Wednesday, June 3, 2009

இந்துமயமாகிவரும் அமெரிக்கா:ஆதாரங்களுடன்




இந்துமயமாகிவரும் அமெரிக்கா

அமெரிக்காவின் பூர்வீக குடிமக்கள் செவ்விந்தியர்கள்.

அவர்களுக்கும் நமது இந்துக்களுக்கும் பண்பாட்டு ரீதியான

ஒற்றுமை நிறையவே இருக்கிறதாம்.அதற்கு பல உதாரண-



ங்களை எடுத்துக்காட்டி கட்டுரையாக வெளியிட்டிருக்கிறார்



அமெரிக்கரான பிரான்சிஸ்.அவரது கட்டுரையிலிருந்து சில



அம்சங்கள் மட்டும்:

அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் ரியோ கிரேண்ட், மிசிசிபி ஆகிய நதிகளில் கங்கை நதிநீரை கலந்து புனிதமாக்கி வருகி-
றார்கள்.(ஆனந்த தாண்டவம் தமிழ்ப்படத்தின் இடைவெளிக்கு
பிறகு உள்ள காட்சிகளை நினைத்துக் கொள்ளவும்)
அது மட்டுமல்லாமல்,பாரதத்தில் உள்ள புனிதமான திருமலை
திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் போன்று
பிட்ஸ்பர்க்கிலும் ஒரு பெருமாள் கோவிலை அமைத்திருக்கி-
றார்கள்.(கூகுள் எர்த் தினை பதிவிறக்கம் செய்து அமெரிக்கா-
பிட்ஸ்பர்க்-பெருமாள் டெம்பிள் எனத் தேடவும்)இதே
போன்று சிவன், அம்மன் என வட அமெரிக்கக் கண்டத்தில்
(அமெரிக்கா நாட்டில்) 1,500 க்கும் மேற்பட்ட ஆலங்களை
கட்டியிருக்கிறார்கள்.



ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் சமயத்துறைப்
பேராசியராகப் பணியாற்றிவரும் வசுதா நாராயணன்,
“அமெரிக்காவிற்கும் பாரதத்திற்கும் கலாச்சார ரீதியான
ஒற்றுமை இருக்கிறது.இதனை இந்துப்புராணங்களே
விவரித்திருக்கின்றன”என்கிறார்.



வடபாரதத்தில் உள்ள பார்சானா என்ற இடம் ஸ்ரீகிருஷ்ணரின்
மனைவியான ராதை அவதரித்த இடமாகும்.
அதை மனதிற்கொண்டு அமெரிக்காவில் உள்ள
ஹவாய் அருகில் உள்ள பகுதிக்கு பார்ஸானா என்ற
பெயரிட்டு அங்கு கிருஷ்ணருக்கும் ராதைக்கும்
கோயில் அமைத்துள்ளனர்.



மகாபாரதத்தில் அர்ஜீனனின் மனைவிகளில் ஒருத்தி
அமெரிக்காவில் பிறந்தவள்.கிருஷ்ணரும் அர்ஜீனனும்
மகாபாரத காலத்திலேயே இன்றைய ஸ்டீம்போட் போன்ற
அந்தக்கால நாவாய் மூலமாக அமெரிக்காவிற்குப் பலமுறை
கடல் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளபடம் செயற்கைக்கோளிலிருந்து அமெரிக்காவை எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

4 comments:

  1. yppoi burudavukku oru alave illaya... hmm innum ennk kathayellam kekkap poreno theriyaliye. punnakku

    ReplyDelete
  2. yppoi burudavukku oru alave illaya... hmm innum ennk kathayellam kekkap poreno theriyaliye. punnakku

    ReplyDelete
  3. ஆமாம்.அமெரிக்கா டுபாக்கூர் நாடுதான்.


    வெட்டி பந்தா,ஓவர் கான்பிடன்ஸ் இவையெல்லாம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஐ.டி.துறைவழியாக அதிகமாகப் பரவிவிட்டது.இதனால், நம் நாட்டுக்கு நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம்.

    அமெரிக்காவிலிருந்து நம் நாட்டுக்கு வந்தவைகளால் தீமைகளே அதிகம்.எம்.எல்.எம்., கோலாக்கள்,ஐ.பேட்,பீசா,ஹார்ன் பிளக் இவற்றால் தீமைகளே அதிகம்.

    புருடா நாங்கள் விடுவது இருக்கட்டும்.நீங்கள் தினமும் தினசரிப் பத்திரிகைகள் வாசிப்பதுண்டா?(அப்படி வாசிக்கக் கூட நேரமில்லாமல்தான் அமெரிக்காவுக்கு கொத்தடிமையாக வேலை பார்க்கிறீர்கள்.) அப்படி வாசிக்கும் பழக்கம் இருந்தால் இப்படி புண்ணாக்குத் தனமாக எழுதமாட்டீர்கள்.ஒரே ஒரு நாள் இந்தியாவின் மொத்த ஐ.டி.துறையும் ஸ்தம்பித்தால் அமெரிக்காவால் மூச்சுவிட முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

    ஆதாரம் இல்லாமல் எந்த செய்தியையும் ஆன்மீகக்கடலில் எழுதுவதில்லை;
    நீங்கள்தான் உங்களை மறைத்துக் கொண்டு உங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளீர்கள்.

    ReplyDelete