Wednesday, March 30, 2016

ஏன் மந்திரஜபம் ஜபிக்க வேண்டும்?


ஏன் என்றால் நமது பிறவிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஆன்மீக நடவடிக்கைகளில் முக்கியமான நடவடிக்கை மந்திரஜபம்!

நமது மனித உடலில் நாடியும்,நரம்பும் 1,00,000 மையங்களில் இருந்து நம்மை இயக்கிக் கொண்டு இருக்கின்றது;அதனால் தான் நாம் நோய் நொடி இன்றி வாழ்ந்து வருகிறோம்;இந்த 1,00,000 மையங்களிலும் நாம் ஏதாவது ஒரு மந்திரத்தை அல்லது மந்திரத் தொகுப்பை ஒரு முறை ஜபத்தின் மூலமாக பதிய வைக்க வேண்டும்;அப்படிச் செய்வதற்குத்தான் ஒரு நாளுக்கு காலையில் ஒரு மணி நேரம்,இரவில் ஒரு மணி நேரம் என்று மந்திரத்தை ஜபிக்கும் படி வலியுறுத்துகிறோம்;

இப்படித் தொடர்ந்து செய்து வந்தால்,ஒரு வருடத்திற்குள் (சிலருக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள்) அந்த மந்திரம் அல்லது மந்திர தொகுப்பு சித்தி ஆகிவிடும்;அதன் பிறகு,அடுத்த கட்ட மந்திரம் உபதேசமாக நம்மைத் தேடி வரும்;

சில மந்திரங்களை ஒரு லட்சத்துக்கும் மேல் ஜபிக்க வேண்டியிருக்கும்;அப்படி ஜபிக்க வேண்டியிருக்கும் சூழ்நிலையில் முதல் 1,00,000 தடவை ஜபித்தாலே நமது சிந்தனை சீராகிவிடும்;செயல் துல்லியமாகிவிடும்;கர்மவினை அல்லது நவக்கிரகத்தினால் வர இருக்கும் தீமைகள் 1% அளவுக்கு குறைந்துவிடும்;அதன் பிறகு,வாழ்க்கையே வாழ்க்கையின் போக்கே ஆன்மீகமயமாகிவிடும்;

ஆமாம்!

இன்று முதல் அன்னை ஆதிவராகி என்ற அரசாலையின் மந்திர ஜபத்தை ஆரம்பிப்போமா?

அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,மது அருந்துவதையும் தவிர்த்துவிட்டு,காலையில் 15 நிமிடம்(காலை 6 மணிக்குள்);இரவில் 15 நிமிடம்(மாலை 6 மணிக்கு மேல் இரவு 12 மணிக்குள்) பின்வரும் அன்னை அரசாலையின் 12 பெயர்களை வீட்டில் ஜபித்து வரவும்;ஜபிக்கும் போது பச்சை நிறத்துண்டின் மீது அமர்ந்து கொள்வது மிகவும் நன்று;

நம்முடைய பணக்கஷ்டம் நீங்கிட இந்த பச்சைத்துண்டு ஜபம் கைகொடுக்கும்;

சுமாராக ஒரு வருடம் வரை ஒரு நாள் கூடவிடாமல் ஜபித்துவரவும்;

இன்று முதல் ஒரு மாதம் வரை காலையில் 15 நிமிடம்;இரவில் 15 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;

31 வது நாள் முதல் 60 வது நாள் வரை காலையில் 30 நிமிடம்;இரவில் 30 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;(வாய்விட்டுச் சொல்லக் கூடாது;மனதுக்குள் சொன்னால் போதும்)

61 வது நாள் முதல் 90 வது நாள் வரை காலையில் 45 நிமிடம்;இரவில் 45 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;

91 வது நாள் முதல் 360 வது நாள் வரை காலையில் 60 நிமிடம்;இரவில் 60 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;

சிலருக்கு காலையில் 30 நிமிடம்;இரவில் 30 நிமிடம் வரை ஜபிக்கும் போதே தலைவலி வரலாம்;உடல் சூடாகலாம்;அவர்கள் 360 வது நாள் வரையிலும் தினமும் காலையில் 30 நிமிடம்,இரவில் 30 நிமிடம் வரை ஜபித்து வந்தால் போதுமானது;

இதோ அன்னை ஆதிவராகி என்ற மங்கள மகா காளியம்மனின் 12 பெயர்கள்:


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)



ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ


இவைகளை பக்தி சிரத்தையுடன்,நமது பிரபஞ்ச அன்னையை நினைத்து தினமும் ஜபித்து வரவும்;

அடுத்த நிலைக்குச் செல்ல விரும்புவோர் ஒரு முறை எம்மை நேரில் சந்திக்கவும்;

No comments:

Post a Comment