Wednesday, March 27, 2019

ஏன் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் ஜபிக்க வேண்டும்?



உங்களுக்கு இன்றுவரை கிடைக்கும் வருமானத்திற்கும்,இனிமேல் வர இருக்கும் வருமானங்களுக்கும் யார் காரணம் தெரியுமா?
நீங்கள் மட்டும் தான்!


உங்களுக்கு இன்றுவரை இருக்கும் சொத்துக்கள்,மறைமுக வருமானத்திற்கும்,இனிமேல் வர இருக்கும் சொத்துக்கள்,சம்பாத்தியங்களுக்கும் யார் காரணம் தெரியுமா?
நீங்கள் மட்டும் தான்!


உங்களுடைய கடன் அல்லது நோய் அல்லது எதிரி/துரோகிகளின் தொல்லைகளுக்கு காரணம் யார் தெரியுமா?
இதற்கும் நீங்கள் மட்டுமே காரணம்!!!
($ நம்முடைய முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் புண்ணியத்தில் 8 இல் 1 பங்கை மட்டுமே நாம் அனுபவிக்கின்றோம்;மீதி 7 பங்கு நம்முடையது மட்டுமே!)


மாயை என்ற சக்தியின் மூலமாக நம்மையும்,நமது முற்பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களைப் பற்றிய உண்மைகளையும் ஈசன் நம்மிடம் இருந்து மறைத்து இருக்கின்றார்;


நம்முடைய கர்மவினைகளை படிப்படியாக நீக்கி,இப்பிறவியில் நமது வருமானம் அதிகரித்து,பொருளாதார தன்னிறைவை எட்டிட நாம் செய்ய வேண்டிய ஜபம் எது தெரியுமா?


பைரவ ஜபம்!


கால பைரவரை ஜபித்து வந்தால் அல்லது கால பைரவரை தொடர்ந்து வழிபட்டால்,நமது கர்மவினைகள் படிப்படியாகக் குறையும்;நிம்மதியான வாழ்க்கை கிடைக்கத் துவங்கும்;வருமானம் அதிகரிக்காது;


ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் ஜபித்து வந்தால்,கர்மவினை குறையும்;அதே சமயத்தில் வருமானமும் அதிகரிக்கும்;நம்மில் எத்தனை பேர்களுடைய வீட்டில் வைர நகைகள்,முத்து நகைகள்,பவளம்,கோமேதகம்,வைடூரியம் சார்ந்த நகைகள் இருக்கின்றன?


1000 குடும்பங்களில் ஒரே ஒரு குடும்பத்தில் இருக்கலாம்;
10,000 குடும்பங்களில் ஒரே ஒரு குடும்பத்தில் இருக்கலாம்;
ஏன் எல்லோருடைய வீட்டிலும் நவரத்தினங்களுடன் கூடிய நகைகள் இல்லை;ஏனென்றால்,கடுமையான கர்மவினைகளுடன் பிறப்பவர்களின் வீடுகளில் தங்க நகைகள் கூட இருப்பதில்லை;அவை பெரும்பாலும் வட்டிக்கடையில் இருக்கும்; அல்லது வங்கிக் கடனாக இருக்கும்;இதுவும் கர்மவினையின் விளைவுகளால் தான்!

இதை ஒரே ஒரு நாள் மந்திர ஜபத்தால் சரிசெய்ய முடியாது;ஒரே ஒரு மாத மந்திர ஜபத்தால் சரி செய்யவும் முடியாது;ஆனால்,விடாமுயற்சியாக 3 முதல் 5 ஆண்டுகள் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ ஜபத்தால் கர்மவினைகளை நீக்கி/குறைத்து செல்வ வளத்தைப் பெருக்க முடியும்!


முற்பிறவிகள் மூன்று அல்லது நான்கில் நாம் செய்த புண்ணியச் செயல்கள்,தானங்கள்,உழவாரப் பணி,இறைச் சேவைகளின் விளைவுகள் தான் இப்பிறவியில் நமக்கு இவ்வளவு செல்வ வளமாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது;


போன பிறவிகளில் பள்ளியறை பூஜைக்கு பிரசாதம் தயார் செய்து,அதை இறைவனுக்கு மனதார (கவனிக்கவும்=மனதார) படைத்து,அதை அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு பகிர்ந்து கொடுத்திருந்தால்,அவரே இப்பிறவியில் பல கோடி ரூபாய்களுக்கு அதிபதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று அகத்திய மகரிஷியின் கிரந்தங்கள் தெரிவிக்கின்றன;


போன பிறவிகளில் கோவிலில் வாழ்ந்து வரும் ஈசனுக்கும்,அம்பாளுக்கும் தனது சொந்த வருமானத்தில் மனதார தேர் செய்து கொடுத்திருந்தால்,அவரே இப்பிறவியில் விலை உயர்ந்த காருக்கு சொந்தக் காரராக இருக்கின்றார்;


போன பிறவியில் பல நூறு அல்லது ஆயிரம் பேர்களுக்கு இலவசமாக ஏதாவது ஒரு வித்தையை (கல்வி) சொல்லிக் கொடுத்து,அதில் அவர்களை நிபுணர்களாக ஆக்கியிருந்தவரே,இப்பிறவியில் கல்வித் தந்தையாக உருமாறியிருக்கின்றார்;


எப்படி உங்களுக்கு வருமானம் வருகின்றது என்பதை நீங்கள் யாருக்காவது சொல்லித் தருவீர்களா? ஒரு போதும் மாட்டீர்கள்;உங்கள் வாரிசுக்கோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணைக்கோ மட்டும் சொல்லித் தருவீர்கள்;

அதே போல,எப்படி உங்கள் வருமானம் அதிகரிக்கின்றது என்பதை உங்கள் நட்பு வட்டம் அல்லது உறவினர் வட்டத்தில் ஒரே ஒருவருக்கு தெரிவித்தாலும்,அதன் பிறகு,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ ஜபத்தை உங்களால் தொடர முடியாமல் போய்விடும்;


1990களை விடவும் இன்றைய 2020 களில் போட்டி மனப்பான்மை குறுகி,பொறாமையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது;இதற்கு உலக அரசியலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கார்பரேட் வணிகமும் காரணம்!


$ 3 முதல் 5 ஆண்டுகளுக்கு அசைவம்,மது இரண்டையும் கைவிட்டவர்களுக்கே இந்த ஜபம் செல்வ வளத்தைத் தரும்;
$ இந்த ஜபத்தை வீட்டில் இருப்பவர்களைத் தவிர,பிறருக்குத் தெரியாமல் பரம ரகசியமாக ஜபித்தால் மட்டுமே செல்வ வளத்தைத் தரும்;
$ வெளியே இந்து போல நடித்துக் கொண்டு,ரகசிய கிறிஸ்தவராக வாழ்ந்து வருபவர்களுக்கு இது பலன் தராது;
$ கூடாத நாட்களில் பிறந்தவர்கள்,அவர்களோடு நெருக்கமான நட்பில் இருப்பவர்களுக்கு இந்த ஜபம் பலன் தர இரு மடங்கு காலம் ஆகும்;
$ ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் போது,அண்ணாமலை கிரிவலம் செல்பவர்களுக்கு விரைவாக பலன் கிடைத்திருக்கின்றது;
$ ஜன்மச்சனி மற்றும் அஷ்டமச்சனி காலத்தில் இந்த ஜபம் சற்று தாமதமாக பலன் தருகின்றது;

வீட்டிலேயே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவர் ஜபம் செய்ய தேவையான பொருட்கள்:

1.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படம் (இன்றைய ஆனந்த விகடன் பத்திரிகை அளவுக்கு இருக்க வேண்டும்;அதாவது அகலம் 9 செ மீ;நீளம்/உயரம் 12 செ மீ)
2.பசு நெய்+தாமரை தண்டுத் திரி,மண் விளக்கு,தீப்பெட்டி(இவருக்கு என்று தனியாக இவைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்)
3.சந்தன பத்தி
4.மஞ்சள் பட்டுத் துண்டு அல்லது சாதாரண மஞ்சள் நிறத் துண்டு இரண்டு
5.கையால் எழுதப் பட்ட சொர்ண பைரவ அஷ்டகம்
6.தினமும் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பூஜை செய்ய வேண்டும் என்ற வைராக்கியம்

ஒரு அமாவாசை அல்லது வளர்பிறை திதி ஒன்றில் இவைகளைக் கொண்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;வடக்கு அல்லது கிழக்கு நோக்கி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைக்க வேண்டும்;ஆணியில் மாட்டலாம் அல்லது மணையில் ஒரு சுத்தமான மஞ்சள் துண்டினை மடித்து அதன்மீது வைக்கலாம்;

புதிய மண் விளக்கில்(அகல் விளக்கு) பசுநெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்;சந்தன பத்தியை ஏற்ற வைக்க வேண்டும்;

இன்னொரு மஞ்சள் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;நீங்கள் கையால் எழுதிய சொர்ண பைரவ அஷ்டகத்தை 33 முறை ஜபிக்க வேண்டும்;

பலருக்கு ஜபம் புதியதாக இருக்கும்;அவர்கள் முதல் வாரம் வரை தினமும் 7 முறையும்,இரண்டாவது வாரம் வரை தினமும் 14 முறையும்,மூன்றாவது வாரம் வரை தினமும் 21 முறையும்,நான்காவது வாரம் வரை தினமும் 28 முறையும்,ஐந்தாவது வாரம் முதல் 150 வது வாரம் வரை       (3 ஆண்டுகள்) தினமும் 33 முறையும் ஜபித்து வர வேண்டும்;
ஜபித்து முடித்ததும்,தீபத்தை அணைத்து விட வேண்டும்;விடிகாலை 5 மணிக்குள் ஜபிக்க ஆரம்பித்து,சூரிய உதயத்திற்குள் (காலை 6 மணி) ஜபித்தை நிறைவு செய்துவிட வேண்டும்;

52 வாரங்களுக்குப் பிறகு,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் தொடர்புடைய கனவு ஒன்று உங்களுக்கு வரும்;அதுதான் நீங்கள் மனப்பூர்வமாக ஜபித்துள்ளீர்கள் என்பதற்கு ஆதாரம்;


சொர்ண பைரவ அஷ்டகம் ஜபிப்பதற்குப் பதிலாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை தினமும் 330 முறை ஜபிக்கலாம்;அல்லது பின்வரும் மந்திரத்தை தினமும் 1008 முறை ஜபிக்கலாம்;


ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் சொர்ணதாயி நம ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்


இதில் ஏதாவது ஒரு மந்திரத்தை மட்டுமே முதல் நாளில் இருந்து இறுதி நாள் வரை (3 ஆண்டின் முடிவு அல்லது 5 ஆம் ஆண்டின் முடிவு) ஜபிக்க வேண்டும்;மூன்று மந்திரங்களையும் ஜபிக்க கூடாது;


இங்கே உங்களுக்கு வழங்கியிருப்பது இல்லறவாசிகள் செல்வ வளம் பெருக செய்ய வேண்டிய ஜபமுறை தான்;

இதற்கு தீட்சை தேவை இல்லை;

அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;(3 அல்லது 5 ஆண்டுகள் வரை மட்டும்);

இந்த முயற்சியை எவருக்கும் தெரிவிக்கக் கூடாது;

இது உபாசனை அல்ல;

தாம்பத்தியக் கட்டுப்பாடு கிடையாது;


ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment