Saturday, February 9, 2013

புற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்!!!



நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு போன்றவை மாசுபட்டுள்ளதால் பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்படுகின்றன.புற்றுநோயின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.கேரளாவில் காசர்கோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் எண்டோசல்பானை அதிகம் பயன்படுத்தியதால் புற்றுநோய் கடுமையாகப் பரவியது;இப்போது கேரளாவில் எண்டோசல்பான் தடை செய்யப்பட்டுள்ளது.தேசிய அளவில் இந்த விஷயத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து எண்டோசல்பானை உற்பத்தி செய்யக்கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்வு வலுத்துள்ளது.

இந்நிலையில் சைமரூபா கிளாகா(Saimarouba Glauca) இலைக்கஷாயத்தை தொடர்ந்து பருகி வந்தால் புற்றுநோய் தணிகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.தென் இந்தியாவில் குறிப்பாக கர்னாடகா மாநிலத்தில் சைமரூபா மரங்கள் பரவலாக உள்ளன.இதற்கு சொர்க்க விருட்சம்,லட்சுமி தரு என்ற பெயர்களும் உள்ளன.
கேரளாவைச் சேர்ந்த புற்றுநோயாளிகள் பலருக்கு சைமரூபா கஷாயத்தத பெங்களூருவைச் சேர்ந்த சுந்தர் ஜோஷி சாந்தா ஜோஷி தம்பதியினர் கொடுத்தனர்.இருவரும் வேளாண் விஞ்ஞானிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.இந்த கஷாயத்துக்காக இவர்கள் காசு வாங்குவதில்லை;சேவையாக செய்து வருகிறார்கள்.
சைமரூபா மரத்தை வளர்ப்பது கடினமானதல்ல;இதை மிகச் சுலபமாக வளர்க்க முடியும்.இந்த மரத்தை வீட்டுக்கொல்லையில் கூட வளர்க்கலாம்.இந்த விருட்சம் வீட்டில் இருந்தால் அது ஆரோக்கியக் காப்பீட்டுக்குச் சமம் ஆகும். என்று ஷ்யாம்சுந்தர் ஜோஷி கூறுகிறார்.இவரை080 23335813 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.சைமரூபாவில் ‘கோசினாய்ட்ஸ்’ என்ற நுண்சத்து உள்ளது. இதுதான் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ரத்தப் புற்றுநோய்க்கும் கூட இது அருமருந்தாகும்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கையை உதாரணமாகக் கொள்வதைப் போல ஓர் எடுத்துக்காட்டைப்பார்ப்போம்: கேரளாவில் திருவனந்தபுரம் வழுதைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ்.புற்றுநோய் முற்றிய நிலையில் வாழ்வு எப்போது முடியுமோ என்ற கவலையில் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்திருந்தனர்.இந்நிலையில் ஷ்யாம் சுந்தர் ஜோஷி,சாந்தா ஜோஷி தம்பதியர் அளித்துவரும் சைமரூபா கஷாயத்தைப் பற்றி ராமதாஸீம் அவரது மனைவி ஷைலாவும் கேள்விப்பட்டனர்.சைமரூபா கஷாயத்தைத் தொடர்ந்து பருகியதையடுத்து ராம்தாசின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படத்துவங்கியது.அவரது எடை படிப்படியாக அதிகரித்தது.இப்போது அவர் ஏறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார்.
கீமோதெரபி மற்றும் அலோபதி மருந்துகளும் புற்றுநோயின் பாதிப்பைத் தணிக்க உதவின என்ற போதிலும் சைமரூபா கஷாயத்தின்பங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது என்று ராமதாசும் ஷைலாவும் ஒருமித்தக் குரலில் கூறுகின்றனர்.
புற்றுநோயாளிகளுக்கு சைமரூபா கஷாயம் வரப்பிரசாதம்.இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு,மத்திய அமெரிக்கா.(அப்போ பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இதுக்கு பேடண்ட் வாங்கிடும்;விலையை சில லட்ச ரூபாய்களில் நிர்ணயித்துவிடும்;வேறு யாரும் இதிலிருந்துமருந்து தயாரிக்க முடியாத அளவுக்கு லாபி செய்துவிடும்)இது ஒருவகை எண்ணெய் மரம்.இந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிற உணவு எண்ணெயை சமையலுக்குப்பயன்படுத்தலாம். தொடர்ந்து இதை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்பாடு அடைகிறது என்று பயன்படுத்தியவர்கள் கூறுகிறார்கள்.
நன்றி:விஜயபாரதம்,தேசிய வார இதழ்,பக்கம்11, 15.2.13
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment