Tuesday, October 27, 2009

தூத்துக்குடியில் ஒரு கேது ஆலயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கேதுபகவானின் கோவில்

நவக்கிரகங்களில் ராகுவை விட பலம் மிக்கக்கிரகம் கேது.
ஞானமார்க்கத்தில் அளவற்ற ஈடுபாட்டைத்தருவது கேதுபகவானே!
கேதுபகவானின் அகில இந்தியஸ்தலம் ஆந்திராவில் உள்ள திருக்காளஹஸ்தி என்ற சிவாலயம் ஆகும்.
தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் உள்ள கீழப்பெரும்பள்ளம் ஆகும்.
ஸர்ப்ப தோஷம்,மாங்கல்ய தோஷம் முற்பிறவியில் செய்த காமம் சார்ந்த பாவங்களாலும்,நமது முன்னோர்கள்(தாத்தா மற்றும் அப்பா அம்மா,மற்றும் அவர்களின் முன்னோர்கள்) செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிக்கவே குழந்தை பிறக்கின்றன.
இந்த தோஷமுள்ள குழந்தைகள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பர்.

தென் தமிழ்நாட்டுமக்கள் கேதுபகவானை வழிபடுவதற்காக ஒரு புராதன ஸ்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகில் அமைந்துள்ளது.
ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையே ராஜபதி என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது.இங்குள்ள சிவபெருமானின் அம்சமாக கேதுபகவான் இருக்கிறார்.முற்காலத்தில் அரசர்கள் போரில் வெற்றி பெறுவதற்காக இந்த கேதுபகவானை வழிபட்டிருக்கின்றனர்.தற்காலத்தில்,அரசியல்வாதிகள் அரசியல்வெற்றிபெற இவரை அடிக்கடி வழிபட்டுவருகின்றனர்.

சிதிலமடைந்த இந்த கோவிலை புனர்நிர்மாணம் செய்ய சிவபக்தர்கள் ஒன்றிணைந்து கைலாஷ் அறக்கட்டளையை உருவாக்கியுள்ளனர்.கி.பி.2010 ஆம் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் செய்ய இருக்கின்றனர்.அன்பளிப்பு வழங்கிட விரும்புவோர் கைலாஷ் அறக்கட்டளை,94/107,தனுஷ்கோடியாபுரம் தெரு,கோவில்பட்டி-628 501.செல்:9842263681க்கு அனுப்பலாம்.இணையதளம்:www.kailsahtrust.org

No comments:

Post a Comment