Sunday, July 15, 2018

காமரீதியான பிரச்னைகளும்,கலியுகத்தின் வீச்சும்




ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழர்ப் பண்பாடிலும் கூட மனித ஆரோக்கியம் ஒளிந்திருக்கிறது.காம இச்சை என்பது மிருக குணம்தான்.அது அளவு மீறும்போது!!!தமிழர் பண்பாடுதான் இந்துப் பண்பாடாக பரிணமித்திருக்கிறது.தொல்காப்பியத்தில் இருந்து இன்றைய திரைப்படங்கள் வரை இதற்குரிய  ஆதாரங்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றன;



சுக்கிலம் என்பது விந்து அல்ல;அது காமக்கிளர்ச்சி உண்டாகும்போது ஆணின் உடலில் இருந்து வெளிப்படுவது! அதே போல பெண்ணின் உடலில் இருந்து வெளிப்படுவதற்கு சுரோணிதம் என்று பெயர்.


ஒரு பெண் ஒரே ஒரு ஆணுடன் தாம்பத்தியம் கொண்டு வாழ்ந்துவருவதாலும்,ஒரு ஆண் ஒரேஒரு பெண்ணுடன் தாம்பத்தியம் கொண்டு வாழ்ந்து வருவதாலும் இந்த ஆணின் சுக்கிலம்,அவனது ஜோடியான பெண்ணின் உடலுக்குள் பாய்கிறது.அதே போல,அந்தப் பெண்ணின் சுரோணிதம்,இந்த ஆணின் உடலுக்குள் பாய்கிறது.இப்படி மாறிமாறிப் பாய்வதால்,இருவரின் உடல் நலமும் பரிபூரணமடைகிறது.

இதை 20,00,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழினம் ஆராய்ந்து கண்டறிந்து,ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தனது அடையாளமாக்கிக் கொண்டுவிட்டது.(2005 ஆம் ஆண்டு மாலை முரசு,தீபாவளி மலர்,திருச்சி பதிப்பில் இது தொடர்பாக எனது கட்டுரை வெளிவந்திருக்கிறது)


இந்த தமிழ்ப்பண்பாடுதான் இந்துப்பண்பாடாகவும் பரிணமித்து,மேற்கு நாடுகள் பொறாமைப் படுமளவுக்கு இந்தியா இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

1995 ஆம் ஆண்டு முதல் நமது பாரத நாட்டிற்குள் இணையம் நுழைந்தது;இன்று செல்போன் மூலமாக அனைவரது விரல் நுனியிலும் இணைய இணைப்பு தவழுகின்றது;

மேற்கு நாடுகளில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை சிறிதும் இல்லை;தனி நபர் சுதந்திரம் என்ற பெயரில் அங்கே எல்லோரும் வாழ்ந்து வருவதால்,1990 க்குப் பிறகு பெரும்பாலான ஐரோப்பிய,அமெரிக்க நாடுகள் கிழட்டு நாடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன;ஜெர்மனியில் தனது அப்பா அல்லது அம்மா யார் என்றே தெரியாத yuppies என்ற இனமே உருவாகிவிட்டது;

ஆசிய நாடுகளான பாரதம்,பாகிஸ்தான்,ஸ்ரீலங்கா,பங்களாதேஷ்,சீனா,மலேஷியா,சிங்கப்பூர்,இந்தோனோஷியா போன்ற நாடுகளில் இன்று வரையிலும் கூட ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பு வலுவாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது;இதனால்,இந்த நாடுகளின் ஜனத்தொகை அதிகரித்து உலக அமைப்புகளான ஐ.நா சபை போன்றவைகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்று அஞ்சுகின்றன ஜி 8 நாடுகள்!


எனவே தான் உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து நாகரீகங்களையும் அழித்து நாசமாக்கிட இணையம் என்ற தொழில் நுட்பத்தை உலகமயமாக்கியுள்ளது;இதன் மூலமாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டினை முழுமையாக நிர்மூலமாக்கிவிடலாம் என்று நம்புகின்றது;

தனி மனித ரீதியாக பார்த்தால் சாட்சி இல்லாத உண்மை என்பது திருமணம் ஆன தம்பதிகளின் முதலிரவு தான்; ஆனால்,இன்றோ கேமிரா செல்போன்கள் அதை நேரடியாக ஓளிபரப்புமளவுக்கு துணிந்துவிட்டார்கள்!

ஏற்கனவே பல கோடி புண்ணியங்களை போன பல பிறவிகளில் செய்தமையால் தான் இப்பிறவியில் மனிதப் பிறவி கிடைத்துள்ளது; போன 4 பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை மட்டும் அனுபவிக்கவே பிறவி எடுத்திருக்கின்றோம்;இந்த சூழ்நிலையில் தாம்பத்திய சுகத்தை வீடியோவாக எடுத்து வெளியிடுவதால்,அப்படி வெளியிடுபவர்கள்,ஷேர் செய்பவர்களின் பாவக் கணக்கு படுவேகமாக அதிகரிக்கின்றது;

சினிமா நடிகைகள் இப்பிறவியில் பல கோடி ரூபாய்கள் சம்பாதித்து சொகுசாக வாழ்ந்து வந்தாலும் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 300 கோடி மனிதப் பிறவிகள் அதிகரித்திருக்கும்;இது சினிமா நடிகர்களுக்கும் பொருந்தும்;டிவி சீரியல் நடிகர்கள்,நடிகைகளுக்கும்,விளம்பரத்தில் நடிப்பவர்களுக்கும் பொருந்தும்;

யாரையும் எக்காரணம் கொண்டும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஏங்க வைக்கக் கூடாது;அப்படி எத்தனை பேர்களை ஏங்க வைக்கின்றோமோ அத்தனை முறை மீண்டும் மனிதப் பிறவிகள் எடுத்துச் சீரழிய வேண்டும் என்று சித்தர் பெருமக்கள் தெரிவிக்கின்றார்கள்:

ஒரு ஆலயத்திற்குள் ஒரு ஆண்,ஒரு பெண்ணை ஒரே ஒரு விநாடி காதல் கண்ணோட்டத்துடனோ அல்லது காமக் கண்ணோட்டத்துடனோ பார்த்தாலே அவனுக்கு ஒரு பிறவி அதிகரித்துவிடும்;இது பெண்ணுக்கும் பொருந்தும்;

முறைப்படுத்தப்பட்ட காமமே இல்லறம் ஆகும்;அது ஒரு போதும் தவறு இல்லை;அதை ஆன்மீகம் அனுமதிக்கின்றது;

காமத்தில் பேராசையை தூண்டும் வேலையை இணையம் செய்வதால்,இணையத்தை கண்டுபிடித்தவர்கள்,அதை நிர்வாகிப்பவர்கள்,அதில் காமம் சார்ந்த வீடியோக்களில் நடித்தவர்கள்,இயக்குபவர்கள்,வெளியிடுபவர்கள் அனைவருமே மகத்தான பெண்சாபத்தினை உருவாக்கிவருகின்றார்கள்:


சித்தர்களின் பரம்பரையில் வந்த நாம் அதே முட்டாள்த்தனமான செயலைச் செய்யலாமா?

பிறவிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே இந்த மனிதப் பிறவி எடுத்திருக்கின்றோம் என்பதை ஒரு போதும் மறக்காதீர்கள்;

பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்க வெளிப்படையாக சிவ வழிபாடும்,ரகசியமாக மஹாவராகி ஜபமும் செய்து வர வேண்டும்;அங்காளபரமேஸ்வரி 108 என்ற பாடலை யார் தினமும் பாடிவருகின்றார்களோ அவர்களுக்கு மித மிஞ்சிய சிற்றின்ப ஆசைகள் விலகிச் செல்ல ஆரம்பிக்கும்;மஹாவராகியின் அவதாரங்களின் ஒன்றான அஸ்வாரூடா வராகியை தினமும் ஜபித்து வருவதன் மூலமாகவும் காம இச்சைகள் அதிகரிப்பதை நிரந்தரமாக தடுத்துவிடலாம்;ஜோதிடப்படி,சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்களும்,குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களும்,குறிப்பிட்ட மஹாதிசை நடப்பில் இருக்கும் போதும் அளவற்ற காம இச்சைகள் வருவது சகஜம்;அதில் இருந்து மீள தினமும் ஒரு மணி நேர மந்திர ஜபம் நம் ஒவ்வொருவருக்குமே அவசியம்;இவைகள் தவிர,குறிப்பிட்ட தானங்களையும் செய்து வர வேண்டும்;குறிப்பிட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபடவும் செய்ய வேண்டும்;பெங்களூர் மாநகரில் அல்சூர் ஏரிக்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு ஜீவசமாதியில் அருள் பாலிக்கும் மஹானையும் அடிக்கடி பிரார்த்தனை செய்து வர வேண்டும்;

ஆன்மீக முயற்சிகள் அனைத்தும்,மந்திர ஜபங்கள்,தானங்கள் அனைத்தையும் 18 வயதில் இருந்தே செய்து வரவேண்டும்;40 அல்லது 50 வயதுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினால் ஒரு போதும் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது;ஆன்மீகம் பற்றிய விழிப்புணர்ச்சி வராது;

வாழ்க பைரவர் அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!



No comments:

Post a Comment