Monday, January 11, 2021

படிப்படியான செல்வ வளம் பெருக

 




உங்கள் வீட்டில் 4 முதல் 5 ஆண்டுகள் வரை தினமும் ஒரு முறை வராகி மாலை பாடல்கள் 32 ஐயும் இரவில் ஜபித்து வர வேண்டும்;இதன் மூலமாக,உங்கள் குடும்பத்தின் தலைமை அன்னையாக மஹாவராகி ஆகி இப்பிறவி முழுவதும் சூட்சுமமாக வழிநடத்துவாள்;

உங்களிடம் பின்வரும் அன்னையின் படம் வீட்டில் இருக்க வேண்டும்;உங்களுடைய ஜன்ம நட்சத்திரத்திற்கு 2,4,6,8,10 வது நட்சத்திரம் வரும் நாளன்று இரவில் குரு ஓரை அல்லது புதன் ஓரையில் பின் வருமாறு அன்னை மஹாவராகியை வழிபட வேண்டும்;

மரிக்கொழுந்து மாலையை அன்னையின் படத்திற்கு அணிவிக்க வேண்டும்;பிறகு,மல்லிகை உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்;அப்போது கோரைக்கிழங்கால் செய்த பாயாசத்தை அன்னையின் படையலாக வைக்க வேண்டும்;

இருகுழைக் கோமளம் தாள்புட்ப ராகம்  இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக்கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே!


என்ற இந்த பாடலை 25 முறை ஜபிக்க வேண்டும்;இப்படி ஓராண்டு வரை செய்து வர படிப்படியாக வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும்;


4 முதல் 5 ஆண்டுகள் வரை தினமும் வராகி மாலை ஜபித்து முடித்துவிட்டால்,இதுவரை உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தாருக்கோ பிறர் செய்த மாந்திரீகத் தீங்குகள் விலகிவிடும்;இந்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை அசைவம்,மதுவைக் கண்டிப்பாக கைவிட்டிருக்க வேண்டும்;தமிழ்ப் பண்பாட்டினை விடாப்பிடியாக பின்பற்றி வந்திருந்தால்,இந்த வருமான அதிகரிப்பு பூஜை முழுமையான பலனைத் தரும்;

No comments:

Post a Comment