Friday, October 18, 2019

ஜன்மச் சனியின் துயரம் தீர பைரவ ஜபம் அல்லது வழிபாடு



ஜனவரி 2020 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு மகர ராசியை சனிபகவான் கடக்கிறார்;

இதுவே மகர ராசியினருக்கு ஏழரைச்சனியில் இரண்டாவது பகுதியான ஜன்மச்சனி ஆகும்.இந்த ஜன்மச்சனியின் தாக்கத்தைக் குறைக்க பின்வரும் முறையில் பைரவர் வழிபாடு செய்துவர வேண்டும்.


சனிக்கிழமை வரும் இராகு காலத்தில் கால பைரவர் சன்னிதியில் மண் அகல் விளக்கை,கருப்பு வண்ணம் பூசி,அதில் பாதி நெய்யும்,பாதி இலுப்பெண்ணெய்யும்,ஒரு சொட்டு எலுமிச்சை சாறும் கலந்து விளக்கு ஏற்றிட வேண்டும்.அதன்பிறகு பைரவ அஷ்டகம் மனதுக்குள் வாசிக்க வேண்டும்.ஓய்வு நேரமிருப்பவர்கள் பைரவ அஷ்டகத்தை எட்டு முறை வாசிப்பது நன்று.

அதே சமயம்,இந்த இரண்டரை ஆண்டுகள் முழுவதும் மகர ராசியினர் அசைவம் சாப்பிடக்கூடாது;முட்டை,முட்டை கலந்த பொருட்கள்,புரோட்டா போன்றவைகளையும் சாப்பிடுவது தவறு.
மேலும் எளிய வாழ்க்கை வாழ வேண்டும்.தரையில் படுத்து தூங்க வேண்டும் .(ஆடம்பரமான படுக்கையில் தூங்கக்கூடாது)ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முகத்தை மழிக்க வேண்டும்.சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோர்களுக்கும்,அனாதைகளுக்கும் அன்னதானம் செய்துவரவேண்டும்.எண்ணிக்கை உங்களது பண வசதியைப் பொருத்தது.

சனிப்பிரதோஷ நாட்களில் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;மாலை 4.30க்குள் ஈசானலிங்கத்தை அடைந்திருக்க வேண்டும்; அங்கே நடைபெறும் சனிப் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்; இதனால்,சனிபகவானின் தாக்கம் படிப்படியாக குறையத் துவங்கும்;இது பல நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.(விழுப்புரம் அருகில் இருப்பது தான் உண்மையான அண்ணாமலை என்ற திருவண்ணாமலை ஆகும்)

அல்லது

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

அல்லது

தினமும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை 1008 முறை ஜபிக்க வேண்டும்;ஜபிக்க இயலாதவர்கள் எழுதலாம்;

1008 முறை இயலாதவர்கள் 108 முறையாவது அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு நாள் விடாமல் ஜபிக்க/எழுத வேண்டும்;

21 வயது முதல் 39 வயதுக்கு உள்பட்ட மகர ராசியில் பிறந்தவர்கள்,தினமும் 1008 முறை ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்து வர வேண்டும்;ஜபிக்க இயலாதவர்கள் எழுதி வர வேண்டும்;

1008 முறை இயலாதவர்கள் 108 முறையாவது அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு நாள் விடாமல் ஜபிக்க/எழுத வேண்டும்;

No comments:

Post a Comment