Thursday, October 6, 2016

120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நட்சத்திர ஆராதனை பவுர்ணமி!


உங்களைப் போலவே குணம்,வயது,அனுபவம்,திறமை,சாதனை போன்றவைகளைக் கொண்ட இன்னொரு மனிதன் பிறக்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

120 ஆண்டுகள்!

நீங்கள் பிறந்த தேதி,கிழமை,திதி,நட்சத்திரம் போலவே மீண்டும் அமைய ஆகும் காலமும் இதே 120 ஆண்டுகள் தான்!
இதுபோன்று ஏராளமான ஜோதிட சூட்சுமங்கள் பல கோடி இருக்கின்றன;சித்தர் பெருமக்கள் தகுந்த சமயத்தில் இதுபற்றி யார் மூலமாவது வெளிப்படுத்துவது வழக்கம்!!


நம்மையறியாமல் நாம் செய்த,செய்து கொண்டிருக்கும் தவறுகளால் தான் நாம் இன்று இவ்வளவு சிரமங்களை அனுபவிக்கின்றோம் என்று கூறினால் நம்புவீர்களா?


இந்தக் கோவிலுக்குச் சென்றாலாவது நமது சிரமம் தீராதா? என்று ஏங்குபவர்களுக்கும்,இந்தப் பரிகாரம் செய்தாலாவது நமக்கு விடிவு வராதா?என்று ஏங்குபவர்களுக்காகவே சித்தர் பெருமக்களின் அருட்கருணையால் இந்த தெய்வீக ரகசியத்தை உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்;


நமது ஜன்ம நட்சத்திரத்திற்கு என்று ஒரு விருட்சம்(மரம்) உண்டு;அந்த விருட்சத்தை அதன் ஜீவகாந்தம் அளவுக்கதிகமாக வெளிப்படும் போது நட்டால்,இதுவரை நாம் எத்தனை பிறவிகளாக கர்மச்சுமைகளைச் சுமந்துகொண்டு வாழ்ந்தோமோ,அத்தனை சுமைகளும் நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடும்;

சென்ற நட்சத்திர ஆராதனை பௌர்ணமியன்று நட்சத்திர ஜீவகாந்தம் வெளிப்பட்ட இடம் எதுவோ அதற்கு 180 டிகிரி எதிர்ப்புறத்தில் வெளிப்படுகின்றது;ஆமாம்! கி.பி.1896 ஆம் ஆண்டு வந்த புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று இன்றைய தென் அமெரிக்க நாடான பெருவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெளிப்பட்டது;அப்போது,அங்கு வாழ்ந்த பழங்குடியினர் முறையாக கொண்டாடி தமது ஆத்மாவை பரிசுத்தமாக்கிக் கொண்டார்கள்;

இந்த முறை 15.10.2016 சனிக்கிழமை அன்று இந்தியாவில்,தமிழ்நாட்டில்,விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ராஜபாளையம் மாநகரத்திற்கு அருகில் சோழாபுரம் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவில் பகுதியில் விழுவதை சித்தர் பெருமக்கள் தமது தவ ஆற்றலால் கண்டறிந்துள்ளார்கள்;


இந்த அற்புதமான நன்னாளில் யாரெல்லாம் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த ஆலயத்தில் இருக்கின்றார்களோ,அவர்களது ஜன்ம நட்சத்திர மரக் கன்றினை நடும் பாக்கியம் கிட்டும்;அதன் மூலமாக எத்தனை முற்பிறவிகள் எடுத்திருந்தாலும்,அத்தனை பிறவிகளிலும் தொடரும் அனைத்து கர்மச்சுமைகளையும் ஜன்ம நட்சத்திர விருட்சம் பெற்றுக் கொண்டு நம்மை பரிசுத்தமான ஆத்மாவாக உயர்த்தும்;


இதன் மூலமாக ஜன்மாந்திர விமோசனம் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் கிட்டும்;

நீண்டகாலமாக இருந்து வந்த கடன் அல்லது நோய் அல்லது துயரங்கள் அல்லது குடும்ப ஒற்றுமையின்மை விலகிச் சென்றுவிடும்;

தமது குருவாக ஏதாவது ஒரு சித்தரை ஏற்றுக் கொண்டவர்களுக்கும்

ஆலயத் திருப்பணியை ஏற்று அதை முழுமைப்படுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கும்

பூர்வீகச் சொத்து இன்னும் கிடைக்காமல் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கும்

சீவனை சிவனோடு ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இருப்பவர்களுக்கும்

முக்திக்காக பல பிறவிகளாகப் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கும்

பலவிதமான பரிகாரங்கள் செய்தும் இன்னும் எமது வாழ்க்கையில் ஒரு விடிவு வரவில்லை என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கும்
இந்த நட்சத்திர ஆராதனை பெளர்ணமி வரங்களை அள்ளித் தரப் போகின்றது;

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் தமது பெயர்,ஜன்ம நட்சத்திரம்,வசிக்கும் ஊர் போன்றவைகளை 9629439499 என்ற செல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்;
ஒரு குடும்பத்தில் இருந்து எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம்;


இந்த ஜன்ம நட்சத்திர ஆராதனை பெளர்ணமியைத் தவறவிடுபவர்கள் கி.பி.2136 வரை காத்திருக்க வேண்டியிருக்கும்;


சோழாபுரம் வழி:

வடக்கு தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு:மதுரை டூ ராஜபாளையம்;ராஜபாளையம் டூ சங்கரன் கோவில் சாலையில் 8 வது கி.மீ.தூரத்தில் சோழாபுரம் இருக்கின்றது;

தெற்கு தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு:திருநெல்வேலி டூ சங்கரன் கோவில்;சங்கரன் கோவில் டூ ராஜபாளையம் சாலையில் முறம்பு என்ற கிராமத்து ஸ்டாப்பில் இறங்கி ஆட்டோ பிடித்து வரவேண்டியிருக்கும்;

சென்னை டூ மதுரை மார்க்கம் ரயில் வழியாக வருபவர்கள் ராஜபாளையம் வந்து அங்கிருந்து டவுண் பஸ்ஸில் பயணிக்கலாம்;


ஓம் மகாதேவசித்த குரு துணை

No comments:

Post a Comment