Saturday, October 19, 2019

கண்டச்சனி தீர பைரவப் பரிகாரம்



ஜனவரி 2020 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு கடகராசியினருக்கு கண்டச்சனி எனப்படும் ஏழாமிடத்துச்சனி நடைபெறுகிறது.இது இல்லறத்தில் இணையற்ற துன்பங்களைத் தரும்.இதைச் சரி செய்ய, அசைவம் சாப்பிடுவதை கைவிட வேண்டும்.கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.மதுப் பழக்கத்தையும் கைவிட்டிருக்க வேண்டும்;

ஓவ்வொரு திங்கட் கிழமையும் காலை 7.30 முதல் 9 மணிக்குள் அல்லிமலர் மாலை ,புனுகு பூசி,சாம்பல் பூசணியில் இலுப்பையெண்ணெய் தீபமேற்ற வேண்டும்.பாகற்காய் கலந்த சாதத்தை படையலிட்டு,அர்ச்சனை செய்ய வேண்டும்.அல்லது அர்ச்சனை செய்வதற்குப் பதிலாக பைரவ சதநாமாவளியை மனதுக்குள் பாட வேண்டும்.


சனிப்பிரதோஷ நாட்களில்  திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
அல்லது
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்


அல்லது

உங்கள் வீட்டிலேயே தினமும் 1008/108 முறை ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ அல்லது ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ ஜபித்து/எழுதி வர வேண்டும்;

No comments:

Post a Comment