Monday, March 4, 2019

கடுமையான பாவ வினைகளை போக்கும் சிவ மந்திர ஜபம்!!!




உங்கள் வாழ்க்கையில் இனிமேலும் வறுமை,நோய்,எதிரி,துரோகி,துன்பங்கள் தொடராமல் இருக்க ஒரு வழிமுறை கிடைத்திருக்கின்றது;(அண்ணாமலை கிரிவலம்,குலதெய்வ வழிபாடு,கோமாதா பூஜை என்ற கோ சம்ரக்ஷணம் போன்றவைகளும் நமது பாவ வினைகளைப் போக்கும்)


ஒரே ஒரு சிவலிங்கத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு ஒரு சிவ மந்திரத்தை ஜபித்தாலே அதன் பலன் நம்மை வந்து சேரும்;சிலருக்கு இப்பிறவியில் மந்திர ஜபப் பலன் வந்து சேரும்;பலருக்கு அடுத்த பிறவியில் மந்திர ஜபப் பலன் வந்து சேரும்;யாருக்கு எப்படி எப்போது வந்து சேரும்? என்று ஆராயும் போது,ஜோதிடக் கலை தான் அதற்கு விடையை தந்தது;

ஒருவர் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 1,2,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சுக்கிரன் இருந்தால்,அவர் இப்பிறவியில் செய்யும் பாவ,புண்ணியத்தின் பலனை இப்பிறவியிலேயே அனுபவிப்பார்;
ஒருவர் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 3,6,8,12 ஆம் இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சுக்கிரன் இருந்தால்,அவர் இப்பிறவியில் செய்யும் பாவ,புண்ணியத்தின் பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்;


சகஸ்ரலிங்கம் என்று ஒருவித சிவலிங்கம் இருக்கின்றது;1964 முதல் 2018 வரை தமிழ்நாட்டில் நாத்திகப் பிரச்சாரம் செய்தார்கள்;அதன் விளைவாக,சிவாலயத்தில் ஒவ்வொரு சன்னதியிலும் இருக்கும் தெய்வீக சக்திகளின் வரலாறு,வழிபாடு செய்யும் முறைகள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது;இதே நிலைதான் மஹாவிஷ்ணு ஆலயங்களிலும் எப்படி,எந்த தெய்வத்தை எந்த திதி அல்லது கிழமையில் என்னென்ன பொருட்களால் அபிஷேகம்,அர்ச்சனை,அலங்காரம்,துதியுடன் வழிபட வேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது;


சகஸ்ரலிங்கம் என்பது எல்லா சிவாலயங்களிலும் இருப்பதில்லை;150 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் ஒரு சிவாலயத்தில் சுயம்புவாக உருவாகும் அபூர்வமான சிவலிங்கம் ஆகும்;ஒரு பெரிய சிவலிங்கத்தின் மீது சிறிது சிறிதாக 1000 லிங்கங்கள் இருக்கும்;அதுதான் சகஸ்ரலிங்கம் ஆகும்;
சகஸ்ர லிங்கத்தின் முன்பாக அமர்ந்து இம்மந்திரத்தை ஒரு தடவை ஜபித்தால்,அது சகஸ்ரலிங்கத்தின் மீது பட்டு,1000 மடங்காக திரும்பி வந்து நமது உடலுக்குள் சேரும்;


தினமும் ஒரு மணி நேரம் வரை அல்லது ஒவ்வொரு விடுமுறை நாளிலும் ஒரு மணி நேரம் வரை அல்லது ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் அன்றும் ஒரு மணி நேரம் வரை பின்வரும் மந்திரத்தை ஜபித்து வர வேண்டும்;குறைந்தது 3 ஆண்டுகள் வரை ஜபிக்க வேண்டும்;அதிகபட்சமாக நமது வாழ்நாளில் 40 ஆண்டுகள் வரை ஜபித்து வரலாம்;இதன் மூலமாக,கடுமையான பாவ வினைகள் தீர்ந்துவிடும்;


முக்கிய சுய கட்டுப்பாடு என்னவெனில்,இந்த 3 ஆண்டுகள் வரை(அல்லது 40 ஆண்டுகள் வரை) கண்டிப்பாக மது,அசைவம் தவிர்த்து இருக்க வேண்டும்;இல்லாவிட்டால்,மந்திர ஜபம் பலன் தராது;

காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் நமோ நமஹ

இதுதான் அந்த மந்திரம்! இம் மந்திரத்தை அகத்திய சித்தரின் பேரருளாலும்,அருணாச்சலேஸ்வரரின் கருணையாலும் உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;


இம் மந்திரத்தை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் வரை ஜபித்தால்,உங்கள் ஜப எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கும்;அப்படி கடந்ததும்,உங்களது தினசரி வாழ்க்கை இப்போது இருப்பதை விடவும் மிகவும் இலகுவாக இருக்கும்;இதுவரை உங்கள் மாத வருமானம் ரூ.12,000/-எனில்,இனிமேல்,உங்கள் 15 நாள் வருமானமாக ரூ.12,000/-உயர்ந்துவிடும்;

ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும் அண்ணாமலை கிரிவலம் வரும்போதும் இம்மந்திரத்தை மட்டும் ஜபிக்கலாம்;
திருக்கையிலாயத்தை வலம் வர இங்கிருந்து பலர் செல்கின்றார்கள்;அப்போதும் இம்மந்திரத்தை ஜபிக்கலாம்;

அண்ணாமலையைத் தவிர,தமிழ்நாட்டில் பல நூறு சிவாலயங்கள் மலை மீது இருக்கின்றன;அந்த மலையை பவுர்ணமி நாட்களில் பல லட்சம் மக்கள்   வலம் வருகின்றார்கள்;அப்போதும் கூட இம்மந்திரத்தை ஜபிக்கலாம்;



ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment