Thursday, April 27, 2017

அருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்கோவில்,சுந்தரபாண்டியம்






விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா சுந்தரபாண்டியம் கிராமம்(க்ருஷணன் கோவிலில் இருந்து சதுரகிரி செல்லும் சாலையில்) இருக்கிறது.இந்த கிராமத்தின் வடக்கு எல்லையில் அருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்கோவில் அமைந்திருக்கிறது.

இந்தக் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஊட்டுப்பறை என்ற நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.இந்தக் கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் ஒரு மரத்தின் கீழே நள்ளிரவு 12 மணியளவில் பூஜைகளை முடித்துவிட்டு,படையல் சாதத்தை உருண்டையாக உருட்டி வானை நோக்கி வீசுவார்;ஒரு சாதப்பருக்கை கூட கீழே விழாது.இந்த விழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொள்ளுவார்கள்;

மேலும் இந்தக் கோவிலானது சுமார் 8 சமூகங்களுக்குச் சொந்தமான குலதெய்வம் ஆகும்.
இந்த கோவிலின் வெளியே இருக்கும் ஐயனார்சுவாமிகள் குதிரையில் வரும் பிரம்மாண்டமான சுதை இருக்கிறது.


இந்த படத்தை நமது வீட்டில்/அலுவலகத்தில்/பர்ஸில் வைத்திருந்தாலே இவர் நம்மை சூட்சுமமாகப் பாதுகாப்பார் என்பது கடந்த சில நூற்றாண்டுகளாக பல ஆயிரம் முறை நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.



No comments:

Post a Comment