Tuesday, June 26, 2012

நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய ஆன்மீகக்கடமை!!!



இந்த பிட் நோட்டீஸை ஒரு பென் டிரைவ்வில் பிரதி எடுத்துக்கொள்ளுங்கள்.அருகில் இருக்கும் அச்சகம்/மினி ஆப்செட்டிற்குச் சென்று குறைந்தது 1000 பிரதிகள் உங்களின் சொந்தச் செலவில் அச்சடியுங்கள்.அதை உங்களின் நட்பு வட்டத்தில் யாரெல்லாம் ஓரளவாவது ஆன்மீக சிந்தனை,அறச்சிந்தனை,பிறருக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கும்,யாரெல்லாம் உங்களின் வார்த்தையை மதிக்கிறார்களோ அவர்களுக்கும் ஒருபிரதி கொடுத்து, இதை ட்ரைப்பண்ணிப்பாரு என்று மட்டும் சொல்லுங்கள்.


ஒவ்வொரு பிரதோஷ நாளன்றும் அருகிலிருக்கும் சிவாலயத்துக்குச் செல்லுங்கள்.அங்கே மீதி பிரதிகளை கூச்சப்படாமல் விநியோகியுங்கள்.உங்களிடம் போதுமான அளவுக்கு பணவசதி இருந்தால் 1000 பிரதி என்பதை 5000 அல்லது 10000 பிரதிகள் அச்சடித்து பிரதோஷ வேளையில் அருகிலிருக்கும் சிவாலயத்தில் விநியோகம் செய்யுங்கள்.


இப்படி 31.12.2012 வரை மாதம் ஒருநாள் வரும் பிரதோஷ நாளிலும்,சனிப்பிரதோஷ நாட்களிலும் இவ்வாறு விடாமல் செய்துவந்தாலே போதுமானது.சனிப்பிரதோஷ நாட்களின் பட்டியல்:13.10.2012,    27.10.2012,   23.2.2012, 9.3.2012
ஒருவேளை விநியோகம் செய்ய இயலாத வேலை அல்லது தொழிலில் தாங்கள் இருந்தால்,தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:இந்த பிட் நோட்டீஸை 1000 அல்லது 2000 அல்லது 5000 என்ற எண்ணிக்கையில் உங்களுக்கு வசதிப்படும் விதத்தில் அச்சடித்து ஆன்மீகக்கடல் அறக்கட்டளைக்கு (தொடர்பு  கொள்ளவும்:=aanmigakkadal@gmail.com)அனுப்பலாம்.இந்த வருடம் முழுவதும் தமிழ்நாட்டில் பல சிவாலயங்களில் இந்த நோட்டீஸ் விநியோகம் செய்துகொண்டே இருக்கிறோம்.


(இதுவரை நமது ஆன்மீகக்கடல் வாசக வாசகிகளால் விநியோகம் செய்யப்பட்டுள்ள ஊர்கள்:ஸ்ரீவில்லிபுத்தூர்,இராஜபாளையம்,சங்கரன்கோவில்,திருநெல்வேலி,தென்காசி,குற்றாலம்,நாகர்கோவில்,சதுரகிரி,மதுரை,மானாமதுரை,காளையர்கோவில்,இராமேஸ்வரம்,கோயம்புத்தூர்,திருச்சி,மணப்பாறை,நாமக்கல்,ஈரோடு,கரூர்,திருஅண்ணாமலை,கும்பகோணம்,கோவில்பாளையம்(கோயம்புத்தூர்),விழுப்புரம்,சென்னையில் பாம்பன்சுவாமிகள் ஆலயம்,மயிலாப்பூர்,பள்ளிக்கரணை,ஓசூர்,நாகப்பட்டிணம் மற்றும் சில வெளிநாடுகள்.ஆனால்,இது போதாது.)



இவ்வாறு நீங்கள் செய்வதால்,உங்களின் இந்த ஆன்மீகத் தொண்டினால் குறைந்தது 100 தமிழர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குவார்கள்;அவர்களின் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தினால்,உங்களது அனைத்து மன அழுத்தங்களும் தீர்ந்துவிடும்;உங்களின் தீராத பிரச்னைகள் தீர திடீரென வழிகிடைக்கும்;உங்களின் வாழ்க்கை இனி மென்மையாகவும்,வசந்தமாகவும்,செல்வச் செழிப்பாகவும் மாறும் என்பது எனது அனுபவ உண்மை!!!



இதை ஜபிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய நீண்டகால மற்றும் நியாயமாக ஏக்கங்கள் தீரத் துவங்கும்;உடல்நலம் மேம்படும்;உங்கள் ஊரில் இருக்கும் அனைத்து கோவில்களின் தெய்வீக சக்தியும் அதிகரிக்கும்;இதனால்,உங்கள் ஊருக்கு வர இருக்கும் நோய்,ஆபத்து,பிரச்னைகள் வராமலேயே போய்விடும்;




தமிழ்நாட்டில் மட்டுமல்ல;உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஒரு கோடிபேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கிவிட்டால்,இந்தியாவை சுரண்டிக்கொண்டிருக்கும் மேல்நாட்டு அழிவு சக்திகள் வலுவிழந்துபோய்விடும்.தமிழினத்துக்கு இருக்கும் அத்தனைப்பிரச்னைகளும் விலகிஓடி விடும்.
தோள்கொடுக்க வருகிறீர்களா?
ஓம்சிவசிவஓம் பரவ உதவத் தயாரா?
நமது  குடும்ப அமைப்பைக் காப்பாற்ற வேண்டாமா?
நமது நாட்டை நமது தர்மத்தை பாதுகாக்க வேண்டாமா?
ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;பிறரும் ஜபிக்கத் தூண்டுவோம்!!!
வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுவோர் ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்கச் செய்வோம்!!!
ஓம்சிவசிவஓம்      ஓம்ஹரிஹரிஓம்

No comments:

Post a Comment