுடைத்து என்று பழமொழி,சோழ நாடு வற்றாத உணவு வளத்துடன் இருப்பதைத் தெரிவிக்கின்றது;இந்த வற்றாத உணவு வளத்திற்குக் காரணம்,சோழர்கள் தினமும் மூன்று முறை மஹாவராகியை துதித்து வணங்கியதுதான்!


தமிழ்நாட்டில் மட்டும் சுமாராக  18,000 நெல்ரகங்கள் பயிரிடப்பட்டு வந்துள்ளன;இத்தனை நெல்ரகங்களை சோழர்கள் கண்டுபிடிப்பதற்குக் காரணம் அன்னை மஹாவராகியை தொடர்ந்து 300 ஆண்டுகளாக உபாசித்தும்,வழிபட்டும்,ஜபித்தும் வந்தமையே காரணம்;அன்னை மஹாவராகியின் கையில் இருக்கும் உலக்கையே இதற்கு சாட்சி!!!


இவ்வளவு நெல் ரகங்களை அறிந்த கிழக்கு இந்தியக் கம்பெனியும்,கிறிஸ்தவ இங்கிலாந்து அரசும் பாரதத்தின் பெருமைகளைப் பார்த்து பொறாமைப் பட்டது;ஆச்சரியமும்,அதிர்ச்சியும் அவர்களுக்குள் இந்த பாரதத்தின் பெருமைகளை இந்த நாட்டு மக்கள் கூட அறியாமல் இருக்க வேண்டும் என்ற கேவலமான எண்ணம் உண்டானது;     1947க்கு முன்பு, கிறிஸ்தவ  இங்கிலாந்து இந்த  18,000 நெல் ரகங்களையும்         திருடிக் கொண்டு சென்று அலாஸ்காவில்(அமெரிக்கா)     இருக்கும் உலக உணவு மற்றும் விதைகள் வங்கியில் பத்திரமாக சேமித்து வைத்திருக்கின்றது;அதன் பிறகே,இந்தியாவில் விவசாயத்தை அழிக்கும் நயவஞ்சகத்திட்டத்தை படிப்படியாகச் செயல்படுத்தியிருக்கின்றது;

உலக வரலாற்றில் ஒரு நாட்டின் மக்களே அந்த நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக இருப்பது நமது பாரத நாட்டில் மட்டுமே! இந்த இழிநிலைக்குக்காரணம் தமிழ்நாட்டின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் மஹாவராகியை வழிபடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து போனதுதான்! காசி விசாலாட்சியாக இருப்பவளும்,திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியாக ஆட்சி புரிபவளும்,மதுரை மீனாட்சியாக இருப்பவளும்,பாரதமாதாவாக இருப்பவளும் மஹாவராகித்தாயேதான்!


எந்தக் கடவுளையும் வழிபட்டு வரங்கள் வாங்கிட,அந்தக் கடவுளுக்குரிய திதி அல்லது நட்சத்திரத்தினை அறிந்து பூஜைகள் செய்தால் போதுமானது;வரம் கிடைத்துவிடும்;
ஆனால்,அன்னை மஹாவராகியை பூஜை,அபிஷேகம் கொண்டு ஏமாற்றி வரங்கள் வாங்கிவிட முடியாது;அன்னை மஹாவராகியை ஒருவர் அல்லது ஒருத்தி தினமும் துதித்து வழிபட ஆரம்பித்துவிட்டால்,அவர்கள் மனதில் ஒரு போதும் பிறருக்கு தீங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டும்;பிறரது பொறாமையாலும்,போட்டியாலும், மாந்திரீகத்தாக்குதலாலும் பாதிக்கப்பட்டு,அதில் இருந்து மீளமுடியாமல் தவிக்க வேண்டும்;அப்படிப்பட்ட அபலைகளுக்கு மட்டும் தான் அன்னை மஹாவராகியின் அருளும்,ஆசிகளும்,பாதுகாப்பும் கிட்டும்;மற்றவர்களுக்கு ஒரு போதும் கிட்டாது;


உங்கள் குடும்பத்தில் நீங்கள் ஒரே ஒருவர் மட்டும் அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை தினமும் காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபித்துக்கொண்டு வந்தால் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அன்னையின் அருட்பாதுகாப்பு கிடைத்துவிடும்; நீங்கள் ஒரு ஊரிலும்,உங்கள் வாழ்க்கைத் துணை வேறு ஒரு ஊரிலும்,உங்கள் மகன் ஒரு நாட்டிலும்,உங்கள் மகள் இன்னொரு நாட்டிலும் வசித்தாலும் அன்னை மஹாவராகியின் கருணை அனைவருக்கும் கிடைத்துவிடும்;

எனவே,அசைவம்,மது இரண்டையும் கைவிட்டுவிட்டு பின்வரும் அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை ஜபித்துவருக!!!


ஓம் ரீங் வாத்தியார் ஐயா,வாத்தியார் ஐயா
பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நி

இந்த 12 பெயர்களை எப்போது வேண்டுமானாலும் ஜபிக்கலாம்;அப்படி ஜபித்து வரும் போது உடல் சுத்தம் கண்டிப்பாக அவசியம் தேவை;பாரத மாதா என்னும் மஹாவராகியை ஜபிப்போம்;நம் ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவும்,சுய பாதுகாப்பும் நிரம்பியவர்களாக மாறுவோம்;


ஓம் வராகி சிவசக்தி ஓம்


No comments:

Post a Comment