Thursday, October 20, 2016

உலகத்தை ஆள வரும் இந்தியன்!!!


உலகத்தின் மகத்தான பொருளாதார வல்லரசு நாடாக நமது பாரத நாடு கி.பி.1750 வரை முடிவடைந்த 20,000 ஆண்டுகள் வரை இருந்து வந்தது;ஒவ்வொரு 300 ஆண்டுகளும் பாரதம் உலகத்தின் முதல் பொருளாதார வல்லரசு நாடாக இருக்கும்;இரண்டாம் இடத்தில் சீனா இருக்கும்;அடுத்த 300 ஆண்டுகள் வரை சீனா முதலிடத்தை கைப்பற்றும்;இப்படியே 20,000 ஆண்டுகள் ஓடிவிட்டன;ஆதாரம்:The Rising and Falling of Great Powers(Oxford University Economics Department Publishing Book)

துருக்கியில் ஆட்டோமான் பேரரசு வீழ்ச்சி அடைந்தப் பின்னர்,ஐரோப்பாவுக்கும் பாரத நாட்டுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் அறுபட்டுவிட்டன;இதனால்,ஐரோப்பா மிகவும் சிரமப்பட்டது;தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்ற பழமொழிக்கு ஏற்ப,ஐரோப்பிய அரசுகள் இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன;கொலம்பஸ் தான் சென்றடைந்த இடங்களை எல்லாம் இந்தியா என்று புளுகிக்கொண்டே இருந்தார்;அந்த புளுகலால் தான் இன்று மேற்கு இந்தியத் தீவுகள். . .ஓ! வெஸ்ட் இண்டீஸ் டீம் என்றால் நம் எல்லோருக்கும் கிரிக்கெட் ஞாபகத்திற்கு வரும்;கண்டுபிடிக்கப்பட்டது;மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் இந்தியாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை;


ஆப்ரிக்கக் கண்டத்தின் தென் கோடி முனையான நன்னம்பிக்கை முனையை வந்தடைந்தான் வாஸ்கோடகாமா.அங்கே அவன் பல மாதங்களாக குழப்பத்தில் இருந்தான்; இங்கிருந்து எப்படி இந்தியாவுக்கு செல்வது ? என்று.எனவே,அங்கே வந்த ஒவ்வொரு கப்பல் மாலுமியிடமும் விசாரித்துக் கொண்டே இருந்தான்;

 18 மாதங்களுக்குப் பிறகு,அவனுக்கு வழிகாட்டியது ஒரு கேரள வணிகக் கப்பல்!அப்போதே வணிகக் கப்பலின் ஆஸ்தான ஜோதிடர் கப்பல் கேப்டனுக்கு அறிவுறுத்தியும் அவன் கேட்கவில்லை;இந்த ஐரோப்பியனுக்கு கடல் வழிகாட்டினால்,அது நமது நாட்டிற்கே பெரும் ஆபத்தை விளைவித்துவிடும் என்று கெஞ்சியும் கேட்கவில்லை;அதன் பிறகு,கேரள மாநிலம் பட்ட பாட்டினை வரலாறு சொல்லும்;

வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பிறகு,இந்தியாவுடன் வணிகம் செய்ய டச்சுக்காரர்கள்,போர்ச்சுக்கீசியர்கள்,ஆங்கிலேயர்கள்
பிரஞ்சுக்காரர்கள் வருகை புரிந்தார்கள்;இறுதியில் வென்றது கிறிஸ்தவ ஆங்கிலேயன் தான்;


கி.பி.1750 வாக்கில் இந்தியாவில் இருந்து ஸ்பின்னிங் டெக்னாலஜியை ஜப்பான் நாடு இறக்குமதி செய்தது;ஒவ்வொரு வைஸ்ராயும் இந்தியா முழுக்க இருப்புப் பாதை போட்டதே இந்தியாவின் செல்வ வளத்தைக் கொள்ளையடிக்கத்தான்;


கி.பி.1750 வரை உலக மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 25% ஆகவும்,உலக ஏற்றுமதியில் 30% ஆகவும் இருந்து வந்தது;இரண்டு உலகப் போர்களில் இங்கிலாந்து கலந்து கொண்டது;இதனால் அதற்கு ஏராளமான செலவு ஏற்பட்டது;அந்தச் செலவை தமது காலனி ஆதிக்க நாடான இந்தியா மீது சுமத்தியது;சுதந்திரம் வாங்கிய 1947 இல் இந்தியாவின் உலக பொருளாதாரப் பங்களிப்பு வெறும் 2% ஆக சுருங்கிப்போனது;அந்த அளவுக்கு கிறிஸ்தவ இங்கிலாந்து இந்தியாவின் அனைத்து செல்வ வளங்களையும் கொள்ளையடித்துவிட்டே வெளியேறியது;

அது மட்டும் அல்ல;மெக்காலே கல்வித்திட்டத்தை நாடு முழுக்க நடைமுறைப்படுத்தியதன் மூலமாக,நாடு முழுவதும் இருந்த 6,00,000 திண்ணைப்பள்ளிக் கூடங்களை அழித்தது;உலகத்திலேயே தலைசிறந்த கல்வி முறையான குருகுலக் கல்வி முறையை நிர்மூலமாக்கியது;இதுதான் இந்தியர்களை ஆத்ம பலம் மிக்கவர்களாக வைத்திருந்தது;


சுதந்திரம் வாங்கியப் பின்னர்,நாட்டை எப்படி மறுசீரமைக்க வேண்டும் என்ற எண்ணம் எந்த ஒரு அரசியல் தலைவரிடமும் இல்லாமல் இருந்தது;ஒரு சில சீர்திருத்தவாதிகளிடம் மட்டும் திட்டங்கள் இருந்தன;அவர்களின் ஆலோசனைகளை பண்டிட் ஜவஹர்லால் நேரு புறக்கணித்தார்;இதனால்,கடந்த 60 ஆண்டுகளாக நமது நாட்டின் கல்வித்துறை,சுகாதாரத்துறை,வேளாண்மைத்துறை,வெளியுறவு
துறை,நீதித்துறை மற்றும் சில துறைகளில் இந்தியத்தன்மை இல்லாமல் போய்விட்டது;


தேசத்துரோகிகளால் அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிந்தது;என்.ஜி.ஓ ஆரம்பித்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை எதிர்த்து அதை தடுத்து நிறுத்தவும் முடிந்தது;


மறுபக்கம்,இந்தியாவின் பாரம்பரியக் கலைகளான யோகா,ஜோதிடம்,சித்த மருத்துவம்,மூலிகைகள்,வழிபாட்டுமுறைகள்,ஆடைகள்,சமுதாய ஒற்றுமை,மறு பிறவி கோட்பாடு போன்றவைகள் மேல்நாட்டு விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்து ஒவ்வொன்றும் உண்மை என்பதை உணரத் துவங்கிவிட்டன;


இதனால்,இங்கிலாந்தில் British Association of Vedic Astrology(bava.org) என்றும்,அமெரிக்காவில் American Association of Vedic Astrology(aava.org)என்றும் அமைப்புகள் உருவாக்கி அரசுகளே ஆராயத்துவங்கி விட்டன;2006 வாக்கில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து சுவிட்சர்லாந்தில் 100 கோடி யூரோ செலவில் ஜோதிடத்திற்கும்,வானியலுக்கும் இடையிலான ஒற்றுமையை அறிவியல் பூர்வமாக கண்டறிய திட்டங்களைத் துவக்கிவிட்டன;


நெற்றியில் பொட்டு வைக்கும் பழக்கம் ப்ரான்ஸ் முழுக்க பரவிக் கொண்டிருக்கின்றது;


ஆஸ்திரேலியாவில் தயாராகும் இட்லி மற்றும் சட்னி தினமும் ஜெட் விமானத்தில் பறந்து லண்டன்வாசிகளின் வயிற்றை நிரப்புகின்றன;

அமெரிக்கா,கனடா,இங்கிலாந்து,நார்வே,சுவீடன்,ஜெர்மனி,பிஜித் தீவு,கானா,மலேஷியா,சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா
நியூசிலாந்து போன்ற நாடுகளில் அரசாங்கம் மற்றும் அரசியல் உயர்பதவிகளில் இந்தியர்கள் வெற்றி பெற ஆரம்பித்துவிட்டார்கள்;


தமிழ் மொழி மற்றும் சம்ஸ்க்ருத மொழி ஒவ்வொரு சர்வதேச பல்கலைக் கழகங்களிலும் தனித் துறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன;இதன் மூலமாக இரு மொழிகளிலும் இருக்கும் பழமையான இலக்கியங்களை உலகில் வாழும் அனைத்து நாட்டு மாணவ,மாணவிகளும் தமிழ் மொழியையும்,சம்ஸ்க்ருத மொழியையும் கற்க ஆரம்பித்துவிட்டார்கள்;


கீழை நாட்டுத் தத்துவங்கள் என்ற பட்டப்படிப்பினை எந்த ஒரு மேல்நாட்டினர் கற்கத் துவங்கினாலும்,அதன் முடிவாக அவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற்று வாழும் அளவுக்கு அவர்களை ஈர்க்கத் துவங்கியிருக்கின்றது;


இந்தியாவைப் பற்றி ஆராய மேற்கு நாடுகள் இண்டாலஜி என்ற ஒரு துறையையே தமது பல்கலைக் கழகங்கள் ஆரம்பித்துள்ளன;
அமெரிக்க மக்கள்தொகை+இங்கிலாந்து மக்கள் தொகை இரண்டையும் கூட்டினால் எத்தனை கோடி வருமோ அதை விடவும் அதிகமானவர்கள் இந்தியாவில் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் பேச ஆரம்பித்துள்ளார்கள்;இதன் மூலமாக ஆங்கில மொழி சார்ந்த வர்த்தகம் இன்று இந்தியாவைச் சார்ந்து வாழ ஆரம்பித்திருக்கின்றது;


தஞ்சாவூர் சரபோஜிமஹால் நூலகத்தில் இருந்த பல முக்கியமான ஓலைச்சுவடிகளை இங்கிலாந்து,15.8.1947 க்கு முன்பே இரண்டு கப்பல்கள் மூலமாக அள்ளிக் கொண்டு சென்றுவிட்டது;அவைகளை இன்று வரையிலும் இங்கிலாந்து,.ஜெர்மனி,அமெரிக்கா அரசுகள் ஆராய்ந்து பலவிதமான நவீன போர்க்கருவிகள்,ஆயுதங்களைத் தயார் செய்துவருகின்றன;அவைகளில் ஒன்றுதான் ராடாரில் சிக்காத விமானம்!


மீதி இருக்கும் சரபோஜிமஹால் நூலத்தில் இருக்கும் ஒலைச்சுவடிகளில் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிய முயற்சி செய்யவில்லை;சம்ஸ்க்ருதத்தில் எம்.ஏ.,யும்,பி.டெக்கில் ஏரோநாட்டிக்கலும் யார் படித்து முடிக்கின்றார்களோ அவர்களால் போஜராஜ மஹாராஜா எழுதிய வைமானிகா சாஸ்திரத்தை முழுமையான அர்த்தத்துடன் வாசிக்க முடியும்;


சம்ஸ்க்ருதத்தில் பி.ஏ.யும்,எம்.எஸ்.ஸி மைக்ரோ பயாலஜி அல்லது பயோ டெக்கும் முடித்தவர்களால் மூலிகைகள் பற்றிய பலவிதமான ஆரோக்கிய குறிப்புகளை வெளிக்கொண்டு வரமுடியும்;


இங்கேதான் சம்ஸ்க்ருத மொழியை கற்கவிடாமல் செய்தததில் நாத்திகப்பிரச்சாரம் ஜெயித்துவிட்டதே! சம்ஸ்க்ருதத்தை எதிர்த்தால் தான் உண்மையான தமிழ் உணர்வுள்ளவன் என்ற மாயத் தோற்றம் தமிழ்நாடு முழுவதும் பரவிவிட்டது;நமது பண்பாட்டில் இருந்து நம்மை 6 தலைமுறைகளாக பிரித்த ஆங்கில மொழியில் பேசுவது அடிமைத்தனமாகத் தெரியவில்லை;இந்தியாவின் தாய்மொழி சம்ஸ்க்ருதம்,தந்தை மொழி தமிழ் என்று எவரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை;


கி.பி.2100 ஆகும் போது இந்தியாவின் ஜனத்தொகை 700 கோடிகளாக இருக்கும் என்று ஒரு முன் கணிப்பு சொல்கின்றது;இதில் 250 கோடி பேர்கள் மட்டுமே இந்தியர்களாக இருப்பார்கள்;மீதி 450 கோடிப் பேர்கள் உலகம் முழுவதும் இருந்து இங்கே குடியேறியவர்களாக இருப்பார்கள்;


இந்தத் தகவல்கள் அனைத்தும் தினசரி செய்தித்தாள்கள்,கருத்தரங்குகள்,பயிற்சிமுகாம்கள்,தனிச் சுற்றுக்கு விடப்பட்ட மாத இதழ்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தொகுப்பட்டவை;


இந்தியாவின் தலைமையை உலகம் ஏற்றுக் கொள்ளும் நாள் வெகுதூரத்தில் இல்லை;


ஜோதிடம்,சித்தமருத்துவம்,இயற்கை மருத்துவம்,யோகா,சரக்கலை,பஞ்சபட்சி சாஸ்திரம்,வர்மக்கலை,நியூரோதெரபி போன்ற கலைகளுக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கு பயங்கர டிமாண்ட் உருவாகப் போகின்றது;நமது தலைமுறையை இதற்கு ஏற்றாற் போல தயார் செய்வோமா!!!


No comments:

Post a Comment